இங்கிதம் பழகுவோம்(18) -தட்டிக் கொடுத்தாலே போதும்!

18. ingitham pazhaguvom - 2026

நின்று நிதானமாக மழை பெய்துகொண்டிருந்தது. அவசரமாக ஒரு அலுவலக வேலையாக வெளியே செல்ல வேண்டிய சூழல். மழையில் என்னுடைய  காரை எடுக்க வேண்டாம் என கால் டாக்ஸி புக் செய்தேன். மழை காரணமாக கட்டணம் அதிகம் என்றாலும் சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்தார்.

     வழக்கம்போல பேச்சுக்கொடுத்தேன். மழையில் காரை ஓட்டுவதே சிரமாக இருக்க, விடாமல் நான் தொடங்கி வைத்த பேச்சை தொடர்ந்தார்.

     2015 வருட மழையில் வீடு, தொழில் இரண்டையும் இழந்து தற்சமயம் கல்டாக்ஸி டிரைவராக பணிபுரிகிறார். சொந்த கார். காருக்கான மாதாந்திர  கடன் கட்டணம், டீசல் போக தினமும் 1000 கிடைக்குமாம். திருமணம் ஆகி ஐந்து வயதில் ஒரு குழந்தை. புரிந்துகொண்ட மனைவி.

     எந்த இடத்திலும் அவரது குரலில் சோகமோ, எதிர்மறை எண்ணங்களோ வெளிப்படவில்லை.

     மழை, அதன் தாக்கம் இப்படியே பேச்சு சென்று கொண்டிருந்தது. ‘அந்த மழைல நான் அடிபட்டப்பதான் என் நட்புகள் உறவுகளின் சுயநலத்த புரிந்துகொள்ள முடிஞ்சுது மேடம்… நான் எல்லாருக்கும் அப்பப்ப என்னால் ஆன உதவி செஞ்சிருக்கேன்… என்கிட்ட கடன் வாங்கினவங்க எல்லாரும் நான் வாங்கல… அப்பவே கொடுத்துட்டேன்… இப்பவே தந்துட்டேன்னு ஒரே பொய்களை அடுக்கினாங்க…  என்னோட இரும்புக்கடை தொழில்ல 10 இலட்சம் லாசாயிடுச்சு… என்ன பண்ணர்துனு தெரியாம இப்படி கார் ஓட்ட ஆரம்பிச்சுட்டேன்…’

ALSO READ:  பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

     ‘அப்படியா… நல்ல முடிவு பண்ணீங்க…’

     ‘என்ன படிச்சிருக்கீங்க…’

     ‘5-வதுதான் மேடம்… ஆனால் எனக்கு பிரெயின் ஜாஸ்தி மேடம்…’

     படிக்காவிட்டாலும் தனக்கு உலக அறிவும் அனுபவமும் அதிகம் என்பதை ‘பிரெயின் ஜாஸ்தி’ என சொன்ன அவரது வெகுளித்தனத்தை ரசித்தேன்.

     ‘அதனால்தான் கடன்தொல்லை அது இதுன்னு காரணத்தைச் சொல்லி தவறான முடிவை எடுக்காம உழைச்சு சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டீங்க… பிழைக்க ஆயிரம் வழி இருக்குன்னு நிரூபிச்சுட்டீங்க… நீங்க சொன்ன மாதிரி உங்களுக்கு பிரெயின் ஜாஸ்திதான்’ என்று அவருடைய பாஷையிலேயே அவருக்கு பதிலளித்தேன்.

     ‘யாரையும் நம்பக் கூடாது மேடம்… நாம நல்லா இருக்குற வரைக்கும்தான் மேடம் நட்பும், உறவும்… கொஞ்சம் சரிஞ்சிட்டோம்னா…’

     ‘சரிதான்..’

     ‘ஆனா ஒண்ணு மேடம், இப்ப எனக்கு 40 வயசு. இன்னும் 10 வருஷம் கழிச்சு இப்படி கீழே விழுந்திருந்தா எந்திருக்கிறதே கஷ்டமாகிப் போயிருக்கும்… இப்பவே விழுந்ததுனால கடனை கஷ்டப்பட்டு அடச்சு பழைய நிலைக்கு இன்னும் ஐந்தாறு வருஷத்துல எந்திருச்சுடுவேன்… கடவுள் புண்ணியத்துல நஷ்டமும் கஷ்டமும் என் கைகால் உடம்பு நல்லா இருக்கும்போதே ஏற்பட்டுடிச்சு…’

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

     அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் தன்னம்பிக்கை இழைந்தோடியது.

     இதற்குள் கார் ஒரு பள்ளத்தில் மாட்டிக்கொள்ள…  ‘கடவுளே, என்ன செலவு வைக்கப் போவுதோ…’ என சொன்னபடி ஏதேதோ முயற்சி செய்து காரை ஸ்டார்ட் செய்துவிட்டார்.

     நான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் கொடுக்க வேண்டிய கட்டணத்துக்கு மேல் சற்று அதிகமாக பணம் கொடுத்தேன்.

      ‘வேணாம் மேடம்…’ என்று அவர் தன் தொழில் தர்மத்தை நிலைநிறுத்த ‘பரவாயில்லை… வாங்கிக்கொள்ளுங்கள்… தவறில்லை’ என்று சொல்லி இறங்கினேன்.

     நாம் யாருக்கும் நேரடியாக உதவி செய்ய முடியாத நிலையில் இருந்தாலும், தன்னம்பிக்கையோடு வாழ்பவர்களை உற்சாகப்படுத்தினாலே அவர்கள் தங்களை தாங்களே உயர்த்திக்கொள்வார்கள்.

     வெளியில் நிதானமான மழை, மனதில் இதமான சுகம்!

(விகடகவி APP பத்திரிகையில் 27-12-2017 இதழில் வெளியான கட்டுரை)

– காம்கேர் கே. புவனேஸ்வரி

கட்டுரையாளர் குறித்து…

This image has an empty alt attribute; its file name is bhuvaneswari-compcare.jpg

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO

காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட்

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

ஐ.டி நிறுவன CEO, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர் என பல்முகம் கொண்ட இவர் M.Sc., Computer Science மற்றும் M.B.A பட்டங்கள் பெற்றவர். Compcare Software Private Limited என்ற சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தின் CEO & MD ஆக கடந்த 25 ஆண்டுகளாக  செயல்பட்டு வருகிறார். 100-க்கும் மேற்பட்ட தொழில் நுட்பம் மற்றும் வாழ்வியல் புத்தகங்கள் எழுதியுள்ள இவரது சாஃப்ட்வேர்  மற்றும் அனிமேஷன் தயாரிப்புகளும், தொழில்நுட்பப் புத்தகங்களும் பல பல்கலைக்கழகம் சார்ந்த கல்லூரிகளில் பாடத் திட்டமாக உள்ளன. For More Info.. http://compcarebhuvaneswari.com/
http://compcaresoftware.com/

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories