December 5, 2025, 3:16 PM
27.9 C
Chennai

தூத்துக்குடியில் கனிமொழிக்கு சிக்கலை ஏற்படுத்திய கீதா ஜீவன்! வைரலாகும் போன் கால்!

kanimozhi speech - 2025

திமுக எம்.எல்.ஏ கீதா ஜீவனின் தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கு எதிரான போன்கால் பிரச்சினையில் திமுகவும் கனிமொழியும் சிக்கலில் சிக்கியுள்ளனர்.

தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் , தூத்துக்குடி எம்.எல்.ஏவும் , முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன் , சைவ வெள்ளாளர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் பேசிய ஆடியோ டேப் விவகாரம் பூதாகரமாக வெடிக்க ஆரம்பித்துள்ளது.

அந்த போன் காலில், அவர் தேவேந்திர குல வேளாளர்கள், அவர்களை வேளாளர் சமூகமாகக் காட்டிக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். தமிழக அரசு இதைப் பரிசீலிக்க நான்கு உறுப்பினர்கள் கொண்ட கமிட்டியை நியமனம் செய்துள்ளதை எதிர்த்து , நீங்கள் பெட்டிஷன் தாக்கல் செய்யுங்கள் என்று தூண்டி விடும் விதமாகப் பேசியுள்ளார்!

அவர்கள் வேளாளர் சமூகம் என்று காட்டிக் கொள்ள விடாதீர்கள் என்றும், எனவே உங்கள் சமுதாயம் திமுகவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பேசுவதாக ஆடியோ டேப்பில் பதிவாகியுள்ளது.

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் உட்பிரிவுகளான தேவேந்திர குலத்தார், பள்ளர், கடயர், பன்னடி, களடி ஆகியோரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வைத்த கோரிக்கையைத் தான் , திமுக எம்.எல்.ஏ கீதா ஜீவன் , வெள்ளாளர் பட்டியலில் சேர்க்க முயற்சி நடப்பதாகவும் இதனால் இரு சமூகத்தினரிடையே கலவரத்தையும் விஷத்தையும் தூண்டும் விதமாக செயல்படுகிறார் என்றும் புதிய தமிழகம், இதனைக் கண்டித்து போஸ்டர் அடித்து எச்சரிக்கை செய்துள்ளது.

devendraposter - 2025

ஓட்டப்பிடாரம் தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் ஓட்டுக்கள் புதிய தமிழகம் கட்சி அதிமுக அணியில் இருப்பதால் அவர்களுக்கு சாதகமாக மாறும் என்பதால்தான் இத்தகைய தூண்டுதல் முயற்சி நடந்துள்ளதாக திமுகவினரே குற்றம் சாட்டுகின்றனர்.

geethajeevan - 2025கீதா ஜீவன் இதை வன்மையாக மறுத்தாலும், திமுகவின் நிர்வாகி மனோகர் ராஜ் என்பவர் கீதா ஜீவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி எஸ்பி முரளி ரம்பாவிடம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

மேலும் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சார்ந்த திமுக நிர்வாகிகளே, திமுக தலைவர் ஸ்டாலினிடம் புகார் மனுக்களை அளித்து வருகின்றனர்.

இதனால் கனிமொழி மிகுந்த எரிச்சல் அடைந்துள்ளார். தூத்துக்குடி தொகுதியில் போட்டிய வேண்டிய நிலையில், அச்சத்தில் உள்ளதாகவும் கூறப் படுகிறது.

தூத்துக்குடியை சேர்ந்த திமுக.,நிர்வாகி மனோஹர் ராஜ் என்பவர், தூத்துக்குடி மாவட்ட எஸ்பி., முரளி ரம்பா ராவிடம் ஒரு புகார் மனு கொடுத்திருக்கிறார். அதில், எஸ்சி எஸ்டி வன்கொடுமை சட்டத்தில் கீதாஜீவனி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருக்கிறார். அரசியல் லாபம் கருதி இரு சமூகங்களுக்கு இடையே வெறுப்பைத் தூண்டும் விதத்தில் செயல்படுவதாகக் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க கோருகிறார்.

கீதா ஜீவனின் தொலைபேசி உரையாடல்… ஒலிக்கோப்பு

2 COMMENTS

  1. ஸ்டெர்லைட் கலவரம் ஏற்படுத்திய கீதா ஜீவன் இப்போது, தி.மு.க. மூலம் ஜாதிக்கலவரத்தையும் தூண்டுகிறாரோ ?

  2. Out of the seven videos he did watch, six were videos of older adults having
    sex with minors. The seventh video was surveillance footage of underage girls in a bathroom.

    He says he recognized one man in the videos as a powerful person in media who “controlled MSNBC”>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories