ஒரு கோடி பேருடன் ஒரே நேரத்தில்… உரையாடுகிறார் மோடி!

Published:

modi poorman - 2026

புது தில்லி: உலகின் மிகப் பெரும் விடியோ கான்பரன்சிங் முறையிலான உரையாடல் மூலம் வரும் 28 ஆம் தேதி பாஜக., ஆதரவாளர்களுடன் பிரதமர் மோடி கலந்தாலோசனை நடத்துகிறார் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பாஜக., ஆதரவாளர்களுடன் வரும் 28ஆம் தேதி 15 ஆயிரம் இடங்களில் இருந்து, ஒரு கோடிக்கும் அதிகமானவர்களுடன் காணொளிக் காட்சி முறையில் பிரதமர் நரேந்திர மோடி பேச உள்ளார்.

இந்தப் பேச்சு உலகிலேயே வீடியோ கான்பரன்ஸ் முறையில் நடத்தப்படும் மாபெரும் கலந்தாலோசனை நிகழ்வாக இருக்கும் என்று கூறினார் அமித் ஷா.

ஒரு கோடிக்கும் அதிகமான பாஜக., நிர்வாகிகள் இதற்காக மோடியுடன் பேச தயாராகி வருகின்றனர். மக்கள் தங்கள் கேள்விகளை ‘நமோ ஆப்’ மூலம் அல்லது #MeraBoothSabseMazboot என்ற ஹேஷ்டாக் போட்டு சமூக வலைத்தளங்களில் அனுப்பலாம் என்றார் அவர். வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் அறிவிக்கப் படவுள்ளதால், அதற்கு ஏற்ப பாஜக., தொண்டர்கள் தயாராகி வருவதாக அவர் கூறினார்.

Prime Minister Narendra Modi’s interaction with BJP workers and sympathisers on February 28 will be the world’s largest video conference, as he is expected to speak to over one crore people spread across 15,000 location, party president Amit Shah said Sunday. “On 28th Feb, PM Modi will interact with over 1 crore BJP karyakartas, volunteers & well wishers, spread across 15,000 locations, in what would be world’s largest video conference,” Shah said in a tweet.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img