February 22, 2026, 11:03 AM
29.6 C
Chennai

சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடாதிபதியின் தமிழக விஜய யாத்திரை!

சென்னை”

சிருங்கேரி சாரதா பீடாதிபதி ஜகத்குரு பாரதி தீர்த்த மகாசுவாமிகள் மற்றும் அவரது சீடர் விதுசேகர பாரதி சுவாமிகள் ஆகிய இருவரும் தமிழகத்தில் ஒருமாத காலம் விஜய யாத்திரை மேற்கொள்கின்றனர். பாரதி தீர்த்த மகாசுவாமிகளின் 67-வது பிறந்தநாள் விழா மதுரையில் கொண்டாடப்பட உள்ளது.

இது தொடர்பாக கர்நாடகாவில் உள்ள சிருங்கேரி சாரதா பீட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி:

சிருங்கேரி பீடத்தின் 36-வது பீடாதிபதியாக இருப்பவர் பாரதி தீர்த்த மகாசுவாமிகள். இவர் 2012-ல் தமிழகத்தில் நீண்டநாட்கள் விஜய யாத்திரை மேற்கொண்டார்.

கடந்த 2015-ல் விதுசேகர பாரதி சுவாமிகளை தனது சீடராக நியமித்தார். இந்நிலையில், தமிழக பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, இருவரும் சேர்ந்து முதல் முறையாக தமிழகத்துக்கு விஜய யாத்திரை மேற்கொள்கின்றனர்.

மார்ச் 9-ம் தேதி தொடங்கி கர்நாடகாவின் பல பகுதிகளுக்குச் செல்லும் அவர்கள் மார்ச் 14-ம் தேதி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்துக்கு வருகை தருகின்றனர்.
14, 15-ல் சத்திய மங்கலம்
16, 17-ல் கோபி செட்டிபாளையம்,
18-ல் ஈரோடு,
19, 20, 21-ல் சேலம்,
22-ல் நாமக்கல்,
23, 24-ல் திண்டுக்கல்,
25-ல் தென்கரை,
26-ல் கொடிமங்கலம் என்று பல்வேறு ஊர்களுக்கு விஜயம் செய்து,
27-ம் தேதி மதுரை வந்தடைகின்றனர். தங்கும் இடங்களில் ஸ்ரீசாரதா சந்திரமவுலீஸ்வர பூஜை நடத்து கின்றனர்.

மதுரையில் பிறந்தநாள் விழா:

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள சிருங்கேரி சங்கர மடத்தில் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை ஒருவார காலம் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குகின்றனர்.
ஏப்ரல் 2-ம் தேதி பாரதி தீர்த்த சுவாமிகளின் 67-வது பிறந்தநாள் விழா மதுரையில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மகாருத்ரம், சதசண்டி யாகங்களும் நடக்க உள்ளன.

ஏப்ரல் 4-ம் தேதி புறப்பட்டு ராஜபாளையம் செல்லும் அவர்கள், அங்குள்ள ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்த பாரதி வேத பாடசாலையில் 13-ம் தேதி வரை தங்கியிருந்து அருளாசி வழங்குகின்றனர்.

இந்த விஜய யாத்திரையின்போது மார்ச் 15-ல் சத்தியமங்கலம் ஆதிசங்கரர் கோயில் கும்பாபி ஷேகம், 18-ம் தேதி பவானி சிருங்கேரி மட பிரவசன மண்டப திறப்பு விழா, ஏப்ரல் 9-ம் தேதி ராஜபாளையம் சாரதாம்பாள் கோயில் கும்பாபிஷேகம் ஆகியவற்றையும் நடத்தி வைக்கின்ற னர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories