மேற்கு வங்கத்தில் ஒரு நள்ளிரவு நாடகம்! சிபிஐ Vs போலீஸ்! மமதை மம்தா!

சிபிஐ அதிகாரிகளை தடுத்து நிறுத்திய கொல்கத்தா போலீஸ் – மேற்குவங்கத்தில் தொடரும் யுத்தம்

kolkatta police1 - 2026

மேற்குவங்க அரசு 2013 ஆண்டு சாரதா சிட் நிதி மோசடியை விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. இந்தக் குழுவிற்கு ராஜீவ் குமார் தலைமை வகித்தார். இந்தச் சிறப்பு விசாரணை குழு சாரதா மற்றும் ரோஸ் வேலி சிட் நிதி மோசடியை விசாரிக்க அமைக்கப்பட்டது.

இக்குழுவிற்கு தலைமை வகித்த ராஜீவ் குமார், இந்த மோசடி விசாரணையை மிகவும் தாமதப்படுத்தியதாகவும் இந்த மோசடியை நீர்த்துபோகச் செய்யும் விதமாக செயல்பட்டதாகவும் கூறி மத்திய புலனாய்வு அமைப்பு இவருக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் ராஜீவ் குமார் மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதனால் ராஜீவ் குமார்  மத்திய புலனாய்வு அமைப்பின் ‘உடனடி கைது’ நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்று தகவல்கள் தெரியவந்தன. அத்துடன், கொல்கத்தாவில் நடந்த தேர்தல் ஆணையத்தின் கூட்டத்திலும் ராஜீவ் குமார் கலந்து கொள்ளவில்லை. இதனால் சிட் நிதி மோசடியை நீர்த்துப்போகச் செய்த கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் தற்போது தலைமறைவாக உள்ளார் என சிபிஐ தெரிவித்தது.

சாரதா ஊழல் முறைகேடுகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரை தப்பிக்கவிட்ட புகாரில், கொல்கத்தா காவல் ஆணையரை கைது செய்ய சிபிஐ முயற்சி மேற்கொண்டது.

இதற்காக, தெற்கு கொல்கத்தாவில் உள்ள காவல் ஆணையரின் வீட்டிற்கு அவரை சிபிஐ அதிகாரிகள் தேடிச் சென்றனர். ஆனால், சிபிஐ அதிகாரிகளை தடுத்து நிறுத்தி, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர் காவல்துறையினர். 

மாநில அரசின் அனுமதியின்றி ஆணையரை கைது செய்ய அனுமதிக்க முடியாது என முதல்வர் மம்தா ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மம்தா உத்தரவை அடுத்து, காவல் துறையினரும் சிபிஐ அதிகாரிகளைத் தடுத்து திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. 

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

இதை அடுத்து கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டிற்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி சென்றுள்ளார். அங்கு, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அவர் ஆலோசனை செய்து வருகிறார். மேற்கு வங்க டிஜிபி, கொல்கத்தா மேயர் உள்ளிட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். 

kolkatta police2 - 2026

சி பி ஐ vs காவல்துறை...
நள்ளிரவு நாடகத்தில் திருப்புமுனைகள்

  • கொல்கத்தாவில் மாநகர காவல் ஆணையர் வீட்டிற்கு வந்த சிபிஐ அதிகாரிகள் குழுவை போலீஸ் தடுத்து நிறுத்தியது.
  • நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க சிபிஐ திட்டம்.
  • சிபிஐ குழுவை காவல்நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர்.
  • கொல்கத்தாவில் 5 சி.பி.ஐ. அதிகாரிகளை கைது செய்து மேற்குவங்க போலீஸ் அதிரடி.
  • சி.பி.ஐ. இணை இயக்குனரையும் கைது செய்ய மேற்கு வங்க போலீஸ் தீவிரம்.
  • கொல்கத்தாவில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தையே தன்கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது கொல்கத்தா போலீஸ்.
  • முதல்வர் மம்தா பானர்ஜி ஆணையர் வீட்டிற்கு வருகை.
  • கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரின் வீட்டில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, டிஜிபி ஆலோசனை.
  • கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் வீட்டிற்கு அருகே ஏராளமான போலீசார் குவிப்பு.
  • கொல்கத்தா மேயர் ஃபிர்ஹாத் ஹாக்கிம் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரின் வீட்டிற்கு வருகை.
  • கூட்டாட்சி அமைப்பை பாதுகாக்க தர்ணா போராட்டம் – மம்தா அதிரடி அறிவிப்பு.
  • பிரதமர் மோடியின் அரசு மேற்கு வங்கத்தில் ஆராஜகத்தை பரப்புகிறது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் பிரதமரும் அமித்ஷாவும் ஈடுபட்டுள்ளனர்.
  • உலகத்திலேயே சிறந்த போலீஸ் அதிகாரி கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜீவ் குமார்தான்.
  • நிதி நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது.
  • மேற்குவங்கத்தை அழிக்க பாஜக சித்ரவதை செய்கிறது – கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டில் ஆலோசனை நடத்திய பின்னர் முதல் மம்தா பேட்டி.
  • மேற்கு வங்க மாநில காவல் ஆணையரை கைது செய்வதற்காக அவரது வீட்டிற்கு வந்த சிபிஐ அதிகாரிகளின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து, மெட்ரோ சானல் பகுதியில் மம்தா பானர்ஜி தர்ணா.
ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

இதனிடையே கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் வீட்டிற்கு வந்த சிபிஐ அதிகாரிகள் குழுவை போலீஸ் தடுத்து நிறுத்திய விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நாளை காலை முறையிட சிபிஐ முடிவு செய்துள்ளது.

கொல்கத்தாவில் நடக்கும் விவகாரங்கள் கண்டனத்திற்குரியவை; அரசியலமைப்பை பாதுகாக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் பக்கம் துணை நிற்போம் – சந்திரபாபு நாயுடு ட்வீட்

பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர்கள் திங்கட் கிழமை தலைமைத் தேர்தல் ஆணையரை சந்தித்து, தங்கள் கட்சியின் பேரணிக்கு அனுமதி தராதது தொடர்பாக மேற்கு வங்க அரசு மீது புகார் அளிக்கவுள்ளனர்

கொல்கத்தாவில் மாநகர காவல் ஆணையர் வீட்டிற்கு வந்த சிபிஐ அதிகாரிகள் குழுவை போலீஸ் தடுத்து நிறுத்திய விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் பேசினேன்; பிரதமர் மோடி, அமித்ஷாவின் நடவடிக்கைகள் வினோதமாகவும் ஜனநாயகத்திற்கு எதிராகவும் உள்ளது – அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட்

கூட்டாட்சி தத்துவம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான மம்தா பானர்ஜியின் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு! பாஜக ஆட்சியில், அரசியல் சாசன அமைப்புகளின் தன்னாட்சி பறிபோவதாகவும் ஸ்டாலின் குற்றச்சாட்டு!

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு, ராகுல்காந்தி, ஓமர் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், சந்திரபாபு நாயுடு, மாயாவதி, சரத்பவார், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தொலைபேசி மூலம் ஆதரவு தெரிவித்தனர்.

சிபிஐ அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நாளை உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாக இடைக்கால சிபிஐ இயக்குநர் நாகேஸ்வர ராவ் அறிவிப்பு
5 சிபிஐ அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மேற்குவங்க ஆளுநரை சந்திக்க நேரம் கோரியது சிபிஐ

சாரதா சீட் பண்டு ஊழலை ஆவணங்களுடன் விசாரிக்க மத்திய சிபிஐ அதிகாரிகளை மாநில போலீசைக்கொண்டு சிறைபிடிப்பு. இது மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் சர்வாதிகார போக்கை காண்பிக்கிறது – தமிழக பாஜக தலைவர் தமிழிசை விமர்சனம்

* கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை 13 நாட்களாக தேடிவருகிறோம்.அவர் ஆதாரங்களை அழித்ததற்கான ஆதாரங்களுடன் அவரை விசாரிக்கவே அவரது வீட்டிற்கு வந்தோம். காவல்துறை எங்களை கைது செய்தது. பணி செய்ய விடாமல் தடுக்கும் மேற்குவங்க அரசை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளோம் – சிபிஐ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories