ஹிந்து மதத்திலிருந்து வந்ததே பௌத்தம்; ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படுபவர் புத்த பிக்கு அல்ல..!

srilanka bhutha - 2026

ஹிந்து மதத்தில் இருந்து உருவானதே பௌத்தம்… எனவே முரன்பாடுகளைத் திணிக்காதீர்கள் என்று கூறிய பௌத்த பிக்கு யாழ் நாக விகாரை விகார அதிபதி விமலதேரர், ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் பௌத்த பிக்கு அல்ல என்று கூறியுள்ளார்.

ஹிந்துக்களுக்கு இடையிலும் பௌத்தர்களுக்கு இடையிலும் உருவாகியிருக்கும் முரண்பாடுகள் குறித்து யாழ் ஊடக அமையத்தில், ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது, அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் அவர் கூறியபோது… பௌத்த மதத்துக்கும் இந்து மதத்துக்கும் தலைமை கிடையாது! தர்மம்தான் இரு மதங்களுக்குமே தலைமை! இந்த இரு சமயங்களுக்கும் இடையில் பிரிவுகள் இல்லை! ஹிந்து சமயத்தில் இருந்தே பௌத்த சமயமும் உருவானது.

பௌத்த மதத்தின் காவல் தெய்வங்களாக இந்து சமயக் கடவுள்களே இருக்கின்றனர்! எந்த விகாரைக்குச் என்றாலும் இந்து சமயக் கடவுள்களைப் பார்க்கலாம்! இந்த நிலையில் இரு சமூகங்களுக்கு இடையில் முரண்பாடுகள் திணிக்கப்படுகிறது. அதற்கு ஒரு சில பௌத்த பிக்குகளே காரணம். அந்த சில பிக்குகளின் செயல்பாடுகள் பௌத்த சமயத்தின் நிலைப்பாடு ஆகாது. அது பௌத்த சமயத்தின் நிலைப்பாடும் அல்ல!

ALSO READ:  மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

சில பௌத்த பிக்குகளின் செயல்பாடுகள் ஹிந்து மதத்திற்கு பங்கம் உண்டாக்குவது போல் அமைந்துள்ளது. இவ்வாறான பிக்குகள் உண்மையில் முறையான பவுத்த பிக்குகள் தானா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

நாக விகாரை வடக்கு தெற்கு மக்களுக்கு இடையிலான உறவு பலமாக அமைந்துள்ளது. அந்த வகையில் ஹிந்து பௌத்த மக்கள் இடையில் நல்லிணக்கம் உண்டாக்கும் பொறுப்பை நாம் மேற்கொள்வோம். மேலும் யாழ் மாவட்டத்தில் பௌத்த மதத்தின் பெயரால் ஹிந்து மதத்துக்கு பங்கம் எதுவும் விளைவிக்கக் கூடாது! அவ்வாறு விளைவிக்கப்பட்டால் அதை எதிர்க்கும் முதல் ஆளாக நான் இருப்பேன்.

ஹிந்து மதத்தை பௌத்தர்களும் பௌத்த மதத்தை ஹிந்துக்களும் பாதுகாக்க வேண்டும்! அதுபோல் இந்து சமய மக்கள் பிற மதங்கள் மீது வைக்கும் நம்பிக்கையை பௌத்த மதத்தின் மீதும் வைக்க வேண்டும். அதுவே இரு சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை உருவாக்கும் என்றார்.

அதன் பின்னர் பேசிய ஹிந்து மத குரு ஒருவர், “மதங்களுக்கிடையில் நல்லதொரு ஒற்றுமை புரிந்துணர்வு உள்ளது. அதை சீர்குலைக்க சில தீவிரவாதிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறாக சீர்குலைக்க மேற்கொள்ளப்படும் செயல்களை அனைத்து தரப்பினரும் நிறுத்திக் கொள்ள வேண்டும். இங்கு சில இடங்களில் பௌத்த மதமாற்றம் நடைபெறுகிறது. அந்த நிலை மாற்றப்படவேண்டும். மதரீதியில் இன ரீதியில் பிரச்சினைகள் ஏற்படாத வகையில் இலங்கையில் கடுமையான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்” என்று கோரினார்.

ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories