பாகிஸ்தானிய உள்ளங்களை வென்ற மகத்தான பாரதத் தலைவர்!

sushmaswaraj memories - 2026
2018ல் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு தூதரக உதவியின் மூலம் அழைத்து வரப் பட்ட 29 வயதுப் பெண் உஸ்மா அஹ்மத் சுஷ்மா ஸ்வராஜை கட்டிப் பிடித்து தனது கண்ணீரை வெளிப்படுத்திய போது…

சாமானியர்களின் அரசியல் தலைவர் சுஷ்மா சுவராஜ்! பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக விசா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு சுஷ்மா சுவராஜ் பெரும் தாய் உள்ளத்துடனும் மனிதநேயத்துடனும் அணுகி இருக்கிறார்!

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். அதற்கு சற்று முன்னதாக காஷ்மீர் குறித்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது நன்றியை டிவிட்டர் பதிவில் தெரிவித்த சுஷ்மா சுவராஜ் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவை திரும்ப பெற்றதற்காக நன்றி பிரதமரே மிக்க நன்றி என் வாழ்நாள் முழுதும் இதற்காகத் தான் காத்திருந்தேன் என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்

இதுதான் அவர் சமூகவலைதளத்தில் கடைசியாக பதிவிட்ட மகிழ்ச்சி கருத்து!

கிட்டத்தட்ட 13 மில்லியன் பின்தொடர்பவர்களால் டிவிட்டரில் பெரிதும் விரும்பப்படும் பெண் அரசியல்வாதியாக சுஷ்மா சுவராஜ் திகழ்ந்தார்! உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்தார்! இந்நிலையில் தனது 67வது வயதில் நேற்று அவர் காலமானார்!

ட்விட்டரில் எடக்குமடக்காக கேள்வி கேட்பவர்கள் அல்லது கருத்து தெரிவிப்பவர்கள் பலர் உண்டு. சமூக வலைதளத்தில் அவ்வாறு வேண்டுமென்றே தங்கள் அழுக்கடைந்த மனத்தை வெளிப்படுத்து பவர்களுக்கு சுவாரசியமான பதிலடி கொடுத்திருக்கிறார் சுஷ்மா ஸ்வராஜ்!

ALSO READ:  திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

அண்மையில் ஜூலை 20-ஆம் தேதி தில்லி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஷீலா தீக்ஷித் மறைந்தபோது சுஷ்மா சுவராஜ் அவருக்கு இரங்கல் தெரிவித்து ஒரு ட்விட்டர் பதிவு செய்திருந்தார்! அதில் அரசியலில் எதிர் துருவத்தில் இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகச் சிறந்த நண்பர்களாக திகழ்ந்தவர் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் ஷீலா தீட்சித்தின் நல்ல மனதையும் அவரது தனிப்பட்ட பண்பையும் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.

sushmaswaraj - 2026ட்விட்டரில் அவரை கிண்டல் செய்வதாக எண்ணி ஒருவர் சுஷ்மா சுவராஜிடம், ‘நீங்கள் ஷீலா தீக்ஷித் பற்றி குறிப்பிடுவது போல் உங்களையும் ஒரு நாள் உங்களது மரணத்துக்குப்பின் பலரும் குறிப்பிடுவார்கள்’ என்று கருத்து பதிவு செய்திருந்தார். அதற்கு பதில் அளித்த சுஷ்மா சுவராஜ் உங்களது இத்தகைய எண்ணத்துக்கும் எதிர்பார்ப்புக்கும் என்னுடைய நன்றி என்று பதிலளித்திருந்தார்.

நாடுகளுக்கிடையில் மனஸ்தாபங்கள் பிரச்சினைகள் என்று பல இருந்தாலும் சுஷ்மா சுவராஜ் பாகிஸ்தானியர்களுக்கு தாயுள்ளத்துடன் கருணை காட்டி வந்தார். குறிப்பாக பாகிஸ்தானிலிருந்து மெடிக்கல் விசா  கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு அவர்களுக்கான மருத்துவ உதவிகளும் கிடைக்க உறுதுணையாக இருந்தார் சுஷ்மா சுவராஜ்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

பாகிஸ்தான் நாட்டில் தவித்துக் கொண்டிருக்கும் இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வர விரும்பும் பாகிஸ்தானியருக்கு  தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்துள்ளார்! இத்தனைக்கும் அவர்கள் தூதரகத்தின் மூலம் அதிகம் கெஞ்சி கொண்டிருக்க வேண்டிய அல்லது மன்றாட வேண்டிய நிலை இல்லாமல் இருந்தது. காரணம் தனது ட்விட்டர் பதிவிலேயே அவர்களை இனங்கண்டு அவர்களுக்கான உதவிகளுக்கு ஏற்பாடு செய்தார் சுஷ்மா சுவராஜ்.

இதனால் பாகிஸ்தானில் பெரும்பாலான மக்களின் உள்ளங்களைக் கவர்ந்த பெண்மணியாக விளங்கினார்! டிவிட்டர் பதிவிலேயே சுஷ்மாவுக்கு வேண்டுகோள் விடுக்கும் பாகிஸ்தானியர்களுக்கு உடனடியாக உதவி செய்ய எமர்ஜென்சி மெடிக்கல் விசா வழங்குவதற்கு ஏற்பாடு செய்து உள்ளார். 2017இல் பாகிஸ்தானிய சிறுமி ஷெரின் சிராஜ் இதய அறுவை சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வருவதற்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு உடனடியாக உதவி புரிந்தார்! இது அப்போது பெரும்பாலானவர்களால் இதயபூர்வமாக பாராட்டப்பட்டது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories