முட்புதரில் ரோஜா மலா்; வீசி சென்ற இரக்கமற்ற (பேய்க்கு) தாய்க்கு போலீஸ் வலைவீச்சு…!

kadalaur - 2026

கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்தில் பைக்குள் வைத்து பச்சிளம் பெண் குழந்தையை முட்புதருக்குள் வீசி சென்ற கல்நெஞ்சம் படைத்த தாயை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கடலூர் முதுநகர் இருசப்பன் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் மனைவி பாக்கியவதி(வயது 43).

இவர், ராமேஸ்வரம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் வரும் தனது கணவரை வீட்டுக்கு அழைத்து வருவதற்காக நேற்று அதிகாலை 1 மணியளவில் தனது ஸ்கூட்டரில் கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்துக்கு சென்றார்.

அப்போது அங்குள்ள ஆலமரத்தின் அருகே இருந்த முட்புதரில் இருந்து பச்சிளம் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. .

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பாக்கியவதி அழுகுரல் கேட்ட அந்த இடத்துக்கு சென்று பார்த்துள்ளார்.

அதில் முட்புதருக்குள் கட்டைப்பை ஒன்று இருந்துள்ளது. அந்த பைக்குள், பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை அழுதுகொண்டிருந்தது.

இதனை கண்ட பாக்கியவதி பதறியடித்து அந்த குழந்தையை பையில் வைத்து தனது ஸ்கூட்டரில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்தார்.

அங்கு குழந்தைகள் சிகிச்சை பிரிவில் இருந்த டாக்டர்களிடம் கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்தில் முட்புதருக்குள் கட்டைப்பையில் பச்சிளம் குழந்தை கிடந்ததாகவும், யாரும் இல்லாததால் அந்த குழந்தையை காப்பாற்றும் வகையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து குழந்தையின் உடலை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.

எடை குறைவாக இருந்ததால் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு கவனிப்பு பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

தற்போது இந்த பெண் குழந்தை, தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் சேர்க்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ரெயில் நிலையத்தில் பைக்குள் பச்சிளம் பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது குறித்து கடலூர் முதுநகர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் பெண் குழந்தை என்பதால் அதன் தாய் குழந்தையை முட்புதருக்குள் வைத்துவிட்டு சென்றாரா? அல்லது கள்ளத் தொடர்பில் பிறந்ததால் முட்புதரில் வைத்து சென்றாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி குழந்தையை வீசி சென்ற கல்நெஞ்சம் படைத்த தாயை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories