சுபாஷிதம் : ஆபத்தில் தைரியம்!

Published:

subhashitam-1
subhashitam-1

சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

46 ஆபத்தில் தைரியம்!

செய்யுள்:

தாவத் பயாத்தி பேதவ்யம் யாவத் பயமனாகதம் |
ஆகதம் து பயம் வீக்ஷ்ய நர: குர்யாத் யதோசிதம் ||

பொருள்:

ஆபத்து நேராமல் கவனமாக இருக்க வேண்டும் என்றால் அச்சம் இருக்க வேண்டும். ஆனால் உண்மையில் அந்த ஆபத்துக்கு ஆளாக நேரும் போது அச்சப்படக்கூடாது. சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தைரியமாக நடந்து கொள்ள வேண்டும்.

விளக்கம்:

ஆபத்து நேரும்போது தைரியமாக இருக்கும்படி அறிவுரை கூறும் சுலோகம் இது. ஆபத்து நேராமல் தகுந்த கவனத்தோடு அனைத்து முன்னெச்சரிக்கைகளும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் ஒருவேளை ஆபத்து நேர்ந்து விட்டால் பயப்படாமல் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். தனிமனித வாழ்விலும் சரி நாட்டுப் பாதுகாப்பிலும் சரி இந்த ஸ்லோகத்தை அறிவுரையாகக் கொள்ளலாம்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

அச்சம் என்பது கோழைகளுக்கு நடுக்கம் விளைவிக்கும் உணர்வு. நம் தைரியத்தைப் பார்த்து பயத்திற்கே பயம் விளைய வேண்டும். வீரன் ஒருமுறைதான் மரணிப்பான். கோழை ஒவ்வொரு கணமும் மரணிப்பான் என்ற பழமொழிகள் கூட உள்ளன.

பயம் என்னும் அனாவசிய கற்பனை பயந்தாங்கொள்ளியின் இயல்பு என்பர் மனோதத்துவ நிபுணர்கள். கடவுள் உன்னை விட வேறானவர் என்று நினைக்கும் போது பயம் ஏற்படுகிறது என்பர் ஆன்மீகவாதிகள்.

பகை நாட்டிற்கு தகுந்த விதத்தில் புத்தி புகட்ட வேண்டும் எனில் போர் கட்டாயம் நடக்க வேண்டியதே! நம் நாட்டின் மீது அடிக்கடி நடக்கும் கொடுமையான தாக்குதல்களை முழுமையாக நிறுத்துவதற்கு என்னென்ன செயல்களை முக்கியமாகச் செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்ய வேண்டும்.

நஷ்டத்தை கண்டு அஞ்சாமல் பகைவனை அழிப்பது என்ற முக்கிய இலக்கில் நமக்கு ஏற்படும் சிறு காயங்களுக்கு அஞ்சக் கூடாது என்னும் செய்தியை இந்த ஸ்லோகம் அளிக்கிறது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img