December 6, 2025, 4:03 AM
24.9 C
Chennai

சுயவிளம்பரத்துக்காக வரும் பெண்களுக்கு எங்களால் பாதுகாப்பு வழங்க இயலாது: கேரள போலீஸ் அதிரடி அறிவிப்பு!

sabarimalai ladies grop - 2025

பத்தனம்திட்டா,: ‘சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண்களுக்கு எங்களால் பாதுகாப்பு வழங்க முடியாது’ என கேரள போலீஸ் அதிரடியாகத் தெரிவித்துள்ளது.

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற தலமான சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ‘அனைத்து வயதுப் பெண்களை அனுமதிக்க வேண்டும்’ என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு கேரளா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களது எதிர்ப்பை மீறி, அரசு பாதுகாப்பை வழங்குவதாகவும், சபரிமலைக்கு வரலாம் என்றும் பெண்களுக்கு அழைப்பு விடுத்தது. அதை அடுத்து, ஐயப்பன் கோவிலுக்குச் சில அமைப்புகளைச் சேர்ந்த பெண்கள் முயன்றனர். அவர்களுக்கு, கேரள அரசு, போலீஸ் பாதுகாப்பு வழங்கியது. ஆனால் பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்தப் பெண்கள் பாதி வழியில் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதை அடுத்து, ‘சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண்களுக்கு இனி பாதுகாப்பு வழங்க முடியாது’ என கேரள போலீசார் தெரிவித்துள்ளனர்.
கேரள டி.ஜி.பி., லோக்நாத் பெஹ்ராவிடம், போலீசார் அளித்த அறிக்கையில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் விளம்பரத்துக்காகவே வருகின்றனர். இந்தப் பெண்களை கோவிலுக்குள் அனுமதிப்பதால், விபரீத விளைவுகள் ஏற்படக்கூடும். எனவே, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories