December 6, 2025, 2:10 AM
26 C
Chennai

“ஒரு பைசா கூடக் கொடுக்க மாட்டேன்”-பெரியவா

“ஒரு பைசா கூடக் கொடுக்க மாட்டேன்”-பெரியவா

(“சாஸ்திரிகளே! உங்களால் முடிந்தால் யாகம் செய்யுங்கள். ஆடு வ்ங்குவதற்காக,ஸ்ரீ மடத்திலிருந்து ஒரு பைசா கூடக் கொடுக்க மாட்டேன்…யக்ஞம் நடத்தணும் என்று முதலிலேயே சொல்லியிருந்தால் ஸஹாயம் செய்திருக்கலாம். நீங்கள் எந்தக் காரியத்தைச் சொல்லிக் கேட்கிறீர்களோ, அதற்கு உதவி செய்வது சந்யாஸ தர்மம் இல்லை” என்று கண்டிப்பாகச் சொன்னார்கள்”)

சொன்னவர்-ஸ்ரீ மடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

வேதவித்தகரும் அனுஷ்டாதாவும்  நித்யாக்னிஹோத்ரியுமான ஒரு வைதிகர் தரிசனத்துக்கு வந்தார்

.பெரியவா, அவரைப் பற்றி விசாரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்; அவருடைய வைதிக அநுஷ்டானங்களைக் கொண்டாடினார்கள்.

அக்னிஹோத்ரி சொன்னார்;

“யாகம் பண்ணப் போறேன்..எல்லாம் ஸித்தமா இருக்கு….பலபேர் ஆதரவு கொடுக்கிறா.. “யாகப் பசுக்கள் (ஆடுகள்) வாங்கணும்… நிறைய செலவாகும் போலிருக்கு…. பெரியவா அனுக்ரஹம் பண்ணணும்… யாகப் பசுக்கள் வாங்க ,ஸ்ரீ மடத்திலேர்ந்து த்ரவ்ய ஸஹாயம் செய்யணும்….”

யாகம் செய்யப் போவதைக் கேட்டு,தன் ஆசிகளைத் தெரிவித்துக் கொண்டார்கள், பெரியவா.

“நல்ல கார்யம். நன்னா நடக்கும்.யாகத்திலே பசு ஹிம்ஸை, அஹிம்ஸை தான்.தர்ம சம்மதம் தான். நான் ஒரு சந்யாஸி, என் தர்மம்-அஹிம்ஸா பரமோ தர்ம;என்பது.அதனால்,  சந்யாஸியாகிய நான், யாகப்பசு வாங்கிக் கொடுப்பது தர்மமில்லை-என்று தோன்றுகிறது. ஆகவே யாராவது கிருஹஸ்தர்களிடம் போய். திரவ்ய ஸஹாயம் பெற்று யாகத்திப் பூர்த்தி செய்யுங்கள்.”

வந்தவர், ரொம்ப பிடிவாதக்காரர். எப்படியாவது பெரியவாளிடமிருந்து பணம் பெறுவதில் குறியாக இருந்தார்.

“யக்ஞேஸ்வரன் வைகுண்டத்தில் இல்லை. இதோ சாக்ஷாத்தாக இங்கே இருக்கார்! பெரியவாதான் யக்ஞேஸ்வரன்..” என்றெல்லாம் ஸ்தோத்திரம் செய்தார்.

“சாஸ்திரிகளே! உங்களால் முடிந்தால் யாகம் செய்யுங்கள். ஆடு வ்ங்குவதற்காக,ஸ்ரீ மடத்திலிருந்து ஒரு பைசா கூடக் கொடுக்க மாட்டேன்…யக்ஞம் நடத்தணும் என்று முதலிலேயே சொல்லியிருந்தால் ஸஹாயம் செய்திருக்கலாம். நீங்கள் எந்தக் காரியத்தைச் சொல்லிக் கேட்கிறீர்களோ, அதற்கு உதவி செய்வது சந்யாஸ தர்மம் இல்லை” என்று கண்டிப்பாகச் சொன்னார்கள்>

வந்தவருக்கு, ஏமாற்றம் தான் என்றாலும், தவறு தன்மேல் என்பதால், ஓரளவு சமாதானத்துடன் சென்றார்-என்று சிஷ்யர்களுக்கு தோன்றிற்று

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories