ரஜினி பத்தி பேசுறத இத்தோட நிறுத்திக்கணும்.. சீமான்..! இல்லீன்னா..? கராத்தே தியாகராஜன் எச்சரிக்கை!

karate thiyagarajan answer about join rajinikanth party - 2026

ரஜினி பற்றிப் பேசுவதை சீமான் இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் கராத்தே தியாகராஜன் சீமானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீமான் துவக்கத்தில் சினிமாவில் இயக்குனராக இருந்தார். அதனால் தான் இயக்கும் படங்களில் உள்ள கதையை நடிகர்களுக்குக் கூறும்போது, அப்படியே நடித்துக் காட்டுவார். ஆனால் அந்த நடிப்பு சரியாக வராததால், இயக்குவதிலேயே நடிப்பை வெளிப்படுத்தி வந்தார். இப்போது அதில் தேறிவிட்டதால், கதை சொல்ல ஆள் இன்றி, தான் இயக்கப் போகும் கதைகளின் கருவை வைத்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் ஒரு சினிமாக் கதையாக மேடை போட்டு தன் ரசிக விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு சொல்லி வருவதுடன் நடித்தும் காட்டி வருகிறார். அவரது மேடை நடிப்பில் காமெடி, குரோதம், கோபம், வீரம், ஸ்டண்ட், அரசியல் என எல்லாம் கலந்திருக்கும். இதனால் காசு கொடுத்து சினிமா பார்க்கும் வேலையை விட்டுவிட்டு, பலரும் இவரது கூட்டங்களுக்கு வந்து, இவர் சொல்லும் கதைகளைக் கேட்டே சினிமா பார்த்த உணர்வைப் பெற்று விசில் அடித்துச் செல்கின்றனர்.

ALSO READ:  ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

இந்நிலையில், தனது கதைகளை சூப்பர் ஸ்டாருக்குச் சொல்ல முடியாமல், ரஜினியை இயக்க இயலாமல் இலவு காத்த கிளியைப் போன்று இருந்த சீமானுக்கு நேற்று முளைத்த காளான்களின் இயக்கத்தில் எல்லாம் ரஜினி நடிப்பது மேலும் மேலும் ஏமாற்றத்தைத் தோற்றுவித்துள்ளது. இதனால் இப்போது ரஜினி குறித்து தினந்தோறும் ஒரு கதையைச் சொல்லி விசிலடிச்சான் குஞ்சு ரசிகர்களை திருப்திப் படுத்தி வருகிறார். இதற்கு ரஜினி ரசிகர்கள் இடையே கொந்தளிப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், அகவன்’ என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. படத்தின் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் தீவிர ரஜினி ரசிகர்! எனவே அரங்கம் முழுக்க ரஜினி ரசிகர்களாகவே நிறைந்திருந்தனர். இந்த விழாவில் ரஜினியின் பிரதான ரசிகர்களான ராகவா லாரன்ஸ், சின்னி ஜெயந்த், காங்கிரஸ் கட்சியின் கராத்தே தியாகராஜன், லொள்ளு சபா ஜீவா என பலர் கலந்து கொண்டு பேசினர்.

இந்த விழாவில் பேசிய கராத்தே தியாகரான, பாக்யராஜின் ‘தாவணிக் கனவுகள்’ படத்துக்கு ஸ்டன்ட் வடிவமைத்த குழுவில் நானும் இடம்பெற்றிருந்தேன். தமிழகத்துல சினிமாவையும் அரசியலையும் பிரித்துப் பார்க்க முடியாது. சினிமாவுல இருந்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், கலைஞர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்று பலர் வந்தாங்க. அதுபோல, அண்ணன் ரஜினிக்கும் வாய்ப்பு இருக்கு. அதுக்கு சினிமா உலகத்தினர் ஆதரவு கொடுக்கணும். இன்னும் நிறையப் பேர் போட்டியில் இருக்காங்க. ஆனால், சட்டமன்றத் தேர்தலில் ரஜினிக்கும் ஸ்டாலினுக்கும்தான் போட்டி இருக்கும். விழாக்களில் அரசியல் பேசக்கூடாது. ஆனாலும் சீமான் போன்றவர்கள் அண்ணன் ரஜினியைப் பற்றிப் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என எச்சரித்தார்.

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Topics

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

அஸ்ஸாமில் ஆர் எஸ் எஸ் கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அந்த அமைப்பின் ஆண்டறிக்கை கூறுகிறது. வித்யா பாரதி மூலமாக அந்த மாநிலத்தில் 121 ஆரம்ப பள்ளிகளும் 115 நடுநிலைப் பள்ளிகளும் 341 மேல்நிலைப் பள்ளிகளும் நடத்தப்படுகின்றன. சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் இதன்மூலம் பயன் பெறுகின்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

முன்பெல்லாம், அனேகமாக, எல்லோரும் பிரிவினை பேசுவார்கள். இப்போது வெகுவாக குறைந்துவிட்டது. பிரிவினைவாதத்தை எதிர்த்து பேசாமல் இருக்க காரணம் பிரிவினைவாதிகளிடம் இருக்கும் துப்பாக்கிதான். தேசியம், தேசபக்தி வளர்ந்து விட்டது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் யாரும் சீனாவுடனோ பங்களாதேஷுடனோ இணைவதை விரும்பவில்லை

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

மோடி அரசு வந்த பிறகு மக்கள் மாறி வருகிறார்கள். பக்கத்து நாட்டில் இருந்து சட்ட விரோதமாக குடியேறும் முஸ்லிம்கள் பிரச்சனை வளர்ந்து வருகிறது. சர்சுகளும் இப்போது அந்த பிரச்சினையை பேச தொடங்கியுள்ளன. தேசபக்தி வளர்த்து வருகிறது. இந்துத்துவம் வளர்ந்து வருகிறது மேகாலயாவில். இது தெளிவாகத் தெரிகிறது.

Entertainment News

Popular Categories