கீழப்பாவூர் பேரூராட்சி சமுதாய நலக் கூடத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது விழாவில் நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழாவினை நடத்தி வைத்தார் முன்னதாக அவர் பேசுகையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அனைத்து மக்களும் பயன்பெறுகின்ற வகையில், எண்ணற்ற பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் . திருமணத்திற்கு நிதியுதவியும், தாலிக்கு தங்கமும் வழங்கிய ஒரே முதல்வர் இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் ஜெயலலிதா தான் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு முன்பு ரூ.12,000 வழங்கி வந்த மகப்பேறு நிதியுதவி ரூ.18,000 ஆக உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளார்.மேலும் ஏழை எளிய பெண்கள் தனக்கு வளைகாப்பு நடத்த முடிய வசதியில்லை என்ற எண்ணத்தை போக்கவே இப்படி ஒரு சிறந்த திட்டத்தை மக்களுக்கு தந்துள்ளார் மேலும் தாயுள்ளத்தோடு திட்டங்களை மக்களுக்கு முழுமையாக கொண்டு சோ்க்கும் வகையில் திட்டங்கள் தீட்டி வருகிறார் . ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சமுதாய வளைகாப்பு, குழந்தைகளுக்கு ஆரோக்கிய பூரிப்பு என்ற கையேடு அதையும் படித்து கருவுற்ற தாய்மார்கள் கர்ப்ப காலத்தில்கருவிலுள்ள குழந்தை ஆரோக்கியமாக வளர்வதற்கு எப்படி பட்ட உணவுகளை உண்ண வேண்டும். எந்தெந்த பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு குறிப்புகளை அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார் பின்னர் 80க்கும் மேற்பட்ட கர்ப்பிணித்தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்கள். நிகழ்சியில் மாவட்ட கவுன்சிலர் மு.சேர்மபாண்டியன், நகர செயலாளர் பாஸ்கர் ,தீப்பொறி அப்பாதுரை குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சரஸ்வதி,மேலவைப் பிரதிநிதிகள் ஜெயராமன் ,கணபதி ,இளைஞரணி இருளப்பன் ,அம்மா பேரவை சாமிநாதன் ,விவேகானந்தர்,மேற்பார்வையாளர்கள் தாமரைச்செல்வி,ஜெயலட்சுமி தமிழ்க்கொடி மற்றும் அலுவலர்கள், அங்கன்வாடிப்பணியாளர்கள், கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்
கீழப்பாவூரில் சமுதாய வளைகாப்பு விழா கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி நடத்திவைத்தார்
Popular Categories



