காமோகார்ஷீத் ஜப சங்கல்பம். 15-08-2019

Published:

காமோகார்ஷீத் ஜப சங்கல்பம். 15-08-2019
 
இது ருக்வேதிகளுக்கும் தலை ஆவணி அவிட்டம் உள்ளவர்களுக்கும் கிடையாது.
 
ப்ருஹ்மசாரிகள் ஷேவிங்//வபனம்—செய்து கொள்ள வேண்டும்.
 
இன்று காலை ஸ்நானம் – சந்த்யாவந்தனம் செய்து சமிதாதானம் //ஒளபாசனம் செய்து விட்டு ஆசமனம்.Kvb tharpanam small - 2026
 
ஆசமனம். அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:. உள்ளங் கையில் உத்திரிணி ஜலம் விட்டு ப்ரும்ஹ தீர்த்தத்தால் அருந்தவும்.
 
கேசவ ,நாராயண என்று கட்டை விரலால் வலது, இடது கன்னங்களையும்,.மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும், விஷ்ணோ ,மதுசூதனா என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும், , த்ரிவிக்ரம ,வாமன என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும், ஶ்ரீதர, ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது, இடது தோள்களையும் பத்மநாபா என்று எல்லா விரல்கலால் மார்பிலும், தாமோதரா என்று எல்லா விரல்கலாலும் சிரஸிலும் தொட வேன்டும்.
 
கை கால் அலம்பி ஸுத்தமான இடத்தில் அமர்ந்து ஆசமனம் செய்து, பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கிக் கொண்டு
 
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே .நெற்றியில் குட்டிக்கொள்ளவும்
 
.ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.
 
மமோ பாத்த ஸமஸ்த துரிதயக் ‌ஷயத்துவார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ருஹ்மண; த்விதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்த மன்வந்தரே அஷ்டாவிம்சதீதமே கலியுகே
 
ப்ரதமேபாதே ஜம்பூத் த்வீபே பாரத வர்ஷே பரதகண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே சாலிவாகன சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவ ஹாரீகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே செளர சாந்த்ரமானாப்யாம் விகாரி நாம ஸம்வத்ஸரே தக்‌ஷிணாயனே க்ரீஷமருதௌ கடக மாஸே சுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் சுப திதெள : குரு வாஸர யுக்தாயாம் ஸ்ரவண நக்க்ஷத்ர யுக்தாயாம் சுபயோக சுபகரண ஏவங்குண விஷேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் பூர்ணிமாயாம் சுபதிதெள மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ஷ்ராவண்யாம் பூர்ணிமாயாம் அத்யாய உத்ஸர்ஜன அகரண ப்ராயஸ்சித்தார்த்தம் ஸஹஸ்ர// அஷ்டோத்ர ஷத சங்க்யயா காமோகார்ஷீண் மன்யுரகார்ஷீதிதி மஹா மந்த்ர ஜபம் கரிஷ்யே என்று ஸங்கல்பம் செய்து
 
தர்பத்தை வடக்கில் போட்டு ஜலத்தை தொடவும்.
 
(காமோ கார்ஷீத் மன்யுரகார்ஷீன் நமோ நம I )-(இது தான் ஜபிக்க வேண்டியது
 
ப்ரணவஸ்ய ரிஷிர் ப்ரும்ஹ தேவி காயத்ரி சந்த: பரமாத்மா தேவதா. பூராதி ஸப்த வ்யாஹ்ரூதீனாம் அத்ரி, ப்ருகு, குத்ச வஸிஷ்ட, கெளதம, காஷ்யப ஆங்கீரஸோ ரிஷய:காயத்ரி,உஷ்ணிக், அனுஷ்டுப் ,ப்ருஹதி ,பங்க்தி ,த்ரிஷ்டுப், ஜகத்ய சந்தாகும்ஸி
அக்னி, வாயு, அர்க்க, வாகீஸ, வருண, இந்த்ர, விச்வே தேவா: தேவதா
:
10 ப்ராணாயாமம் செய்யவும். பிறகு ஆயாத்தித் அனுவாகஸ்ய வாம தேவ ரிஷி; அநுஷ்டுப் சந்த: சவிதா தேவதா:
 
ரிஷி என்று சொல்லும் போது வலது கை விரல்களை தலையிலும், சந்தஹ என்று சொல்லும் போது மூக்கிலும் தேவதா என்று சொல்லும் போது மார்பிலும் வைத்து கொள்ள வேண்டும்.
 
ஆசனத்தில் அமர வேண்டும்.
ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.16 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

Related articles

Recent articles

spot_img