தட்டுல மீதம் வெச்சா ரூ.50 அபராதம்! ஃபுல்லா ஒரு கட்டு கட்டினா ரூ.10 பரிசு! விநோத ஹோட்டல்!

Published:

andhra hotel - 2026

மீதம் வைத்தால் அபராதம்: சாப்பிட்டால் வெகுமானம். இதுதான் ஹோட்டல் காரரின் டெக்னிக்.

தெலங்கானா மாநிலம் வாரங்கல்லில் உள்ள, ‘ஹனுமகொண்டா கோர்ட்’ நாற்கூடலி அருகில் ‘லிங்காகேதாரி’ என்பவர் ஃபுட் கோர்ட் நடத்துகிறார். இங்கு உணவை வீணடித்தால் அபராதம் கட்ட வேண்டும்.

இந்த உணவகத்திற்கு வருபவர்கள் 60 ரூபாய் செலுத்தி டோக்கன் வாங்கிக் கொள்ள வேண்டும். தட்டில் எந்த உணவு பதார்த்தத்தையும் வீணடிக்காமல் சாப்பிட்டால் பத்து ரூபாய் திரும்ப கொடுத்து விடுவார்கள்.

ஏதாவது உணவை தட்டில் மீதம் வைத்து தூர எறிந்து விட்டால் 50 ரூபாய் அபராதம் கட்டித் தீரவேண்டும்.

ஒரு காலத்தில் சாப்பாடு கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டாராம் இந்த உணவக உரிமையாளர் கேதாரி. மக்களுக்கு உணவின் மதிப்பு தெரிய வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு வழியை கடைப்பிடிப்பதாக கூறுகிறார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img