செபக் கூட்டங்களில் இருந்தும் ஓதுதல்களில் இருந்தும் நாட்டைக் காக்க… மோடி மீண்டும் பிரதமர் ஆக… வைரலாகும் ‘சங்கல்பம்’!

Published:

modi in muktinath 1 - 2026

வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் நம்மால் இயன்ற தெய்வீக வேண்டுதல்களைச் செய்ய வேண்டும்.

காரணம், இஸ்லாமியர்கள் இறைவனை நோக்கி வேண்டுதல்களை வைக்கும் ஓதுதல்கள் பிரார்த்தனைகளில், மோடி தோற்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள். கிறிஸ்துவர்கள் ஞாயிற்றுக்கிழமை வாரக் கூடுதல்களில் மோடி தோற்க வேண்டும் என்று தவறாமல் செபிக்கிறார்கள். பாதிரிகள் பகிரங்கமாக மேடைகளில் சொல்கிறார்கள். இது தொடர்பான பல்வேறு வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

நாட்டின் ஒற்றுமைக்கும் நலனுக்கு எதிராக செயல்படும் இத்தகையவர்கள், இந்த நாட்டை அவர்களின் மதப் பரவலாக்கத்துக்கும் மதமாற்றத்துக்கும் உட்படுத்தி, நாட்டை பிளவுபடுத்தி, அவரவர் மத ஆளுகையின் கீழ் இருக்கும் சிறு சிறு நாடுகளாக மாற்றிவிட வெகு காலமாக முயன்று வருகிறார்கள். இவர்களுக்கு அரசியல்வாதிகளும் பரந்த மனம் படைத்த இந்துக்களும் தான் ஒத்தூதிக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்தால், இந்த நாட்டின் மக்களாகிய நாம் நம்பிக்கை வைத்திருக்கும் நீதிமன்றங்களும் நமக்கு நம்பிக்கை துரோகம் செய்து இவர்களின் சார்பாகவே இயங்கி வருகின்றன.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

இந்த நிலையில், நாம் நம் கடைசி புகலிடமான இறைவனை நோக்கி வேண்டுகோள் வைப்பதைத் தவிர வேறு வழியில்லை. நாம் எல்லோரும் மேற்கொள்ளும் கூட்டுப் பிரார்த்தனைகளும், வேண்டுதல்களும்தான் நமக்குக் கை கொடுக்கும்.

modi2 - 2026

நாம் பூஜை, ஹோமம், ஜபம், பாராயணம், கோயில்களில் விளக்கு ஏற்றி பிரார்த்தனை, கோயில்களில் விசேஷங்களுக்காகவும் திருவிழாக்களுக்காகக் கூடும் போதும், இதனை ஒரு முக்கியக் கடமையாகச் செய்ய வேண்டும். நம் பிரார்த்தனை வழிமுறைகளில் ஏதோ ஒன்றைச் செய்ய வேண்டும்!

நம் ஒருங்கிணைந்த சங்கல்ப சக்தியும் தெய்வத்தின் அருளும் ஒரே புள்ளியில் இணைய வேண்டும்! இதற்காக நம் மனது குவிந்து பிரார்த்தனைகளை வெளிப்படையாகச் சொல்லி ஆதரவு கொடுப்போம்.

இயன்றவர்கள், இந்த சங்கல்பத்தைச் சொல்லி நாம் செய்ய நினைத்துள்ளதைச் செய்யத் தொடங்கலாம். இந்த வருடம் முழுவதும் நாம் வைதீகமாகவோ, தெய்வீகமாகவோ எதைச் செய்தாலும், அதில், “நரேந்திர மோடியே மீண்டும் பிரதமர் ஆக வேண்டும்” என்ற வாக்கியத்தையும் சேர்த்துச் சொல்லி சங்கல்பத்தை முன்வைப்போம்.

Modi with shankarcharya - 2026

திருவள்ளூரைச் சேர்ந்த பேராசிரியர் வேணுகோபாலன் என்ற கோபி, இது குறித்து ஒரு சங்கல்பத்தை தொகுத்து அளித்துள்ளார். அந்த சங்கல்பம்…

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

அனூராதா நட்சத்ரே விருச்சிக ராசௌ ஜாதானாம் ஶ்ரீ நரேந்திர தாமோதர தாஸ் மோதீ மஹாபாகானாம் அஸ்மாகம் ப்ரதான மந்த்ரிணாம்
உபாத்த – துரித க்ஷய த்வாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம்,
ஆயுர் ஆரோக்ய – வீர்ய – விஜய – த்ருடகாத்ரா – வாக்படுதா – ஸித்த்யர்தம்
ஸர்வாரிஷ்ட நிவ்ருத்யர்தம்,
சகல கார்ய சித்யர்தம் ,
ஈச்வர அனுக்ரஹ த்வாரா நிஷ்கண்டக தர்மானுகூல ராஜ்யபரண யோக சித்யர்தம் ,
ச விசேஷேண ஆகாமீ வர்ஷே வர்த்திஷ்யமாண மத சங்க்ரஹே பூர்ண பஹுமத ஸித்தி த்வாரா ஸுபார்ஷதைஸ் ஸஹ புனஹ பஞ்ச வர்ஷம் நிர்பாதம் அனுதர்மம் ராஜ்யபரண யோக சித்த்யர்தம்,
புனச்ச அஸ்மின் பாரத தேசே வர்தமானானாம்
ஸர்வேஷாம் ஜநானாம் விசேஷேண ஸத்புத்தி ப்ராப்த்யர்தம்,
தமோகுண நிவ்ருத்த்யர்தம் ,
அஸ்ய பாரத தேசஸ்ய அப்யுதய ப்ராப்த்யர்தம் ,
பஹுய சஹ ப்ராப்த்யர்தம் ,
விச்வ குருத்வ யோக ப்ராப்த்யர்தம்,
அஸ்ய ராஷ்ட்ரஸ்ய அந்தர் பஹிஸ்திதானாம் அஹிதானாம் த்வேஷிணாம் தர்மத்விஷாம் ச அஶேஷ உந்மூலன ஸித்த்யர்தம் ….

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

– என்று சொல்லி, பூஜைகளை அர்ச்சனைகளை விளக்கு ஏற்றி வழிபடுதலை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார் திருவள்ளூரைச் சேர்ந்த ஸ்ரீவேணுகோபாலன் என்பவர்.

இந்த சங்கல்ப விவரங்கள் இப்போது வாட்ஸ்அப் குழுக்களிலும் பேஸ்புக் உள்ளிட்டவற்றிலும் சுற்றிச் சுற்றி வருகின்றன.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img