கவுன்சிலர் குடும்பமே கோடியில புரளுது… பிரதமர் மோடி குடும்பம் எப்படி இருக்கு பாரு…!

06 June20 Modi - 2026

ஊழல் எதிர்ப்பு, தூய்மை இந்தியா, பொதுவாழ்வில் நேர்மை உள்ளிட்ட பல நேர்மறையான அரசியல் கருத்துகளை முன்வைத்து இயங்கிக் கொண்டிருக்கும் பிரதமர் மோடியின் தனிப்பட்ட வாழ்க்கையை பலரும் சமூக வலைத்தளங்களில் இப்படி பகிர்ந்து வருகிறார்கள்.

பிரதமர் மோடியின் பிறந்த நாளான நேற்று, பலரது மொபைல்களிலும் வாட்ஸ் அப்களில் இந்தச் செய்தி பகிரப் பட்டிருந்தது. வைரலாகப் பரவிய அந்தச் செய்தி இதுதான்…

தமிழகத்தை ஆண்டவர்களில் *காமராஜரைத் தவிர ஏனையோரின் சொத்துகளைக் கண்டு வாயை பிளக்கும்* தமிழன் எல்லாம் இதையும் படிங்க ப்ளீஸ்..

மோடி ஜீ யை ஏன்? நேசிக்கிறோம்,ஆதரிக்கிறோம், தெரிந்து கொள்ளுங்கள் …

சோமபாய் மோடி (75) பப்ளிக் ஹெல்த் டிபார்ட்மெண்டில் இன்ஸ்பெக்டராக இருந்து ரிடையரானவர். தற்போது வசிப்பது வாத்நகரில் இருக்கும் ஒரு சிறிய வீட்டில்.

அம்ருத்பாய் மோடி (72) 2005 இல் ஒரு பாக்டரியில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். கடைசியாக அவர் வாங்கிய சம்பளம் ரூ10,000/-. தற்போது அஹமதாபாதில் ஒரு சிறிய ப்ளாட்டில் மகனுடனும், மருமகளுடனும் வசித்து வருகிறார்.

ப்ரஹ்லாத் மோடி (64) ஒரு சிறிய கடை ஒன்றை நடத்துகிறார். தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்துகிறார்.

ALSO READ:  ஒரு விருது அறிவிப்பு; சரித்திரம் கண்டிராத சர்ச்சை!

பங்கஜ் மோடி (58) குஜராத் மாநிலத்தின் இன்பர்மேஷன் டிபார்ட்மெண்டில் அதிகாரியாக வேலை செய்கிறார். இருப்பவர்களுள் நல்ல நிலையில் இருக்கும் இவருக்கு காந்திநகரில் ஒரு 3 படுக்கை அறை கொண்ட ப்ளாட் சொந்தம். அங்கேயே வசிக்கிறார்.

மேலே குறிப்பிட்டிருப்பவர்கள் யார் என்று தெரிகிறதா….? ஆம்…. இவர்கள் அனைவரும் நம் பாரதப் பிரதமர் மோடிஜியின் உடன் பிறந்தவர்கள். இவர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்களுக்கு சொந்தமாக கார் கிடையாது. இவர்கள் யாருமே விமானத்தில் பயணித்ததும் கிடையாது

எல்லோருமே மத்தியதர வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் இவர்களின் சகோதரர் குஜராத்தின் முதலமைச்சராக 12 வருடங்கள் இருந்தவர். பாரதத்தின் பிரதமராக 4வருடங்களாக இருந்து வருகிறார்.

இப்போது மற்ற மோடிகளையும்… அதாவது நம் பிரதமரின் பங்காளிகளையும் பற்றி பார்க்கலாம்.

போகிலால் மோடி (67) ஒரு மளிகைக் கடை நடத்துகிறார்.

அரவிந்த் மோடி (64) பழைய பொருட்களை விற்கும் கடை ஒன்றை (சாதாரண நிலையில்) நடத்துகிறார்.

பரத் பாய் மோடி (55) ஒரு பெட்ரோல் பங்கில் அட்டெண்டராக வேலை செய்கிறார். இவரின் மாத வருமானம் ரூ6000/- இவர் மனைவி காய்கறி, பழங்கள், சிறிய உணவுப் பொட்டலங்கள் விற்று மாதம் ரூ3000/- சம்பாதிக்கிறார்.

ALSO READ:  வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்... தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

அஷோக் மோடி (51) இவர் ஒரு சிறிய உணவுக் கடை (8×4) மற்றும் பட்டம் முதலியவைகளை விற்கும் கடை வைத்திருக்கிறார். அது ஒரு தகரத்தால் ஆன கடை. மாத வருமானம் ரூ5000/- இவர் மனைவி ஒரு உணவு விடுதியில் உதவியாளராக இருந்து கொண்டு ரூ3000/- சம்பளமாக ஈட்டுகிறார்.

மேலே கூறிய இந்த நான்கு பேருமே நம் பிரதமரின் தந்தை தாமோதர மோடியின் சகோதரர் நரசிம்ஹதாஸ் மோடியின் மகன்கள்.

மோடிஜியின் தாயார் ஒரு சிறிய 10 க்கு 8 அறையில் வசிக்கிறார். பாங்க், கோவில், மருத்துவமனைகளுக்கு ஆட்டோவில் பயணிக்கிறார்.

அண்மையில் உடல் நிலை சரியில்லாதபோது 108 ஆம்புலன்ஸ்சில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார்.

மோடி 12 வருடம் முதல்வர் பதவி வகித்தபோதும் அவரின் தாயார் தன் வீட்டிலேயே வசித்து வந்தார், மோடிஜீ பிரதமரான பிறகும் பிரதமர் மாளிகைக்கு ஓரிரு முறை சென்று வந்ததோடு சரி.

இப்படிப்பட்ட ஒரு பிரதமரைப் பற்றிதான் நம் தமிழ்நாட்டில் பொய்யான செய்திகளை திட்டமிட்டு பரப்பப்படுகிறது.

நாட்டின் நலனில் அக்கறை உள்ள நண்பர்களே! ஒரு கணம் சிந்திப்பீர்!
நம் தமிழகத்தின் திமுக, அதிமுக அரசியல் வியாதிகள், முதல்வர் முதல் உள்ளாட்சி பிரதிநிதிகள் வரை பலர் பதவிக்கு வரும் முன்னரும் வந்த பின்னரும் அடைந்த வசதிகள் உங்களுக்கு தெரியும்,

ALSO READ:  வந்தே மாதரம்; சர்ச்சைக்கு உரியவர்கள் சர்ச்சை ஆக்குகிறார்கள்!

ஒரு தட்டில் பிரதமர் மோடியையும்! மறுதட்டில் நம் தமிழக அரசியல்வாதிகள் அனைவரையும் வைத்தாலும் நேர்மையில், ஒழுக்கத்தில் மோடிக்கு ஈடாக மாட்டார்கள் அதனால்தான் அவரை நேசிக்கிறோம்!

நேர்மையான அரசியல்வாதி வேண்டும் என்கிறீர்கள், ஆனால் அப்படி ஒருவர் வந்தால் அவரின் ஒவ்வொரு செயலிலும் குற்றம் காண்கிறீர்கள், பிறகு எப்படி நேர்மையானோர் அரசியலுக்கு வருவார்கள்.

மோடிஜயை விமர்சிக்கும் நண்பர்களே… மோடிஜயை விட தேசபக்தி,நேர்மை,செயல் திறன் கொண்ட ஒருவரை காட்டுங்கள் பிறகு குற்றம் சொல்லுங்க!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories