December 6, 2025, 8:12 AM
23.8 C
Chennai

சபரிமலைக்கு தமிழகத்தில் இருந்து சென்ற பெண்கள் 24 பேர்! சொல்கிறது கேரள அரசு!

sabarimalai ladies in mosques - 2025

சபரிமலை சென்றுவந்த இரு பெண்களுக்கும் தங்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அவர்களுக்கு பதிலளிக்குமாறு கூறியதன் பேரில் கேரள அரசு அளித்த பதிலில், சபரிமலையில் 51 பெண்கள் தரிசனம் செய்ததாக கூறியுள்ளது.

அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, தீர்ப்புக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கேரளாவில் போராட்டங்கள் நடந்தன.

இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி பிந்து, கனகதுர்கா எனும் கம்யூனிஸ பின்னணியைச் சேர்ந்த இரு பெண்கள், மாநில அரசின் துணையுடன் சபரிமலைக்குச் சென்று வந்தனர். இது குறித்த வீடியோ வெளியான நிலையில் மேலும் போராட்டங்கள் வலுத்தன. வன்முறை வெடித்தது. பதற்றமான சூழல் எழுந்ததால், சபரிமலைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்ட அந்த இரு பெண்களும் போலீசாராசல் பாதுகாக்கப்பட்டனர்.

தொடர்ந்து, பதற்றம் தணிந்த நிலையில், தங்களது வீடுகளுக்கு இருவரும் திரும்பினர். இந்நிலையில், வீடு திரும்பிய கனகதுர்காவை அவரது மாமியார் தாக்கியதாக அவர் போலீஸில் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி கனகதுர்காவும், பிந்துவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டது குறிப்பிடத் தக்கது.

இதை அடுத்து இன்று விசாரித்த நீதிமன்றம், கனகதுர்கா, பிந்துவுக்கு போதிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று கேரள காவல்துறைக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கின் மீதான விசாரணையின் போது, இதுவரை 51 இளம் பெண்கள் சபரிமலைக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளதாகவும், அவர்களில் 24 பேர் தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் என்றும் கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தகவல் கூறியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories