சர்க்கரை நோயை அடியோடு கட்டுப்படுத்த சூடு நீரில் 7 வில்வ இலைகள்….!

vivaeli - 2026இது வில்வம் அல்லது பில், வுட் ஆப்பிள் அல்லது பில்வா தாவரம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

இது இந்தியாவில் பரவலாக காணப்படும் தாவரம் ஆகும். இது இந்தியாவின் புனிதமான தாவரமாக உள்ளது.

இதன் மருத்துவ குணத்தால் சித்தா மற்றும் ஆயுர்வேதத்தில் பயன்படுகிறது. இதன் இலை, தண்டு மற்றும் பழம் என்று ஒட்டுமொத்த தாவரமும் நமக்கு பலனளிக்கிறது.

வில்வ பழம் பார்ப்பதற்கு பச்சை நிறத்தில் இந்தோனேசியா ஆரஞ்சு போல் காணப்படும்.

ஆசியாவில் இந்த பழத்தை மஜா பழம் என்று அழைக்கின்றனர்.

இதன் சுவை கசப்பாக இருக்கும். இந்தோனேசிய புராணக்கதைகளில் ஒருவரான மஜபஹீத் என்பவருடன் இந்த வில்வ பழத்தை தொடர்புபடுத்தி கூறுகின்றனர்.

இந்த வில்வ தாவரத்தை இந்தோனேசியா மக்கள் நூற்றாண்டுக்கு மேல் மருத்துவ துறையில் பயன்படுத்தி வருகின்றனர்.

வில்வ இலையில் உள்ள ஆன்டி பயாடிக் பொருட்கள் சில நோய்களை குணப்படுத்துகின்றன என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் டயாபெட்டீஸ் நோய் வருகிறது.

இந்த டயாபெட்டீஸ் நோயை கட்டுப்பாட்டில் வைக்க வில்வ இலை உதவுகிறது. இந்த இலைகளைக் கொண்டு தேநீர் தயாரித்து குடித்தாலே போதும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

தயாரிக்கும் முறை
முதலில் 7 வில்வ இலைகளை எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும். 200 மில்லி லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள். பிறகு வடிகட்டி அந்த தேநீரை தினமும் 3 முறை பருக வேண்டும்.

சரும நோய்கள்
சின்னஞ் சிறிய குழந்தைகள், பெரியவர்கள் நிறைய சரும பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இந்த மாதிரியான சரும பிரச்சினைகளுக்கு வில்வ இலை தீர்வாக அமைகிறது. இந்த வில்வ இலைகளை சரும பிரச்சினைக்கு கீழ்க்கண்ட முறையில் பயன்படுத்த வேண்டும்.

தயாரிக்கும் முறை
முதலில் வில்வ இலைகளை உலர வைத்து கொள்ளுங்கள். மஞ்சள் கிழங்கு மற்றும் அரிசி இவற்றை இதனுடன் சேர்த்து கொள்ளுங்கள். இவற்றை நன்றாக காய வைத்து பொடியாக்கி சலித்து வைத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் சரும பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படும்.

வில்வ பழம் வயிற்று போக்கிற்கு மிகச் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. எனவே உங்கள் வயிற்று போக்கு பிரச்சினையை ஒரு நொடிப் பொழுதில் குணப்படுத்த வில்வ பழம் கையில் இருந்தால் போதும்

தயாரிக்கும் முறை
110 மில்லி லிட்டர் தண்ணீரில் வில்வ பழத்தை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். ஒரு நாளைக்கு ஒரு முறை என குடித்து வந்தால் உடனே வயிற்று போக்கு நிற்கும்.

காய்ச்சல்
வில்வ தாவரம் காய்ச்சலுக்கும் ஒரு அருமருந்தாக பயன்படுகிறது. உங்கள் உடம்பில் ஏதாவது நோய் தாக்குதல் ஏற்பட்டால் வில்வ வேரை பயன்படுத்தலாம்.

தயாரிக்கும் முறை
110 மில்லி லிட்டர் தண்ணீரில் வில்வ வேரை போட்டு கொதிக்க விடவும். இது காய்ச்சல் மற்றும் அதிகப்படியான இதய துடிப்பு போன்ற பிரச்சினைகளை சரி செய்கிறது.

பக்க விளைவுகள்
இந்த வில்வ இலையால் நமக்கு ஏராளமான நன்மைகள் இருந்தாலும் ஒரு சில பக்க விளைவுகளையும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

கருவுற்ற பெண்கள் இந்த வில்வ இலைகளை சாப்பிடக் கூடாது.

இது இரத்த சர்க்கரை அளவை குறைப்பதால் நீங்கள் ஏற்கனவே மருந்து எடுத்துக் கொண்டு வந்தால் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனையை பெற்று பயன்படுத்துவது நல்லது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories