கவுன்சிலர் குடும்பமே கோடியில புரளுது… பிரதமர் மோடி குடும்பம் எப்படி இருக்கு பாரு…!

Published:

06 June20 Modi - 2026

ஊழல் எதிர்ப்பு, தூய்மை இந்தியா, பொதுவாழ்வில் நேர்மை உள்ளிட்ட பல நேர்மறையான அரசியல் கருத்துகளை முன்வைத்து இயங்கிக் கொண்டிருக்கும் பிரதமர் மோடியின் தனிப்பட்ட வாழ்க்கையை பலரும் சமூக வலைத்தளங்களில் இப்படி பகிர்ந்து வருகிறார்கள்.

பிரதமர் மோடியின் பிறந்த நாளான நேற்று, பலரது மொபைல்களிலும் வாட்ஸ் அப்களில் இந்தச் செய்தி பகிரப் பட்டிருந்தது. வைரலாகப் பரவிய அந்தச் செய்தி இதுதான்…

தமிழகத்தை ஆண்டவர்களில் *காமராஜரைத் தவிர ஏனையோரின் சொத்துகளைக் கண்டு வாயை பிளக்கும்* தமிழன் எல்லாம் இதையும் படிங்க ப்ளீஸ்..

மோடி ஜீ யை ஏன்? நேசிக்கிறோம்,ஆதரிக்கிறோம், தெரிந்து கொள்ளுங்கள் …

சோமபாய் மோடி (75) பப்ளிக் ஹெல்த் டிபார்ட்மெண்டில் இன்ஸ்பெக்டராக இருந்து ரிடையரானவர். தற்போது வசிப்பது வாத்நகரில் இருக்கும் ஒரு சிறிய வீட்டில்.

அம்ருத்பாய் மோடி (72) 2005 இல் ஒரு பாக்டரியில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். கடைசியாக அவர் வாங்கிய சம்பளம் ரூ10,000/-. தற்போது அஹமதாபாதில் ஒரு சிறிய ப்ளாட்டில் மகனுடனும், மருமகளுடனும் வசித்து வருகிறார்.

ப்ரஹ்லாத் மோடி (64) ஒரு சிறிய கடை ஒன்றை நடத்துகிறார். தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்துகிறார்.

ALSO READ:  குமரியில் மட்டும் ஏன் இப்படி ‘பகீர்’ புரளிகள்?

பங்கஜ் மோடி (58) குஜராத் மாநிலத்தின் இன்பர்மேஷன் டிபார்ட்மெண்டில் அதிகாரியாக வேலை செய்கிறார். இருப்பவர்களுள் நல்ல நிலையில் இருக்கும் இவருக்கு காந்திநகரில் ஒரு 3 படுக்கை அறை கொண்ட ப்ளாட் சொந்தம். அங்கேயே வசிக்கிறார்.

மேலே குறிப்பிட்டிருப்பவர்கள் யார் என்று தெரிகிறதா….? ஆம்…. இவர்கள் அனைவரும் நம் பாரதப் பிரதமர் மோடிஜியின் உடன் பிறந்தவர்கள். இவர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்களுக்கு சொந்தமாக கார் கிடையாது. இவர்கள் யாருமே விமானத்தில் பயணித்ததும் கிடையாது

எல்லோருமே மத்தியதர வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் இவர்களின் சகோதரர் குஜராத்தின் முதலமைச்சராக 12 வருடங்கள் இருந்தவர். பாரதத்தின் பிரதமராக 4வருடங்களாக இருந்து வருகிறார்.

இப்போது மற்ற மோடிகளையும்… அதாவது நம் பிரதமரின் பங்காளிகளையும் பற்றி பார்க்கலாம்.

போகிலால் மோடி (67) ஒரு மளிகைக் கடை நடத்துகிறார்.

அரவிந்த் மோடி (64) பழைய பொருட்களை விற்கும் கடை ஒன்றை (சாதாரண நிலையில்) நடத்துகிறார்.

பரத் பாய் மோடி (55) ஒரு பெட்ரோல் பங்கில் அட்டெண்டராக வேலை செய்கிறார். இவரின் மாத வருமானம் ரூ6000/- இவர் மனைவி காய்கறி, பழங்கள், சிறிய உணவுப் பொட்டலங்கள் விற்று மாதம் ரூ3000/- சம்பாதிக்கிறார்.

ALSO READ:  கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

அஷோக் மோடி (51) இவர் ஒரு சிறிய உணவுக் கடை (8×4) மற்றும் பட்டம் முதலியவைகளை விற்கும் கடை வைத்திருக்கிறார். அது ஒரு தகரத்தால் ஆன கடை. மாத வருமானம் ரூ5000/- இவர் மனைவி ஒரு உணவு விடுதியில் உதவியாளராக இருந்து கொண்டு ரூ3000/- சம்பளமாக ஈட்டுகிறார்.

மேலே கூறிய இந்த நான்கு பேருமே நம் பிரதமரின் தந்தை தாமோதர மோடியின் சகோதரர் நரசிம்ஹதாஸ் மோடியின் மகன்கள்.

மோடிஜியின் தாயார் ஒரு சிறிய 10 க்கு 8 அறையில் வசிக்கிறார். பாங்க், கோவில், மருத்துவமனைகளுக்கு ஆட்டோவில் பயணிக்கிறார்.

அண்மையில் உடல் நிலை சரியில்லாதபோது 108 ஆம்புலன்ஸ்சில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார்.

மோடி 12 வருடம் முதல்வர் பதவி வகித்தபோதும் அவரின் தாயார் தன் வீட்டிலேயே வசித்து வந்தார், மோடிஜீ பிரதமரான பிறகும் பிரதமர் மாளிகைக்கு ஓரிரு முறை சென்று வந்ததோடு சரி.

இப்படிப்பட்ட ஒரு பிரதமரைப் பற்றிதான் நம் தமிழ்நாட்டில் பொய்யான செய்திகளை திட்டமிட்டு பரப்பப்படுகிறது.

நாட்டின் நலனில் அக்கறை உள்ள நண்பர்களே! ஒரு கணம் சிந்திப்பீர்!
நம் தமிழகத்தின் திமுக, அதிமுக அரசியல் வியாதிகள், முதல்வர் முதல் உள்ளாட்சி பிரதிநிதிகள் வரை பலர் பதவிக்கு வரும் முன்னரும் வந்த பின்னரும் அடைந்த வசதிகள் உங்களுக்கு தெரியும்,

ALSO READ:  ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு தட்டில் பிரதமர் மோடியையும்! மறுதட்டில் நம் தமிழக அரசியல்வாதிகள் அனைவரையும் வைத்தாலும் நேர்மையில், ஒழுக்கத்தில் மோடிக்கு ஈடாக மாட்டார்கள் அதனால்தான் அவரை நேசிக்கிறோம்!

நேர்மையான அரசியல்வாதி வேண்டும் என்கிறீர்கள், ஆனால் அப்படி ஒருவர் வந்தால் அவரின் ஒவ்வொரு செயலிலும் குற்றம் காண்கிறீர்கள், பிறகு எப்படி நேர்மையானோர் அரசியலுக்கு வருவார்கள்.

மோடிஜயை விமர்சிக்கும் நண்பர்களே… மோடிஜயை விட தேசபக்தி,நேர்மை,செயல் திறன் கொண்ட ஒருவரை காட்டுங்கள் பிறகு குற்றம் சொல்லுங்க!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img