முட்புதரில் ரோஜா மலா்; வீசி சென்ற இரக்கமற்ற (பேய்க்கு) தாய்க்கு போலீஸ் வலைவீச்சு…!

kadalaur - 2026

கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்தில் பைக்குள் வைத்து பச்சிளம் பெண் குழந்தையை முட்புதருக்குள் வீசி சென்ற கல்நெஞ்சம் படைத்த தாயை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கடலூர் முதுநகர் இருசப்பன் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் மனைவி பாக்கியவதி(வயது 43).

இவர், ராமேஸ்வரம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் வரும் தனது கணவரை வீட்டுக்கு அழைத்து வருவதற்காக நேற்று அதிகாலை 1 மணியளவில் தனது ஸ்கூட்டரில் கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்துக்கு சென்றார்.

அப்போது அங்குள்ள ஆலமரத்தின் அருகே இருந்த முட்புதரில் இருந்து பச்சிளம் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. .

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பாக்கியவதி அழுகுரல் கேட்ட அந்த இடத்துக்கு சென்று பார்த்துள்ளார்.

அதில் முட்புதருக்குள் கட்டைப்பை ஒன்று இருந்துள்ளது. அந்த பைக்குள், பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை அழுதுகொண்டிருந்தது.

இதனை கண்ட பாக்கியவதி பதறியடித்து அந்த குழந்தையை பையில் வைத்து தனது ஸ்கூட்டரில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்தார்.

அங்கு குழந்தைகள் சிகிச்சை பிரிவில் இருந்த டாக்டர்களிடம் கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்தில் முட்புதருக்குள் கட்டைப்பையில் பச்சிளம் குழந்தை கிடந்ததாகவும், யாரும் இல்லாததால் அந்த குழந்தையை காப்பாற்றும் வகையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து குழந்தையின் உடலை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.

எடை குறைவாக இருந்ததால் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு கவனிப்பு பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

தற்போது இந்த பெண் குழந்தை, தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் சேர்க்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ரெயில் நிலையத்தில் பைக்குள் பச்சிளம் பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது குறித்து கடலூர் முதுநகர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் பெண் குழந்தை என்பதால் அதன் தாய் குழந்தையை முட்புதருக்குள் வைத்துவிட்டு சென்றாரா? அல்லது கள்ளத் தொடர்பில் பிறந்ததால் முட்புதரில் வைத்து சென்றாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி குழந்தையை வீசி சென்ற கல்நெஞ்சம் படைத்த தாயை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

Entertainment News

Popular Categories