மதுரை மேலூர் புதிய நீதிபதியாக ஜெயந்தி நியமிக்கப்பட்டுள்ளார். பெண் நீதிபதியான இவர் தனது இரண்டு குழந்தைகளையும் மேலூர் நகராட்சி அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளார்.
நீதிபதி ஜெயந்தியின் குழந்தைகள் சாக்யா 7 -ம் வகுப்பிலும், அசுரன் 5 -ம் வகுப்பிலும் சேர்ந்துள்ளனர். தமிழ் வழிக்கல்வி மூலம் அரசுப் பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்த்துப் படிக்க வைக்கும் பெண் நீதிபதிக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன. ஜெயந்தியின் கணவர் சிவராஜ் வழக்கறிஞராக உள்ளார்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “மேலூருக்கு புதிதாக வந்த மாஜிஸ்திரேட் ஜெயந்தி தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்துள்ளார் என்ற செய்தி வரவேற்கத்தக்க விஷயம்.
தன் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்த நீதிபதி ! குவியும் பாராட்டு
Published:

