தியானம், தவம், வைராக்கியம்… தனக்காக வாழாத தயாளன்!

தியானம், தவம், வைராக்கியம்… தனக்காக வாழாத தயாளன்! 

(‘இந்தியா எளிமை நிறைந்த ஞானிகளின் பூமிதான் என்பதை என் வாழ்நாள் முழுக்கச் சொல்வேன்’-ஆஸ்திரேலியா  பெண்மணி)

நன்றி-விகடன்.



ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரு பெண்மணி இந்திய ஞானிகளைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவர்களைத் தரிசிக்க இந்தியா வந்தார். ஆனால், இந்தியாவில் துறவிகள் எல்லாம் அவர் படித்த, கேள்விப்பட்ட செய்திகளில் காணப்பட்டதுபோல இல்லை என்று அவருக்குத் தோன்றியது. பெரும்பாலான துறவிகள், ஆடம்பரமாக இருந்தார்கள். அவர்களைத் தரிசிக்க மிகவும் செலவு செய்ய வேண்டியிருந்தது. அவர்கள் தோற்றத்திலிருந்து உபதேசம் வரை அனைத்தும் கொஞ்சம் மிகையாக இருப்பதாக அவர் நினைத்தார். இந்த வருத்தத்தை தனக்கு அறிமுகமாயிருந்த தென்னிந்திய நண்பரோடு பகிர்ந்துகொண்டார். அப்போது அவர், ஒருமுறை காலடி சென்று வாருங்களேன் என்றார். பெரியவா அப்போது காலடியில்தான் இருந்தார்.

அடுத்த இரு நாள்களில், அவரது விசா முடிவடைகிறது. ஒரே நாளில் சென்று தரிசனம் கிடைக்காமல் திரும்பினால், அனைத்தும் வீணாகும் என்ற கவலை. ஆனாலும் மனம் காலடியை நோக்கியே சிந்தித்திருக்கவும், அந்தப் பெண்மணி காலடி நோக்கி விரைந்தார். அங்கிருந்த மடத்தின் அதிகாரிகளிடம் தன்னைப் பற்றிச் சொல்லி பெரியவாவின் தரிசனம் இன்றே கிடைக்குமா என்று கேட்டார். அவர்களும் அதற்கு ஏற்பாடு செய்தனர்,

பெரியவா தோட்டத்தில்  நின்றுகொண்டிருந்தபோது அந்த அம்மையார் அவரைத் தரிசித்தார். பெரியவா காஷாயமும் கையில் தண்டமும், கமண்டலமும் சுமந்தபடி நின்று தரிசனம் கொடுத்தார். அந்தப் பெண்மணிக்கு அந்தத் தரிசனம் மனம் நிறைவைத் தந்தது. எளிமையே உருவாகத் திகழ்ந்த பெரியவாவின் தரிசனத்தைக் கண்டதும் அவர் கண்களில் இருந்து கண்ணீர் சுரந்தபடி இருந்தது.

 பெரியவா, அவருக்கு ஒரு மாம்பழத்தைப் பிரசாதமாகத் தந்து ஆசி வழங்கினார்

. ‘இந்தியா எளிமை நிறைந்த ஞானிகளின் பூமிதான் என்பதை என் வாழ்நாள் முழுக்கச் சொல்வேன்’ என்று  அந்தப் பெண் தன் நண்பரிடம் தெரிவித்துச் சென்றாராம். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories