“ஒரு பைசா கூடக் கொடுக்க மாட்டேன்”-பெரியவா

“ஒரு பைசா கூடக் கொடுக்க மாட்டேன்”-பெரியவா

(“சாஸ்திரிகளே! உங்களால் முடிந்தால் யாகம் செய்யுங்கள். ஆடு வ்ங்குவதற்காக,ஸ்ரீ மடத்திலிருந்து ஒரு பைசா கூடக் கொடுக்க மாட்டேன்…யக்ஞம் நடத்தணும் என்று முதலிலேயே சொல்லியிருந்தால் ஸஹாயம் செய்திருக்கலாம். நீங்கள் எந்தக் காரியத்தைச் சொல்லிக் கேட்கிறீர்களோ, அதற்கு உதவி செய்வது சந்யாஸ தர்மம் இல்லை” என்று கண்டிப்பாகச் சொன்னார்கள்”)

சொன்னவர்-ஸ்ரீ மடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

வேதவித்தகரும் அனுஷ்டாதாவும்  நித்யாக்னிஹோத்ரியுமான ஒரு வைதிகர் தரிசனத்துக்கு வந்தார்

.பெரியவா, அவரைப் பற்றி விசாரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்; அவருடைய வைதிக அநுஷ்டானங்களைக் கொண்டாடினார்கள்.

அக்னிஹோத்ரி சொன்னார்;

“யாகம் பண்ணப் போறேன்..எல்லாம் ஸித்தமா இருக்கு….பலபேர் ஆதரவு கொடுக்கிறா.. “யாகப் பசுக்கள் (ஆடுகள்) வாங்கணும்… நிறைய செலவாகும் போலிருக்கு…. பெரியவா அனுக்ரஹம் பண்ணணும்… யாகப் பசுக்கள் வாங்க ,ஸ்ரீ மடத்திலேர்ந்து த்ரவ்ய ஸஹாயம் செய்யணும்….”

யாகம் செய்யப் போவதைக் கேட்டு,தன் ஆசிகளைத் தெரிவித்துக் கொண்டார்கள், பெரியவா.

“நல்ல கார்யம். நன்னா நடக்கும்.யாகத்திலே பசு ஹிம்ஸை, அஹிம்ஸை தான்.தர்ம சம்மதம் தான். நான் ஒரு சந்யாஸி, என் தர்மம்-அஹிம்ஸா பரமோ தர்ம;என்பது.அதனால்,  சந்யாஸியாகிய நான், யாகப்பசு வாங்கிக் கொடுப்பது தர்மமில்லை-என்று தோன்றுகிறது. ஆகவே யாராவது கிருஹஸ்தர்களிடம் போய். திரவ்ய ஸஹாயம் பெற்று யாகத்திப் பூர்த்தி செய்யுங்கள்.”

வந்தவர், ரொம்ப பிடிவாதக்காரர். எப்படியாவது பெரியவாளிடமிருந்து பணம் பெறுவதில் குறியாக இருந்தார்.

“யக்ஞேஸ்வரன் வைகுண்டத்தில் இல்லை. இதோ சாக்ஷாத்தாக இங்கே இருக்கார்! பெரியவாதான் யக்ஞேஸ்வரன்..” என்றெல்லாம் ஸ்தோத்திரம் செய்தார்.

“சாஸ்திரிகளே! உங்களால் முடிந்தால் யாகம் செய்யுங்கள். ஆடு வ்ங்குவதற்காக,ஸ்ரீ மடத்திலிருந்து ஒரு பைசா கூடக் கொடுக்க மாட்டேன்…யக்ஞம் நடத்தணும் என்று முதலிலேயே சொல்லியிருந்தால் ஸஹாயம் செய்திருக்கலாம். நீங்கள் எந்தக் காரியத்தைச் சொல்லிக் கேட்கிறீர்களோ, அதற்கு உதவி செய்வது சந்யாஸ தர்மம் இல்லை” என்று கண்டிப்பாகச் சொன்னார்கள்>

வந்தவருக்கு, ஏமாற்றம் தான் என்றாலும், தவறு தன்மேல் என்பதால், ஓரளவு சமாதானத்துடன் சென்றார்-என்று சிஷ்யர்களுக்கு தோன்றிற்று

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories