திமுக., என்றாலே தில்லு முல்லு கட்சி…தான்! துரைமுருகனை ஒரு பிடி பிடித்து… அடித்துக் கூறும் பிரேமலதா!

premalatha - 2026

திமுக., என்றாலே தில்லு முல்லு கட்சி…தான் இதை.. அடித்துச் சொல்லுவேன் என்று பிரேமலதா ஆவேசமாகக் கூறினார்.

திமுக.,வின் துரைமுருகன் மற்றும் தேமுதிக.,வினருக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்னையை அடுத்து, தேமுதிக., குறித்து திமுக.,வினர் பரப்பும் அவதூறுகள் பற்றி  விளக்கம் அளித்தார் பிரேமலதா விஜயகாந்த்.

அப்போது அவர் காரசாரமாகப் பேசியதாவது…

தேமுதிக.,வை பழிவாங்குகிறது திமுக.,! கருணாநிதியை சந்திக்க அனுமதி தரவில்லை ஸ்டாலின்!

திமுக., அரசியல் ரீதியாக பழிவாங்குகிறது! அன்று விஜயகாந்தை சந்திக்க வந்த போது, ஸ்டாலின் உடல் நிலை மட்டும் விசாரிக்க வந்ததாக அவர்கள் சொன்னார்கள். ஆனால், நானோ, இரு தலைவர்கள் சந்திக்கும் போதும் அரசியல் பேசுவது சகஜம் என்று சொன்னேன்.

பிரேமலதா சொன்னதை நன்றாக கவனியுங்கள். அவர்கள் கூட்டணி பேசினார்கள் என்று நான் சொல்லவில்லை, அரசியல் பேசினார்கள் என்றுதான் சொன்னேன். வார்த்தையை தேர்ந்தெடுத்துப் பேசுவது எங்கள் வழக்கம்.

எது நாகரிகம், அநாகரிகம்.. என்பதை நீங்களே பேசுங்க.. வந்தார், அரசியலும் பேசினார் என்றுதான் சொன்னேன்

ஸ்டாலினுக்கு நான் பதில் சொல்கிறேன்! துரைமுருகன் பேசினது முற்றிலும் உளறல்!
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இவ்வளவு கீழ்த்தரமான அரசியல் செய்வார்களா என்பதை துரைமுருகனைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்…

தலைவர் தூங்கிக்கிட்டிருக்காரு தலைவர் தூங்றார் என்று துரைமுருகன் ஸ்டாலினையே கேவலப் படுத்துகிறார்! துரைமுருகன் மதியம் ஒரு மணிக்கு உக்காந்த இடத்தில் தூங்குவார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்!  தூக்கத்தில் பேசினார் என்று நினைக்கிறேன்!

தெரியாத ஆள் என்றால் வீட்டுக்குள் விட்டுடுவாரா! முதல்நாள் இருவரையும் குறித்து சொல்கிறார். மறுநாள் இவர்கள் யாரென்றே தெரியாது என்கிறார் துரைமுருகன்.

எம்ஜிஆர் அன்றே பதியவைத்தார்… திமுக., என்றாலே திருட்டுக் கட்சி என்றார்
கணக்கு கேட்டதால் தூக்கி எறிந்தார்கள் என்பதை பதிய வைத்தார். அது இன்றளவும் திமுக., குறித்த மக்களின் மனதில் இருக்கிறது. அதை மாற்ற முடியாது.

நியாயத்தை நேர்மையை தர்மத்தை தொலைத்த தில்லு முல்லு கட்சி திமுக., அவர்களின் அணுகுமுறை கண்டிக்கக் கூடியது அவமானம் தரத்தக்கது என்று பதிலளித்தார் பிரேமலதா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories