சுஷ்மா ஸ்வராஜ் கனவு நனவான பிரதிபலிப்பு!

Published:

sushma swaraj sandart - 2026

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தமது 67வது வயதில், மாரடைப்பால் காலமானார். அவருக்கு பலரும் தங்களது அஞ்சலியை செலுத்தினர்!

சுஷ்மா ஸ்வராஜ் பணியாற்றிய காலத்தில் அவருடைய சிறப்பியல்புகள் அவர் மேற்கொண்ட சீர்திருத்தங்கள், உதவி நடவடிக்கைகள் என பலவற்றையும் தங்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஒடிசாவின் புகழ்பெற்ற மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் தன் தரப்பில் அழகிய மணல் சிற்பத்தை புரி கடற்கரையில் உருவாக்கி இருந்தார்! அதில் 370 நீக்கப்பட்ட கருத்தை முன்வைத்து இது சுஷ்மா ஸ்வராஜ்க்கான அர்ப்பணிப்பு என்று குறிப்பிட்டிருந்தார்.

சுஷ்மா சுவராஜ் தனது கடைசி டுவிட்டர் பதிவில் இத்தகைய நாளுக்காகத் தான் என் வாழ்நாள் முழுக்க நான் காத்திருந்தேன் என்று 370 சிறப்பு சட்டப்பிரிவு விலக்கிக் கொள்ளப்பட்டதற்கான மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.

அதை சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பத்தில் உயிரோட்டமுடன் பதிவு செய்திருந்தார். இது சமூக வலைத்தளத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது!

ALSO READ:  செங்கோட்டையில் கிருஷ்ண ஜயந்தி விழா கோலாகலம்; கோவில்களில் குவிந்த பக்தர்கள்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img