ஹிந்து மதத்திலிருந்து வந்ததே பௌத்தம்; ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படுபவர் புத்த பிக்கு அல்ல..!

srilanka bhutha - 2026

ஹிந்து மதத்தில் இருந்து உருவானதே பௌத்தம்… எனவே முரன்பாடுகளைத் திணிக்காதீர்கள் என்று கூறிய பௌத்த பிக்கு யாழ் நாக விகாரை விகார அதிபதி விமலதேரர், ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் பௌத்த பிக்கு அல்ல என்று கூறியுள்ளார்.

ஹிந்துக்களுக்கு இடையிலும் பௌத்தர்களுக்கு இடையிலும் உருவாகியிருக்கும் முரண்பாடுகள் குறித்து யாழ் ஊடக அமையத்தில், ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது, அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் அவர் கூறியபோது… பௌத்த மதத்துக்கும் இந்து மதத்துக்கும் தலைமை கிடையாது! தர்மம்தான் இரு மதங்களுக்குமே தலைமை! இந்த இரு சமயங்களுக்கும் இடையில் பிரிவுகள் இல்லை! ஹிந்து சமயத்தில் இருந்தே பௌத்த சமயமும் உருவானது.

பௌத்த மதத்தின் காவல் தெய்வங்களாக இந்து சமயக் கடவுள்களே இருக்கின்றனர்! எந்த விகாரைக்குச் என்றாலும் இந்து சமயக் கடவுள்களைப் பார்க்கலாம்! இந்த நிலையில் இரு சமூகங்களுக்கு இடையில் முரண்பாடுகள் திணிக்கப்படுகிறது. அதற்கு ஒரு சில பௌத்த பிக்குகளே காரணம். அந்த சில பிக்குகளின் செயல்பாடுகள் பௌத்த சமயத்தின் நிலைப்பாடு ஆகாது. அது பௌத்த சமயத்தின் நிலைப்பாடும் அல்ல!

சில பௌத்த பிக்குகளின் செயல்பாடுகள் ஹிந்து மதத்திற்கு பங்கம் உண்டாக்குவது போல் அமைந்துள்ளது. இவ்வாறான பிக்குகள் உண்மையில் முறையான பவுத்த பிக்குகள் தானா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

நாக விகாரை வடக்கு தெற்கு மக்களுக்கு இடையிலான உறவு பலமாக அமைந்துள்ளது. அந்த வகையில் ஹிந்து பௌத்த மக்கள் இடையில் நல்லிணக்கம் உண்டாக்கும் பொறுப்பை நாம் மேற்கொள்வோம். மேலும் யாழ் மாவட்டத்தில் பௌத்த மதத்தின் பெயரால் ஹிந்து மதத்துக்கு பங்கம் எதுவும் விளைவிக்கக் கூடாது! அவ்வாறு விளைவிக்கப்பட்டால் அதை எதிர்க்கும் முதல் ஆளாக நான் இருப்பேன்.

ஹிந்து மதத்தை பௌத்தர்களும் பௌத்த மதத்தை ஹிந்துக்களும் பாதுகாக்க வேண்டும்! அதுபோல் இந்து சமய மக்கள் பிற மதங்கள் மீது வைக்கும் நம்பிக்கையை பௌத்த மதத்தின் மீதும் வைக்க வேண்டும். அதுவே இரு சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை உருவாக்கும் என்றார்.

அதன் பின்னர் பேசிய ஹிந்து மத குரு ஒருவர், “மதங்களுக்கிடையில் நல்லதொரு ஒற்றுமை புரிந்துணர்வு உள்ளது. அதை சீர்குலைக்க சில தீவிரவாதிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறாக சீர்குலைக்க மேற்கொள்ளப்படும் செயல்களை அனைத்து தரப்பினரும் நிறுத்திக் கொள்ள வேண்டும். இங்கு சில இடங்களில் பௌத்த மதமாற்றம் நடைபெறுகிறது. அந்த நிலை மாற்றப்படவேண்டும். மதரீதியில் இன ரீதியில் பிரச்சினைகள் ஏற்படாத வகையில் இலங்கையில் கடுமையான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்” என்று கோரினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

Entertainment News

Popular Categories