எய்ட்ஸ் பாதித்த சிறுவரை கட்டி அணைத்த… சுகாதாரத் துறை அமைச்சராக…!

Published:

sushma aids children - 2026சுஷ்மா சுவராஜ் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர் இவர் 67 வயதில் செவ்வாய்க்கிழமை நேற்று இரவு மாரடைப்பால் காலமானார்!

சுஷ்மா சுவராஜ் கடந்த வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றினார்.

1999-2004ஆம் காலகட்டத்தில் அவர் சுகாதாரத்துறையில் அமைச்சராக பணியாற்றிய போது பல நல்ல திட்டங்களை கொண்டு வந்திருந்தார்! மருத்துவ சிகிச்சைகள் குறித்த விழிப்பு உணர்வையும் ஏற்படுத்தினார்.

குறிப்பாக 2003 செப்டம்பர் 29 இல் கேரளாவுக்கு சென்றிருந்த சுஷ்மா ஸ்வராஜ் அங்கே ஹெச்ஐவி.,யினால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த சிறுவரைக் கட்டியணைத்து எச்ஐவி எய்ட்ஸ் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தினார்!

sushmaswaraj1 - 2026எச்ஐவி பாதிக்கப்பட்டவர்களை புறக்கணிக்கக் கூடாது என்றும் தொடுவதாலோ கட்டியணைப்பதாலோ ஹெச்.ஐ.வி.,யின் தாக்கம் பரவாது என்பது குறித்தும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திய அவரது செயல் அப்போது பெரும் பாராட்டைப் பெற்றது!

கேரளத்தில் பென்சி என்ற சிறுமியையும், பென்சன் சாண்டி என்ற சிறுவனையும் அவர் கட்டியணைத்தபடி விழிப்பு உணர்வு ஊட்டிய புகைப்படம் அப்போது பெரும் வரவேற்பைப் பெற்ற ஒன்று!

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

ஏழை எளியவர்களுக்கு அதிகம் உதவி புரியும் எளிமையான மத்திய அமைச்சராக சுஷ்மா ஸ்வராஜ் அப்போது எல்லோராலும் புகழப்பட்டார்!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img