கல்வீச்சு மற்றும் ஆசிட் வீச்சுகளிலிருந்து காக்கும் வகையில் பெண் சிஆர்பி பெண் போலீசாருக்கு நவீன பாதுகாப்பு உடை…..!

 

CRFP - 2026

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் அடிக்கடி கல்வீச்சு சம்பவங்கள் நடக்கிறது. அங்கு பாதுகாப்பு பணியில் சுமார் 300 பெண்கள் சி.ஆர்.பி.எப். படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் மகிளா பட்டாலியன் படை பிரிவில் 10 ஆயிரம் பெண்களும், விரைவு படையில் 2 ஆயிரம் பெண்களும் பணியாற்றி வருகிறார்கள்.

இவர்கள் பாதுகாப்பு பணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள், கலவரங்களை தடுப்பது போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஸ்ரீநகரில் அடிக்கடி ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடக்கும்போது போராட்டத்தில் ஈடுபடுவோர்கள் பாதுகாப்பு படையினா் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடைபெறுவதால் சிஆர்பிஎப் படையினர் அதிக அளவில் காயம் அடைந்து வருகிறனா்.

சில சமயங்களில் அதனால் வீரர்கள் உயிரிழப்பு சம்பவங்களும் நடப்பதுண்டு அவ்வாறு நடைபெறும் கல்வீச்சினால் ஏற்படும் காயத்தில் இருந்து தப்பிக்க சிஆர்பிஎப் பெண் போலீசாருக்கு நவீன பாதுகாப்பு உடை வழங்கப்படுகிறது.

இதையடுத்து கல்வீச்சில் காயத்தில் இருந்து தப்பிக்க மத்திய பெண் போலீசாருக்கு நவீன பாதுகாப்பு வசதி கொண்ட உடை தயாரிக்க கடந்த 2016-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த பெண் போலீசார் தேசிய மாநாட்டில் நவீன பாதுகாப்பு உடை குறித்து வலியுறுத்தப்பட்டது.

இதனையடுத்து ராணுவ பாதுகாப்பு உடலியல் மற்றும் அறிவியல் இன்ஸ்டிடியூட், மத்திய பெண் போலீசாருக்கு பாதுகாப்பு உடைகளை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு பெண்களுக்கு ஏற்றாற்போல் பாதுகாப்பு உடை வடிவமைக்கப்பட்டு முழு வடிவம் பெற்றது.

சி.ஆர்.பி.எப். பெண் போலீசாருக்கான நவீன பாதுகாப்பு உடையை சி.ஆர்.பி.எப். இயக்குனர் ஆர்.ஆர். பத்பூகர் தலைமை அலுவலகத்தில் வெளியிட்டார்.

இது குறித்து ராணுவ பாதுகாப்பு உடலியல் மற்றும் அறிவியல் நிறுவன இயக்குனர் புவனேஷ்குமார் கூறியதாவது:-

இந்த நவீன பாதுகாப்பு உடையானது உடலில் விலா எலும்பு பகுதி, கைகளின் பின்புறம், தொடை, இடுப்பு உள்ளிட்ட பகுதிகளை பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த உடை கலவரங்களை கட்டுப்படுத்தும் வகையில் பெண் போலீசாருக்கு உதவியாக இருக்கும். பாதுகாப்பு உடை 6 கிலோ எடையில் இருக்கும்’ என்றார்.

சி.ஆர்.பி.எப். ஐ.ஜி. அனுபம் குல்ஸ்ரஸ்தா கூறும்போது, ‘நவீன பாதுகாப்பு உடை கத்திக்குத்தில் இருந்தும், ஆசிட் வீச்சில் இருந்தும் தப்பிக்கும் வகையில் வடி வமைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது முன்மாதிரி உடைகள் சோதனை முறையில் பயன்படுத்தப்படுகிறது.

விரைவில் நிறைய நவீன பாதுகாப்பு உடைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட உள்ளோம். ஏற்கனவே ஆண்களுக்கு நவீன பாதுகாப்பு உடை தயாரிக்கப்பட்டு வருவதால் பெண்களுக்கும் தயாரிப்பதில் எளிதாக இருக்கும்’ என்றார்.

சி.ஆர்.பி.எப். டி.ஐ.ஜி. மோசஸ் தினகரன் கூறும் போது, ‘பெண்களுக்கான பாதுகாப்பு உடை அனைத்து அளவிலும் தயாரிக்கப்படும். மத்திய ரிசர்வ் படையில் ஆண் போலீசார் பயன்படுத்தும் பாதுகாப்பு உடையில் உள்ள அதே தரத்தில் உருவாக்கப்படும்.

இந்த உடை கலவரங்களை கட்டுப்படுத்த பெண் போலீசாருக்கு உதவியாக இருக்கும். நவீன பாதுகாப்பு உடை அதிக அளவில் தயாரிக்கப்பட்ட பிறகு மத்திய ஆயுத போலீஸ் படை மற்றும் மாநில போலீஸ் படை பிரிவினருக்கும் வழங்கப்படும்’ என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories