தியானம், தவம், வைராக்கியம்… தனக்காக வாழாத தயாளன்!

தியானம், தவம், வைராக்கியம்… தனக்காக வாழாத தயாளன்! 

(‘இந்தியா எளிமை நிறைந்த ஞானிகளின் பூமிதான் என்பதை என் வாழ்நாள் முழுக்கச் சொல்வேன்’-ஆஸ்திரேலியா  பெண்மணி)

நன்றி-விகடன்.



ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரு பெண்மணி இந்திய ஞானிகளைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவர்களைத் தரிசிக்க இந்தியா வந்தார். ஆனால், இந்தியாவில் துறவிகள் எல்லாம் அவர் படித்த, கேள்விப்பட்ட செய்திகளில் காணப்பட்டதுபோல இல்லை என்று அவருக்குத் தோன்றியது. பெரும்பாலான துறவிகள், ஆடம்பரமாக இருந்தார்கள். அவர்களைத் தரிசிக்க மிகவும் செலவு செய்ய வேண்டியிருந்தது. அவர்கள் தோற்றத்திலிருந்து உபதேசம் வரை அனைத்தும் கொஞ்சம் மிகையாக இருப்பதாக அவர் நினைத்தார். இந்த வருத்தத்தை தனக்கு அறிமுகமாயிருந்த தென்னிந்திய நண்பரோடு பகிர்ந்துகொண்டார். அப்போது அவர், ஒருமுறை காலடி சென்று வாருங்களேன் என்றார். பெரியவா அப்போது காலடியில்தான் இருந்தார்.

அடுத்த இரு நாள்களில், அவரது விசா முடிவடைகிறது. ஒரே நாளில் சென்று தரிசனம் கிடைக்காமல் திரும்பினால், அனைத்தும் வீணாகும் என்ற கவலை. ஆனாலும் மனம் காலடியை நோக்கியே சிந்தித்திருக்கவும், அந்தப் பெண்மணி காலடி நோக்கி விரைந்தார். அங்கிருந்த மடத்தின் அதிகாரிகளிடம் தன்னைப் பற்றிச் சொல்லி பெரியவாவின் தரிசனம் இன்றே கிடைக்குமா என்று கேட்டார். அவர்களும் அதற்கு ஏற்பாடு செய்தனர்,

பெரியவா தோட்டத்தில்  நின்றுகொண்டிருந்தபோது அந்த அம்மையார் அவரைத் தரிசித்தார். பெரியவா காஷாயமும் கையில் தண்டமும், கமண்டலமும் சுமந்தபடி நின்று தரிசனம் கொடுத்தார். அந்தப் பெண்மணிக்கு அந்தத் தரிசனம் மனம் நிறைவைத் தந்தது. எளிமையே உருவாகத் திகழ்ந்த பெரியவாவின் தரிசனத்தைக் கண்டதும் அவர் கண்களில் இருந்து கண்ணீர் சுரந்தபடி இருந்தது.

 பெரியவா, அவருக்கு ஒரு மாம்பழத்தைப் பிரசாதமாகத் தந்து ஆசி வழங்கினார்

. ‘இந்தியா எளிமை நிறைந்த ஞானிகளின் பூமிதான் என்பதை என் வாழ்நாள் முழுக்கச் சொல்வேன்’ என்று  அந்தப் பெண் தன் நண்பரிடம் தெரிவித்துச் சென்றாராம். 

ALSO READ:  ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories