வெடிக்காத நிலையில் ஏராளமான டெட்டனேட்டர்கள்! இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஏனிந்த வெறியாட்டம்?!

srilanka churcharmy - 2026

ஏசு உயிர்த்தெழுந்து வந்த நாள் என்று கிறிஸ்துவர்கள் உலகெங்கும் கொண்டாடும் ஈஸ்டர் தினமான ஞாயிற்றுக் கிழமை நேற்று முக்கிய சர்ச்சுகள், நட்சத்திர ஓட்டல்கள் உட்பட 8 இடங்களில் அடுத்தடுத்து தொடர் குண்டுகள் வெடித்தன. இதில், சுமார் 300 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

குண்டுவெடிப்புகள் தொடர்பாக சிலரை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கோரமான சம்பவத்தை அடுத்து, நாடு முழுவதும், காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

வதந்திகள் மற்றும் பீதிகளைப் பரப்புவதைத் தடை செய்யும் நோக்கில், இணையதள சேவைகள், சமூக இணையதங்கள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொழும்பு பண்டாரநாயக சர்வதேச விமான நிலையம் அருகே பதுக்கி வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட வெடிகுண்டை செயலிழக்கச் செய்ததாக இலங்கை போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதை அடுத்து, வேறு வெடிகுண்டுகள் ஏதும் பதுக்கப்பட்டுள்ளதா என இலங்கை முழுவதும் தீவிர சோதனை நடந்து வருகிறது.

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

இந்நிலையில் கொழும்பு பேருந்து நிலையத்தில் இன்று 87 டெட்டேனேட்டர்கள் குச்சிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதனைக் கைப்பற்றிய போலீசார் அவற்றை செயல் இழக்கச் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, இன்றும் கொழும்புவில் சர்ச்சு ஒன்றின் அருகே நிறுத்தப் பட்டிருந்த வேனில் ஒரு குண்டு வெடித்தது. இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தகவல் வெளியானது.

இந்த குண்டுவெடிப்புகளில் உள்ளூர் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான நேஷனல் தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories