சுபாஷிதம்: முயற்சியின்றி பலனில்லை!

subhashitam
subhashitam

சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

28. முயற்சியின்றி பலனில்லை!

ஸ்லோகம்:

உத்யமேன ஹி சித்யந்தி கார்யாணி ந மனோரதை: |
ந ஹி சுப்தஸ்ய சிம்ஹஸ்ய ப்ரவிசந்தி முகே ம்ருகா: ||

— ஹிதோபதேசம் 1-36

பொருள்:

நாம் நினைத்த செயல்களையும் சாதிக்க நினைத்த இலக்குகளையும் கடின முயற்சியால் மட்டுமே அடைய முடியும். மனதில் நினைத்தால் மட்டுமே நடந்து விடாது. சிங்கம் தன் குகையில் படுத்துக் கொண்டிருந்தால் விலங்குகள் தாமாகவே வந்து அதன் வாயில் விழாது அல்லவா?

விளக்கம்:

வாழ்க்கைக்கு ஒரு இலக்கு வேண்டும். அந்த இலக்கை அடைய உழைக்க வேண்டும். அப்போதுதான் மனதில் நினைத்தது நிறைவேறும். வெறும் பகற்கனவால் பலனில்லை. கனவை நனவாக்குவதற்கு தேவையான எரிபொருள் உழைப்பு. அதாவது சக்தி அனைத்தையும் திரட்டிச் செய்ய வேண்டிய விடாமுயற்சி. அத்தகைய முயற்சியின் தேவையைக் கூறுவதே இந்த ஸ்லோகம். சிங்கத்தை போல் வீரமும் சாமர்த்தியம் இருந்தால் மட்டும் போதாது. அவற்றை உபயோகிப்பதும் முக்கியமானது என்பது இந்த ஸ்லோகம் அளிக்கும் மற்றுமொரு செய்தி.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

லட்சியம் சிறியதானாலும் பெரியதானாலும் அதற்காக உழைக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் கனவு நிறைவேறும். சிங்கம் எத்தனை வலிமை பொருந்தியது ஆனாலும் வயிற்றை நிரப்பிக் கொள்வதற்கு குகையில் இருந்து வெளிவரவேண்டும். ஓட வேண்டும். மானை விட வேகமாக ஓடினால்தான் அதற்கு வயிறு நிறையும்.

கனவு காணவும் வேண்டும். அது நிறைவேறுவதற்காக முயற்சித்து உழைக்கவும் வேண்டும். ஒரு மாணவன் மருத்துவராக வேண்டும் என்று ஆசைப்பட்டால் போதுமா? அதற்கான போட்டித் தேர்வு எழுத வேண்டும். வெற்றி பெற வேண்டும். அதற்காக ஓய்வின்றி படிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு நான் டாக்டராவேன் என்று நினைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தால் நடக்காது அல்லவா?

வாழ்க்கை கனவுகள் என்றால் நமக்கு உறக்கத்தில் வரும் கனவுகள் அல்ல. நம்மை உறங்க விடாமல் செய்யும் கனவுகள்” என்றார் முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர் அப்துல்கலாம். இந்த ஸ்லோகம் கூறும் கருத்தும் இதுவே.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories