ஒட்டுமொத்தமாக ரூ. 15 லட்சமா? மாதந்தோறும் ரூ.6 ஆயிரமா? சிந்திப்பீர் வாக்காளரே.. சிந்திப்பீர்!

Rahul Gandhi Narendra Modi - 2026

மாதம் 6 ஆயிரம் ரூபாய் வீதம் வருடத்துக்கு ரூ. 72 ஆயிரம் போட்டு, அடுத்து ஆட்சியில் உள்ள ஐந்து வருடங்களில் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கொடுக்க இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் கணிதப் புலிகள் நிதி அமைச்சக சிறுத்தைகள் கூறியுள்ளனர். .

இப்போதும் மோடி சொன்ன அந்த 15 லட்ச ரூபாய் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த இடத்தில் மோடியோ, நான் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் அப்படி போடுவதாக சொல்லவில்லை; கருப்புப் பணத்தை மீட்டால் இந்நேரம் ஒவ்வொருவர் வங்கியிலும் ரூ. 15 லட்சம் இருக்கும் அளவுக்கு ஒட்டுமொத்தமாக சுவிஸ் வங்கியில் இவர்கள் கொள்ளை அடித்து கருப்பு பணத்தை சேர்த்திருக்கிறார்கள் என்றுதான் சொன்னேன் என்கிறார்.

onrekalpakkanaledu copy - 2026

மோடிக்கு பதிலாக… இந்நேரம் கருணாநிதியாக இருந்திருந்தால்… என்ன சொல்வார்?!

அன்பார்ந்த மக்களே ஏழைகளின் சிரமங்களை நன்கு உணர்ந்து இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்தி அவர்களை இல்லாமைகளிலிருந்து வளமை மிக்கவர்களாக மாற்றுவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு வருகிறேன்..

ஆனால் இந்த காங்கிரசார் எல்லாவற்றையும் கெடுத்துக் கொண்டு வருகிறார்கள்! நான் ஸ்விஸ் வங்கியில் பேசினேன்… ஸ்விட்சர்லாந்து நாட்டுடன் கொடுமையான சிரமங்களை அனுபவித்து, நம் நாட்டின் ஏழைபாழைகள் படும் சிரமங்களைஎல்லாம் நான் அனுபவித்து, அந்த சிரமம் எப்படி என்பதை உணர்ந்துதான்  பல்வேறு ஒப்பந்தங்களை போட்டு சுவிட்சர்லாந்து வங்கியில் போடப்பட்டுள்ள கருப்பு பணத்தை எல்லாம் இங்கே கொண்டுவர வேண்டும் என்று எவ்வளவோ முயற்சி செய்தேன்

ஆனால் இந்த காங்கிரஸ்காரர்கள் தங்களது பணம் சுவிட்சர்லாந்து வங்கியில் இருப்பதை வெளியில் எக்காரணம் கொண்டும் யாரும் எடுத்துவிடக் கூடாது என்பதற்காக எவ்வளவு தடைகளையும் தாமதங்களையும் என்னைப் பற்றிய அவதூறு பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகிறார்கள்?!

இந்த முறை நான் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் எப்படியும் அவர்களது கருப்பு பணத்தை எல்லாம் மீட்டு .. இந்த நாட்டுக்குக் கொண்டு வந்து, உங்களது வங்கிக் கணக்கில் சேர்த்து விடுவேன்! டிஜிட்டல் இந்தியா தொழில்நுட்பம் இன்னொன்றையும் சாத்தியமாக்கி இருக்கிறது. இதற்காகவே தான் டிஜிட்டல் இந்தியா என்ற திட்டத்தையே தொடங்கினோம்… ஸ்விஸ் வங்கியில் உள்ள கறுப்புப் பணத்தை அப்படியே நேரடியாக இந்தியக் குடிமக்களின் வங்கிக் கணக்குகளில் டைரக்ட் டிரான்ஸ்பர் செய்து விடுவோம்.

மறு நாள் காலை நீங்கள் உங்கள் வங்கியில் போய் செக் செய்தால், அதில் ரூ. 15 லட்சம் இருக்கும். அதைப் பார்த்து நீங்கள் மயங்கிப் போய் அங்கேயே சரிந்துவிடுவீர்கள்.

அப்படி நான் ரூ. 15 லட்சத்தை சேர்த்து விட்டால் நான் சொன்ன வாக்கு சத்தியமாகிவிடும் என்பதற்காகவே காங்கிரசார் என்னை இந்தத் தேர்தலில் வீழ்த்துவதற்காக பாகிஸ்தானுடனும் முஸ்லிம்களுடன் இன்னும் கிறிஸ்துவ அமைப்புகளுடனும் கைகோர்த்து செயல்படுகிறார்கள்

ஆகவே இந்த முறை காங்கிரஸ்காரர்களுக்கு நீங்கள் ஓட்டு போட்டீர்களானால் … எதிர்க்கட்சிகளுக்கு நீங்கள் வாக்களித்தீர்களானால்… நான் உங்களுக்கு தருவதாக வாக்களித்த 15 லட்சம் உங்களுக்கு கிடைக்காமலேயே போய்விடும்! இதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்! நீங்கள் வாக்குச் சாவடிக்கு செல்லும் முன்னால், ஒட்டுமொத்தமாக ரூ. 15 லட்சமா? அல்லது மாதந்தோறும் ரூ. 6 ஆயிரம் போதுமா என்பதை சிந்தித்து முடிவு செய்யுங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories