ஆயர் தலைவன் அழகுமலையானின் ஆனந்த உத்ஸவம்!

kallalagar vaigai
kallalagar vaigai

மலைக்கோயில் மாயன் (மாஆயன்) திருவிழா: ஆயர்கள் அவர்களது இறைவன் மாஆயன் (மாயன்) சம்பந்தப்பட்ட விழாவாக விளங்குகிறது சித்ரா பௌர்ணமி.

துர்வாசரால் சபிக்கப்பட்ட மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கவும், ஆண்டாள் நாச்சியார் சூடிக் கொடுத்த மாலையை ஏற்றுக் கொள்ளவும் வைகை எழுந்தருள்கிறார் ஶ்ரீ அழகுமலையான்.

ஶ்ரீ அழகுமலையான் வைகை ஆற்றில் இறங்கும் பொழுது ஆண்டாள் நாச்சியார் சூடிக் கொடுத்த மாலையை அணிந்தே இறங்குகிறார். ஆண்டாள் நாச்சியார் அழகரை சுந்தரத் தோளுடையான் என்று பாடுகிறார். ஆண்டாளின் இந்த மாலையை ஏழுமலையானும், அழகுமலையானும் அணிந்தே பரவசப் படுகிறார்கள். ஏழுமலையானும், அழகுமலையானும் ஆண்டாள் தாயார் காதலித்த இடையனான கண்ணனாகவே பார்க்கப் படுகிறார்கள்.

வடமதுராவில் கண்ணனைக் கொண்டாடுவதை போல தென்மதுராவில் அழகரை ஆயர்கள் கொண்டாடுகிறார்கள்! தமிழ்நாட்டில் அதிக அளவில் மக்கள் கூடும் பிரசித்தி பெற்ற கண்ணன் கோயில், ஆண்டாள் நாச்சியார் அமர்ந்த கோலத்தில் அருளும் கோயில் அழகர்கோயில் தான்! மதுரை திருமாலிருஞ்சோலை அழகர் கோயிலில் மட்டுமே பெருமாள் பஞ்ச ஆயுதங்களை (சங்கு, சக்கரம் ,வில், கதை, வாள்) தாங்கி காட்சி தருகிறார்.

kallalagar moolvar
kallalagar moolvar

பஞ்சஆயுதங்கள் பதித்த தாலியை அணியக்கூடிய கோனார்கள் பஞ்சாரத் தாலிகட்டி (அ) பஞ்சாரங் கட்டி கோனார்கள். பஞ்சாரங் கட்டி கோனார்கள் மதுரையை (தேனி, சிவகங்கை சுற்று வட்டாரங்களை உள்ளடக்கிய மதுரை (பாண்டியநாடு) பூர்வீகமாக கொண்டவர்கள்..

கோனார்களின் தலைவனாக மாயனான ஶ்ரீ அழகுமலையான் விளங்குகிறார். இங்குள்ள கோனார்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு முதல்மொட்டை அழகருக்கு போட்டுவிட்டு பிறகு தான் குலதெய்வத்திற்கு மொட்டை போடுவார்கள். கோனார்களின் முக்கியத் தொழிலாக ஆடு, மாடு வளர்ப்பு உள்ளது. கோனார்கள் ஶ்ரீ அழகுமலையானுக்கு விரதம் இருந்து மாலை அணிந்து, திரியெடுத்து, தோப்பை எனப்படும் ஆட்டுத்தோலினால் செய்யப்பட்ட பையில் மஞ்சள் சந்தனம் கலந்த நீரை நிரப்பி அதைத் தங்கள் தலைவன் ஶ்ரீமாயன் மீது பீச்சி அடித்து மகிழ்வர்!

மதுரை மட்டுமல்லாமல் சித்ரா பௌர்ணமியன்று தென்தமிழ்நாட்டில் வைகைக் கரையோரம் அமைந்திருக்கும் அனைத்து பெருமாள் கோயிலில் உள்ள உற்சவர் அழகராக வெள்ளிக் குதிரை ஏறி யாதவர்கள் தலைமையில் வைகை ஆற்றில் எழுந்தருள்வர்!

ஏறுதழுவுதல், மகரத் திருநாள், கபடி போன்ற பல பண்பாட்டையும், கலாச்சாரங்களையும் திருவிழாக்களையும் தமிழுக்கு தந்த ஆயர்களுக்குத்தான் இத்திருநாளில் நன்றி சொல்ல வேண்டும்!

  • மதுரை கா.ராஜேஷ்கண்ணா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories