உள்ளூர் செய்திகள்

தமிழக உள்ளாட்சி தேர்தல் அக்.17, 19ம் தேதிகளில்! : அறிவிப்பு வெளியானது

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய  தேதிகளில் 2 கட்டமாக நடைபெறுகிறது.தமிழக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17, 19-ம் தேதிகளில் இருகட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.வேட்பு...

‘தமிழ் ஐகான்ஸ்’  கேட்லாக் வெளியீட்டுவிழா !

மறைந்த இசைமேதை  எம் எஸ் என்கிற எம் எஸ்.சுப்புலட்சுமி பற்றிய ஆர்ட் கேலரியின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஏ.எல்.எஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஜெயந்தி கண்ணப்பன் மற்றும்  வருமான வரித்துறை ஆணையர் டாக்டர் சீனிவாசராவ்.  ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு'கேட் லாக்' கை வெளியிட்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் திருமதி ஜெயந்தி கண்ணப்பன் பேசும் போது, "நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன். இங்கே எம்.எஸ் அவர்கள் பற்றிய ஓவியக் கண்காட்சியைச் சுற்றிப் பார்த்தேன். மிக அருமையாக இருந்தது. எம்.எஸ். அம்மா எனறாலேஅவரது அழகிய தோற்றமும்,  மூக்கின் இரு பக்கமும் ஜொலிக்கும் வைரமுக்குத்தியும் ,காதுகளில் மின்னும் வைரத்தோடும் , நெற்றியில் பளிச்சிடும் குங்குமப் பொட்டும் மனதில் வரும். அவரது்  தோற்றமேஇந்தியப் பெண்ணின் அடையாளமாக இருந்தது. அவர் சினிமாவிலும் பெரிய வெற்றி பெற்று இசையுலகிற்காகத்  தன்னை அர்ப்பணித்துப் புகழ் பெற்று விளங்கினார். அவருக்குக் கிடைக்காத விருதுகளும் இல்லை . பெருமைகளும் இல்லை எனலாம். .அப்படிப்பட்ட எம், எஸ். அம்மா அவர்களின் பலவித முக பாவங்கள் கொண்ட ஓவியங்கள், பலவித தோற்றத்திலான ஓவியங்கள் என அரிய முயற்சியாக இருந்தது. அது மட்டுமல்ல எம்.எஸ். பற்றிய அரிய புகைப்படங்களின் கண்காட்சியும் இருந்தது. இம் முயற்சியில்  வெங்கடேசன், உதயசங்கர் என இரு இளைஞ ர்கள் ஈடுபட்டு செய்து இருப்பது பாராட்டுக்குரியது. இதைநார்வே, ஸ்வீடன், பிரான்ஸ் போன்ற ஏழு நாடுகளிலும் நடத்த இருக்கிறார்கள். நம் நாட்டு தொன்மையை கலைப்பெருமையை நாடு கடந்து கொண்டு சேர்க்கும் இம்முயற்சி  பாராட்டுக்குரியது. "என்றார். வருமான வரித்துறை ஆணையாளர் டாக்டர் சீனிவாசராவ் பேசும் போது, '"நான் ஆந்திராக்காரர் . இன்று இங்கே கூடியிருப்பவர்களைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன். உண்மையிலே இது ஒரு மிராக்கள் தான் வெவ்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் நாம் இங்கே ஒன்றாக இருப்பதேநம்மை இணைத்து இருப்பதே இசையின் எம்.எஸ்ஸின் தெய்வீக சக்தி என்றே சொல்ல வேண்டும். இங்கே கண்காட்சியை பார்த்தேன். பாவங்களில் நவரசங்கள்தான்  இருக்கிறது என்பார்கள் ஆனால் இங்குவரையப்பட்டு கண்காட்சியில் வைக்கப்பட்டு இருக்கிற ஓவியங்களில் நவரசங்களைத் தாண்டிய பாவங்களைப் பார்த்தேன். இந்த அவசர உலகத்தில் கலையை ரசிக்கவும்  கலைஞர்களை மரியாதை செய்யவும் யாருக்கும் தோன்றுவதில்லை. அதற்கு நேரமில்லை. இந்தக் காலத்தில் இம் முயற்சியில் ஈடுபட்டுள்ள வெங்கடேசன்,உதயசங்கர் இருவரையும் பாராட்டுகிறேன். இது உலகின் பிற நாடுகளுக்கும் செல்ல இருப்பது மகிழ்ச்சிக்குரியது " என்றார். நிகழ்ச்சியில் இயக்குநர் வெங்கடேசன் பேசும் போது , " தமிழ்ச் சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்த ஆண்டு எம் எஸ் அம்மாவின் நூற்றாண்டும் கூட. இதையொட்டி ,'தமிழ் ஐகான்ஸ்'  கேட்லாக் வெளியீட்டுவிழா : படங்கள்: கேலரி! என்கிற பெயரில் தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற சிறந்த ஆளுமைகளை மக்கள் முன் கொண்டு சேர்க்கும் பணியை சாய்மீராமீடியாஸ் கொண்டு செல்ல விருக்கிறது. முதலில் எம் எஸ் அம்மாவிடமிருந்து தொடங்குகிறோம். இந்த  ஆரட் கேலரி யை நிறைய பேர் பார்த்துப் பாராட்டினார்கள். இம்முயற்சியில் என்னுடன் இணைந்துகொண்டிருக்கிறார் உதயசங்கர்.எங்கள் பணி தொடரும்'' என்றார். இந்நிகழ்ச்சியில் 'மியூசி மியூசிக்கல்' ஹரிச்சரன்தாஸ் உள்ளிட்ட இசை ஆர்வலர்கள் பலரும்  கலந்து கொண்டனர்.

இந்துமுன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை: பேருந்து மீது கல்வீச்சு

திருப்பூர் : கோவையில் இந்து முன்னனி பிரமுகர் கொலை செய்யப்பட்ட நிலையில் , திருப்பூரில் அரசு பேருந்துகள் உட்பட 5 பேருந்துகள் மீது கல்வீசித்தாக்குதல் . திருப்பூர் போலிசார் விசாரனை. கோவையில் இந்து...

கோவை இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் படுகொலை

கோவை: கோவையில் இந்து முன்னணி பிரமுகர் நள்ளிரவில் படுகொலை செய்யப்பட்டார். இதனால் பதற்றம் ஏற்பட்டதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.கோவை இந்து முன்னணியின் செய்தி தொடர்பாளர் சசிகுமார், தனது பணிகளை முடிந்து நள்ளிரவில்...

கர்நாடக அரசை கலைப்பது தான் தீர்வா? : ராமதாஸ்

காவிரி பிடிவாதம் பிடிப்பதால், கர்நாடக அரசை கனத்த இதயத்துடன் கலைப்பது தான் தீர்வாஎன்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:காவிரியில் தமிழகத்திற்கு வினாடிக்கு 3000 கனஅடி வீதம் நாளை முதல்...

கீழப்பாவூரில் சமுதாய வளைகாப்பு விழா கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி நடத்திவைத்தார்

கீழப்பாவூர் பேரூராட்சி சமுதாய நலக் கூடத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது விழாவில் நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழாவினை நடத்தி...
- 2026

ஒருதலைக் காதல் விபரீதம்: நிச்சயிக்கப் பட்ட பெண்ணை கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்ற இளைஞர்

கோவை:தமிழகத்தில் ஒரு தலைக்காதலுக்கு மேலும் ஒரு பெண் பலியாகியுள்ளார். கோவையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை வீடு புகுந்து கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞர் தாமும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.கோவை மாவட்டம் அன்னூர் தென்னம்பாளையம்...

காலை நேர செய்தித் தொகுப்பு

1] வட மேற்கு பாகிஸ்தானில் அரசின் போலியோ ஒழிப்பு திட்டத்தில் முன்னணி பிரமுகரான மருத்துவர் ஒருவரை அடையாளம் தெரியாத ஆயுததாரி சுட்டுக் கொன்றுள்ளார்2] உகாண்டாவில் அதிபரின் பசுவை திருடிய குற்றச்சாட்டில் மூன்று பேர்...

நான் பதவி விலகவில்லை: வதந்தி என்கிறார் கருணாஸ்

 நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியிலிருந்து நான் விலகவில்லை என்றும், சமூக வலைதளங்களில் வந்த தகவல் வதந்தி என்றும், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க துணைத் தலைவர் கருணாஸ் தெரிவித்தார்.  

தமிழக அரசுக்கு ஆதரவு: நடிகர் சங்க தீர்மானம்

சென்னையில் நடைபெற்று வரும் நடிகர் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.காவிரி விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஆதரவு அளிப்பதாகவும் கன்னட நடிகர்களின் பேச்சுக்க கண்டனம் தெரிவிப்பதாகவும் நடிகர் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.முன்னதாக நிகழ்ந்த...

 கலைஞர்கள் பொதுவானவர்கள்: பாக்யராஜ்

இனம், மொழி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் கலைஞர்கள், இதை தமிழ் சினிமாவில் உள்ளவர்கள் எப்போதும் உணர்ந்துள்ளனர். ஒவ்வொரு முறை காவிரி பிரச்சினையின் போதும் கன்னட திரையுலகினரின் போராட்டத்தால் தர்ம சங்கடமான சூழ்நிலைகளை தமிழ் திரையுலகினர் சந்திக்க...

அரசியலுக்கு முழுக்கு இல்லை: சரத்குமார்

தான் பல்வேறு தடைகளை தாண்டி வந்தவன் என்றும், தான் அரசியலுக்கு முழுக்கு போடப்போவதாக வெளியான செய்தி தவறானது என்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று சென்னையில்...
- 2026

Recent articles