December 6, 2025, 4:08 AM
24.9 C
Chennai

கல்வீச்சு மற்றும் ஆசிட் வீச்சுகளிலிருந்து காக்கும் வகையில் பெண் சிஆர்பி பெண் போலீசாருக்கு நவீன பாதுகாப்பு உடை…..!

 

CRFP - 2025

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் அடிக்கடி கல்வீச்சு சம்பவங்கள் நடக்கிறது. அங்கு பாதுகாப்பு பணியில் சுமார் 300 பெண்கள் சி.ஆர்.பி.எப். படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் மகிளா பட்டாலியன் படை பிரிவில் 10 ஆயிரம் பெண்களும், விரைவு படையில் 2 ஆயிரம் பெண்களும் பணியாற்றி வருகிறார்கள்.

இவர்கள் பாதுகாப்பு பணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள், கலவரங்களை தடுப்பது போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஸ்ரீநகரில் அடிக்கடி ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடக்கும்போது போராட்டத்தில் ஈடுபடுவோர்கள் பாதுகாப்பு படையினா் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடைபெறுவதால் சிஆர்பிஎப் படையினர் அதிக அளவில் காயம் அடைந்து வருகிறனா்.

சில சமயங்களில் அதனால் வீரர்கள் உயிரிழப்பு சம்பவங்களும் நடப்பதுண்டு அவ்வாறு நடைபெறும் கல்வீச்சினால் ஏற்படும் காயத்தில் இருந்து தப்பிக்க சிஆர்பிஎப் பெண் போலீசாருக்கு நவீன பாதுகாப்பு உடை வழங்கப்படுகிறது.

இதையடுத்து கல்வீச்சில் காயத்தில் இருந்து தப்பிக்க மத்திய பெண் போலீசாருக்கு நவீன பாதுகாப்பு வசதி கொண்ட உடை தயாரிக்க கடந்த 2016-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த பெண் போலீசார் தேசிய மாநாட்டில் நவீன பாதுகாப்பு உடை குறித்து வலியுறுத்தப்பட்டது.

இதனையடுத்து ராணுவ பாதுகாப்பு உடலியல் மற்றும் அறிவியல் இன்ஸ்டிடியூட், மத்திய பெண் போலீசாருக்கு பாதுகாப்பு உடைகளை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு பெண்களுக்கு ஏற்றாற்போல் பாதுகாப்பு உடை வடிவமைக்கப்பட்டு முழு வடிவம் பெற்றது.

சி.ஆர்.பி.எப். பெண் போலீசாருக்கான நவீன பாதுகாப்பு உடையை சி.ஆர்.பி.எப். இயக்குனர் ஆர்.ஆர். பத்பூகர் தலைமை அலுவலகத்தில் வெளியிட்டார்.

இது குறித்து ராணுவ பாதுகாப்பு உடலியல் மற்றும் அறிவியல் நிறுவன இயக்குனர் புவனேஷ்குமார் கூறியதாவது:-

இந்த நவீன பாதுகாப்பு உடையானது உடலில் விலா எலும்பு பகுதி, கைகளின் பின்புறம், தொடை, இடுப்பு உள்ளிட்ட பகுதிகளை பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த உடை கலவரங்களை கட்டுப்படுத்தும் வகையில் பெண் போலீசாருக்கு உதவியாக இருக்கும். பாதுகாப்பு உடை 6 கிலோ எடையில் இருக்கும்’ என்றார்.

சி.ஆர்.பி.எப். ஐ.ஜி. அனுபம் குல்ஸ்ரஸ்தா கூறும்போது, ‘நவீன பாதுகாப்பு உடை கத்திக்குத்தில் இருந்தும், ஆசிட் வீச்சில் இருந்தும் தப்பிக்கும் வகையில் வடி வமைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது முன்மாதிரி உடைகள் சோதனை முறையில் பயன்படுத்தப்படுகிறது.

விரைவில் நிறைய நவீன பாதுகாப்பு உடைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட உள்ளோம். ஏற்கனவே ஆண்களுக்கு நவீன பாதுகாப்பு உடை தயாரிக்கப்பட்டு வருவதால் பெண்களுக்கும் தயாரிப்பதில் எளிதாக இருக்கும்’ என்றார்.

சி.ஆர்.பி.எப். டி.ஐ.ஜி. மோசஸ் தினகரன் கூறும் போது, ‘பெண்களுக்கான பாதுகாப்பு உடை அனைத்து அளவிலும் தயாரிக்கப்படும். மத்திய ரிசர்வ் படையில் ஆண் போலீசார் பயன்படுத்தும் பாதுகாப்பு உடையில் உள்ள அதே தரத்தில் உருவாக்கப்படும்.

இந்த உடை கலவரங்களை கட்டுப்படுத்த பெண் போலீசாருக்கு உதவியாக இருக்கும். நவீன பாதுகாப்பு உடை அதிக அளவில் தயாரிக்கப்பட்ட பிறகு மத்திய ஆயுத போலீஸ் படை மற்றும் மாநில போலீஸ் படை பிரிவினருக்கும் வழங்கப்படும்’ என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories