December 19, 2025, 4:47 AM
23.1 C
Chennai

முட்புதரில் ரோஜா மலா்; வீசி சென்ற இரக்கமற்ற (பேய்க்கு) தாய்க்கு போலீஸ் வலைவீச்சு…!

kadalaur - 2025

கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்தில் பைக்குள் வைத்து பச்சிளம் பெண் குழந்தையை முட்புதருக்குள் வீசி சென்ற கல்நெஞ்சம் படைத்த தாயை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கடலூர் முதுநகர் இருசப்பன் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் மனைவி பாக்கியவதி(வயது 43).

இவர், ராமேஸ்வரம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் வரும் தனது கணவரை வீட்டுக்கு அழைத்து வருவதற்காக நேற்று அதிகாலை 1 மணியளவில் தனது ஸ்கூட்டரில் கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்துக்கு சென்றார்.

அப்போது அங்குள்ள ஆலமரத்தின் அருகே இருந்த முட்புதரில் இருந்து பச்சிளம் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. .

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பாக்கியவதி அழுகுரல் கேட்ட அந்த இடத்துக்கு சென்று பார்த்துள்ளார்.

அதில் முட்புதருக்குள் கட்டைப்பை ஒன்று இருந்துள்ளது. அந்த பைக்குள், பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை அழுதுகொண்டிருந்தது.

இதனை கண்ட பாக்கியவதி பதறியடித்து அந்த குழந்தையை பையில் வைத்து தனது ஸ்கூட்டரில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்தார்.

அங்கு குழந்தைகள் சிகிச்சை பிரிவில் இருந்த டாக்டர்களிடம் கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்தில் முட்புதருக்குள் கட்டைப்பையில் பச்சிளம் குழந்தை கிடந்ததாகவும், யாரும் இல்லாததால் அந்த குழந்தையை காப்பாற்றும் வகையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து குழந்தையின் உடலை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.

எடை குறைவாக இருந்ததால் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு கவனிப்பு பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

தற்போது இந்த பெண் குழந்தை, தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் சேர்க்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ரெயில் நிலையத்தில் பைக்குள் பச்சிளம் பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது குறித்து கடலூர் முதுநகர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் பெண் குழந்தை என்பதால் அதன் தாய் குழந்தையை முட்புதருக்குள் வைத்துவிட்டு சென்றாரா? அல்லது கள்ளத் தொடர்பில் பிறந்ததால் முட்புதரில் வைத்து சென்றாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி குழந்தையை வீசி சென்ற கல்நெஞ்சம் படைத்த தாயை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

திருப்பரங்குன்றம் மலை மீது செல்ல யாரையும் அனுமதிக்கூடாது: புகார் மனு!

மதுரை, திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில், இருப்பதால் மலைமீது செல்லவோ எந்த நிகழ்வும் நடத்தவோ அனுமதிக்க கூடாது என இந்து அமைப்புகள் சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் டிச.18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

2025ன் கடைசி பிரதோஷம்; கரூர் கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத தேய்பிறை இந்த...

தமிழக பாஜக., சார்பில் மகளிருக்கு தொழில் உபகரண பொருட்கள் வழங்கல்!

செங்கோட்டையில் தமிழக பாஜக விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவின் சார்பில் மகளிருக்கு தொழில் உபகரண பொருட்கள் வழங்கல்.

Topics

பஞ்சாங்கம் டிச.19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

திருப்பரங்குன்றம் மலை மீது செல்ல யாரையும் அனுமதிக்கூடாது: புகார் மனு!

மதுரை, திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில், இருப்பதால் மலைமீது செல்லவோ எந்த நிகழ்வும் நடத்தவோ அனுமதிக்க கூடாது என இந்து அமைப்புகள் சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் டிச.18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

2025ன் கடைசி பிரதோஷம்; கரூர் கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத தேய்பிறை இந்த...

தமிழக பாஜக., சார்பில் மகளிருக்கு தொழில் உபகரண பொருட்கள் வழங்கல்!

செங்கோட்டையில் தமிழக பாஜக விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவின் சார்பில் மகளிருக்கு தொழில் உபகரண பொருட்கள் வழங்கல்.

Silicon Shruti and Synthetic Sin: Subbudu Skewers an AI Concert of Immortals

And somewhere, one suspects, Subbudu would smile—because even AI, it turns out,however tonal perfect,  is not beyond criticism.And perfection itself is the cause!

அச்சங்கோவில் ஆராட்டு உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

பல நூற்றாண்டுகள் பழமையான இந்த சாஸ்தா கோயில் பக்தர்களிடம் ஏற்படுத்திய நம்பிக்கை ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இன்று குசேலர் தினம்! குருவாயூரப்பன் கோயிலில் கொண்டாட்டம்!

இன்று குசேலர் தின சிறப்பு வழிபாடு சிறப்பு நிவேதிய பிரசாதமும் செய்து படைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது

Entertainment News

Popular Categories