ரூ.349 விலையில் பிஎஸ்என்எல். பிராட்பேண்ட் வசதி…..!

BSNL OFF 1 - 2026
ஜூலை 1ஆம் தேதி முதல் ரூ.349 விலையில் பிராட்பேண்ட் வசதி மற்றும் மூன்றுவிதமான சலுகைகள்; பி.எஸ்.என்.எல். அதிரடி அறிவிப்பு……!

பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மிகக்குறைந்த விலையில், பிராட்பேண்ட் சலுகைகளை வழங்க இருக்கிறது. மேலும் தனது வாடிக்கையாளர்களுக்கு மூன்று புதிய சலுகைகளை அறிவிக்க இருக்கிறது.

அதன்படி பிராட்பேண்ட் சேவையில் புதிதாக அறிவிக்கப்பட இருக்கும் சலுகைகளில் பயனர்களுக்கு அதிகபட்சம் தினமும் 3 ஜி.பி. டேட்டா சுமார் 8Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது.

ரூ. 349 மற்றும் ரூ. 399 பிராட்பேண்ட் சலுகைகளில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படும் நிலையில், ரூ. 499 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

மூன்று புதிய சலுகைகளும் அந்தமான் மற்றும் நிகோபார் தவிர இந்தியா முழுக்க அனைத்து பகுதிகளிலும் வழங்கப்பட இருக்கின்றன.

பி.எஸ்.என்.எல். அறிவித்திருக்கும் மூன்று சலுகைகளும் ஜூலை 1 ஆம் தேதி முதல் வழங்கப்பட இருக்கின்றன.

முன்னதாக பி.எஸ்.என்.எல். தனது வாடிக்கையாளர்களுக்கு சூப்பர்ஸ்டார் 300 பிராட்பேண்ட் சலுகையை அறிவித்தது. இந்த சலுகையில் பயனர்களுக்கு ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா இலவசமாக வழங்கப்பட்டது.

புதிய சலுகைகளில் விலை குறைவாக கிடைக்கும் ரூ. 349 சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா 8Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா அளவை கடந்ததும் டேட்டா வேகம் 1Mbps வேகத்திற்கு மாற்றப்படும். டேட்டா மட்டுமின்றி வாடிக்கையாளர்களுக்கு நாடு முழுக்க பி.எஸ்.என்.எல். நெட்வொர்க்கில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை வழங்கப்படுகிறது.

மற்ற நெட்வொர்க்களுக்கு அன்லிமிட்டெட் அழைப்புகள் இரவு 10.30 மணி முதல் காலை 6.00 மணி வரை வழங்கப்படுகிறது.

ரூ. 399 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா 8Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. அதன்பின் டேட்டா வேகம் 1Mbps ஆக குறைக்கப்படுகிறது. எனினும், இந்த சலுகையில் நாடு முழுக்க அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை வழங்கப்படுகிறது.

பி.எஸ்.என்.எல். ரூ. 499 பிராட்பேண்ட் சலுகையில் 8Mbps வேகத்தில் தினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

தினசரி டேட்டா அளவை கடந்ததும் டேட்டா வேகம் 1Mbps ஆக குறைக்கப்படும். இந்த சலுகையிலும் அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை வழங்கப்படுகிறது.

மூன்று சலுகைகளில் பயனர்கள் எதை தேர்வு செய்தாலும், 1 ஜி.பி. மெமரியுடன் ஒரு மின்னஞ்சல் முகவரி இலவசமாக பெறலாம்.

புதிய சலுகைகள் பி.எஸ்.என்.எல். அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. இவை ஜூலை 1 ஆம் தேதி முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

Entertainment News

Popular Categories