பாகிஸ்தானிய உள்ளங்களை வென்ற மகத்தான பாரதத் தலைவர்!

sushmaswaraj memories - 2026
2018ல் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு தூதரக உதவியின் மூலம் அழைத்து வரப் பட்ட 29 வயதுப் பெண் உஸ்மா அஹ்மத் சுஷ்மா ஸ்வராஜை கட்டிப் பிடித்து தனது கண்ணீரை வெளிப்படுத்திய போது…

சாமானியர்களின் அரசியல் தலைவர் சுஷ்மா சுவராஜ்! பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக விசா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு சுஷ்மா சுவராஜ் பெரும் தாய் உள்ளத்துடனும் மனிதநேயத்துடனும் அணுகி இருக்கிறார்!

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். அதற்கு சற்று முன்னதாக காஷ்மீர் குறித்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது நன்றியை டிவிட்டர் பதிவில் தெரிவித்த சுஷ்மா சுவராஜ் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவை திரும்ப பெற்றதற்காக நன்றி பிரதமரே மிக்க நன்றி என் வாழ்நாள் முழுதும் இதற்காகத் தான் காத்திருந்தேன் என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்

இதுதான் அவர் சமூகவலைதளத்தில் கடைசியாக பதிவிட்ட மகிழ்ச்சி கருத்து!

கிட்டத்தட்ட 13 மில்லியன் பின்தொடர்பவர்களால் டிவிட்டரில் பெரிதும் விரும்பப்படும் பெண் அரசியல்வாதியாக சுஷ்மா சுவராஜ் திகழ்ந்தார்! உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்தார்! இந்நிலையில் தனது 67வது வயதில் நேற்று அவர் காலமானார்!

ட்விட்டரில் எடக்குமடக்காக கேள்வி கேட்பவர்கள் அல்லது கருத்து தெரிவிப்பவர்கள் பலர் உண்டு. சமூக வலைதளத்தில் அவ்வாறு வேண்டுமென்றே தங்கள் அழுக்கடைந்த மனத்தை வெளிப்படுத்து பவர்களுக்கு சுவாரசியமான பதிலடி கொடுத்திருக்கிறார் சுஷ்மா ஸ்வராஜ்!

ALSO READ:  தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

அண்மையில் ஜூலை 20-ஆம் தேதி தில்லி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஷீலா தீக்ஷித் மறைந்தபோது சுஷ்மா சுவராஜ் அவருக்கு இரங்கல் தெரிவித்து ஒரு ட்விட்டர் பதிவு செய்திருந்தார்! அதில் அரசியலில் எதிர் துருவத்தில் இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகச் சிறந்த நண்பர்களாக திகழ்ந்தவர் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் ஷீலா தீட்சித்தின் நல்ல மனதையும் அவரது தனிப்பட்ட பண்பையும் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.

sushmaswaraj - 2026ட்விட்டரில் அவரை கிண்டல் செய்வதாக எண்ணி ஒருவர் சுஷ்மா சுவராஜிடம், ‘நீங்கள் ஷீலா தீக்ஷித் பற்றி குறிப்பிடுவது போல் உங்களையும் ஒரு நாள் உங்களது மரணத்துக்குப்பின் பலரும் குறிப்பிடுவார்கள்’ என்று கருத்து பதிவு செய்திருந்தார். அதற்கு பதில் அளித்த சுஷ்மா சுவராஜ் உங்களது இத்தகைய எண்ணத்துக்கும் எதிர்பார்ப்புக்கும் என்னுடைய நன்றி என்று பதிலளித்திருந்தார்.

நாடுகளுக்கிடையில் மனஸ்தாபங்கள் பிரச்சினைகள் என்று பல இருந்தாலும் சுஷ்மா சுவராஜ் பாகிஸ்தானியர்களுக்கு தாயுள்ளத்துடன் கருணை காட்டி வந்தார். குறிப்பாக பாகிஸ்தானிலிருந்து மெடிக்கல் விசா  கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு அவர்களுக்கான மருத்துவ உதவிகளும் கிடைக்க உறுதுணையாக இருந்தார் சுஷ்மா சுவராஜ்.

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

பாகிஸ்தான் நாட்டில் தவித்துக் கொண்டிருக்கும் இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வர விரும்பும் பாகிஸ்தானியருக்கு  தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்துள்ளார்! இத்தனைக்கும் அவர்கள் தூதரகத்தின் மூலம் அதிகம் கெஞ்சி கொண்டிருக்க வேண்டிய அல்லது மன்றாட வேண்டிய நிலை இல்லாமல் இருந்தது. காரணம் தனது ட்விட்டர் பதிவிலேயே அவர்களை இனங்கண்டு அவர்களுக்கான உதவிகளுக்கு ஏற்பாடு செய்தார் சுஷ்மா சுவராஜ்.

இதனால் பாகிஸ்தானில் பெரும்பாலான மக்களின் உள்ளங்களைக் கவர்ந்த பெண்மணியாக விளங்கினார்! டிவிட்டர் பதிவிலேயே சுஷ்மாவுக்கு வேண்டுகோள் விடுக்கும் பாகிஸ்தானியர்களுக்கு உடனடியாக உதவி செய்ய எமர்ஜென்சி மெடிக்கல் விசா வழங்குவதற்கு ஏற்பாடு செய்து உள்ளார். 2017இல் பாகிஸ்தானிய சிறுமி ஷெரின் சிராஜ் இதய அறுவை சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வருவதற்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு உடனடியாக உதவி புரிந்தார்! இது அப்போது பெரும்பாலானவர்களால் இதயபூர்வமாக பாராட்டப்பட்டது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

ஏ.வி.ஆர் ஸ்வாமியின் மறைவு ஒரு பொற்காலத்தின் முடிவைக் குறிக்கிறது. தில்லை திருச்சித்ரகூடமான சிதம்பரம் திருத்தலத்திற்கு அவர் ஆற்றிய கைங்கரியங்களும் அவரது நூல்களும் என்றும் நிலைத்து நின்று நல்வழிப்படுத்தும்.

குமரியில் மட்டும் ஏன் இப்படி ‘பகீர்’ புரளிகள்?

குமரி மாவட்டத்தின் சில கடற்கரை கிராமங்களில் கடற்கரை மணலில் மோனோசைட் போன்ற கனிமங்கள் இயற்கையாகவே கலந்துள்ளன. இந்தக் கனிமங்கள் இருப்பதால் அந்தப் பகுதியில் புற்றுநோய் அதிகமாக வருகிறது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், அந்தக் குறிப்பிட்ட காரணம் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட முடிவாக நிரூபிக்கப்படவில்லை.

மதமாற்ற விவாதம் … மீண்டும்!

மத்திய உள்துறை அமைச்சரகம் கடந்த வாரம் வெளிநாட்டு நன்கொடை (FCRA) விதிகளில் சில திருத்தங்களை அறிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெறும் என் ஜி ஓ க்களின் ( அரசு சாரா அமைப்புகள்) செயல்பாடுகளை வரைமுறை படுத்துவது அதன் நோக்கம்.

Entertainment News

Popular Categories