திமுக., என்றாலே தில்லு முல்லு கட்சி…தான்! துரைமுருகனை ஒரு பிடி பிடித்து… அடித்துக் கூறும் பிரேமலதா!

premalatha - 2026

திமுக., என்றாலே தில்லு முல்லு கட்சி…தான் இதை.. அடித்துச் சொல்லுவேன் என்று பிரேமலதா ஆவேசமாகக் கூறினார்.

திமுக.,வின் துரைமுருகன் மற்றும் தேமுதிக.,வினருக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்னையை அடுத்து, தேமுதிக., குறித்து திமுக.,வினர் பரப்பும் அவதூறுகள் பற்றி  விளக்கம் அளித்தார் பிரேமலதா விஜயகாந்த்.

அப்போது அவர் காரசாரமாகப் பேசியதாவது…

தேமுதிக.,வை பழிவாங்குகிறது திமுக.,! கருணாநிதியை சந்திக்க அனுமதி தரவில்லை ஸ்டாலின்!

திமுக., அரசியல் ரீதியாக பழிவாங்குகிறது! அன்று விஜயகாந்தை சந்திக்க வந்த போது, ஸ்டாலின் உடல் நிலை மட்டும் விசாரிக்க வந்ததாக அவர்கள் சொன்னார்கள். ஆனால், நானோ, இரு தலைவர்கள் சந்திக்கும் போதும் அரசியல் பேசுவது சகஜம் என்று சொன்னேன்.

பிரேமலதா சொன்னதை நன்றாக கவனியுங்கள். அவர்கள் கூட்டணி பேசினார்கள் என்று நான் சொல்லவில்லை, அரசியல் பேசினார்கள் என்றுதான் சொன்னேன். வார்த்தையை தேர்ந்தெடுத்துப் பேசுவது எங்கள் வழக்கம்.

எது நாகரிகம், அநாகரிகம்.. என்பதை நீங்களே பேசுங்க.. வந்தார், அரசியலும் பேசினார் என்றுதான் சொன்னேன்

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

ஸ்டாலினுக்கு நான் பதில் சொல்கிறேன்! துரைமுருகன் பேசினது முற்றிலும் உளறல்!
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இவ்வளவு கீழ்த்தரமான அரசியல் செய்வார்களா என்பதை துரைமுருகனைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்…

தலைவர் தூங்கிக்கிட்டிருக்காரு தலைவர் தூங்றார் என்று துரைமுருகன் ஸ்டாலினையே கேவலப் படுத்துகிறார்! துரைமுருகன் மதியம் ஒரு மணிக்கு உக்காந்த இடத்தில் தூங்குவார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்!  தூக்கத்தில் பேசினார் என்று நினைக்கிறேன்!

தெரியாத ஆள் என்றால் வீட்டுக்குள் விட்டுடுவாரா! முதல்நாள் இருவரையும் குறித்து சொல்கிறார். மறுநாள் இவர்கள் யாரென்றே தெரியாது என்கிறார் துரைமுருகன்.

எம்ஜிஆர் அன்றே பதியவைத்தார்… திமுக., என்றாலே திருட்டுக் கட்சி என்றார்
கணக்கு கேட்டதால் தூக்கி எறிந்தார்கள் என்பதை பதிய வைத்தார். அது இன்றளவும் திமுக., குறித்த மக்களின் மனதில் இருக்கிறது. அதை மாற்ற முடியாது.

நியாயத்தை நேர்மையை தர்மத்தை தொலைத்த தில்லு முல்லு கட்சி திமுக., அவர்களின் அணுகுமுறை கண்டிக்கக் கூடியது அவமானம் தரத்தக்கது என்று பதிலளித்தார் பிரேமலதா.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories