பாஜக., எம்.பி.க்கள் கூட்டத்தில் உறுப்பினர் வரிசையில் அமர்ந்த மோடி! வைரலாகும் படம்!

modi in bjp party campaign1 - 2026

பாஜக., எம்.பி.க்களுக்கான நன்னடத்தை பயிற்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி உறுப்பினர்களின் வரிசையில் அமர்ந்திருந்த படம் இன்று சமூகத் தளத்தில் வைரலானது. இதுதான் பாஜக., என்று பலரும் கருத்து எழுதி பகிர்ந்து கொண்டனர்.

ஒழுக்கம், நடத்தை, நாடாளுமன்ற நெறிமுறைகளைப் பின்பற்றுதல், கொள்கை விவகாரங்களில் கவனம் செலுத்துதல் உள்ளிட்டவை தொடர்பாக பாஜக., எம்பி.,க்களுக்கு வகுப்பு நடத்த கட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக ஒரு பயிற்சி கருத்தரங்கு, கூட்டம் நடத்த முடிவு செய்தது. இந்தப் பயிற்சி வகுப்புக்கு “அப்யாஸ் வர்கா” என்று பெயரிடப் பட்டுள்ளது.

அதன்படி, இரு நாள் பயிற்சி வகுப்பு ஆக.3 சனிக்கிழமை இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்தப் பயிற்சி வகுப்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக., செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களின் தலைமையில் இந்தப் பயிற்சி வகுப்பு நடத்தப் படுகிறது.

காலையில், கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டாவின் உரையுடன் இந்தப் பயிற்சி வகுப்பு தொடங்கியது. அப்போது, பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் உறுப்பினராக கலந்து கொண்டு, வரிசையில் அமர்ந்திருந்தார்.

பின்னர் இந்தப் பயிற்சி வகுப்பில் மாலை நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கு குறித்து அமித்ஷா உரையாற்றினார். ஞாயிறு நாளை பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று கூறப் பட்டது.

இந்தப் பயிற்சி வகுப்பில் பாஜக., எம்பி.,க்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது

modi in bjp party campaign - 2026இரண்டாவது முறையாக அசுர பலத்துடன் ஆட்சி அமைத்துள்ள நிலையில், கட்சி எம்பி.,க்கள் அனைவரும் ஒழுக்கமுடனும், நேரம் தவறாமலும் இருக்க வேண்டும் என்றும், நாடாளுமன்றக் கூட்டங்களில் எம்.பி.க்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும், கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் உரிய துறை அமைச்சர்கள் அந்த நேரத்தில் அவையில் இருக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி வருகிறார் பிரதமர் மோடி. அதனைப் பழக்கப் படுத்துவதற்காகவே இந்தப் பயிற்சி வகுப்பு நடத்தப் படுகிறதாம்.

தற்போதைய நாடாளுமன்றத்துக்கு தேர்வான பாஜக., உறுப்பினர்கள் பெரும்பாலும் புதுமுகங்கள் என்பதால், இத்தகைய பயிற்சி வகுப்பு தேவை என்று கட்சி கருதுகிறது. முன்னதாக, 2014ல் மோடி முதல் முறையாக பிரதமராக பதவியேற்ற போதும் இதே போன்று பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

அண்மைக் காலமாக பாஜக., உறுப்பினர்கள் சில சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். பேச்சு, தேவையற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அவப்பெயரை சம்பாதிக்கின்றனர். சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது, பாலியல் புகார்களில் சிக்குவது, சுங்கச்சாவடி ஊழியர்கள் மீதான தாக்குதலில் ஈடுபடுவது என முறையற்ற வகையில் ஈடுபட்டு அவப்பெயரை வாங்குவதைத் தவிர்க்கவும் இந்தப் பயிற்சி பயன்படும் என்று கூறப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Topics

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories