மஹாளயத்தில் சேர்க்க, தவிர்க்கப்படும் காய்கறிகள்!

tharpanam

இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பமாகிறது.

கர்ம வினைகளில் பித்ரு கடன் எனப்படும் முன்னோர் கடன் முக்கியமானது. இயற்கை எய்திய முன்னோர்களின் ஆத்மா மகிழ்வாய் நமக்குத் தொடர்ந்து ஆசீர்வாதம் வழங்கிட நாம் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கர்ம வினைகளை தவறாது செய்ய வேண்டும். இதற்கான கால கட்டமே மஹாளயபட்சம்.

ஆத்மா வை புத்ர நாம ஆஸீத்’ என்கிறது வேதம். இந்த வாக்கியம், நமக்கும் நம் முன்னோர்களுக்குமான தொடர்பைத் தெளிவுற விளக்குகிறது. நம் முன்னோர்கள் இந்த உலகை விட்டுச் சென்றாலும், அடுத்து வேறு பிறவி எடுத்தாலும், நம்மிலும் நம் சந்ததியிலும் அவர்களின் தொடர்பு தொடர்ந்து இருந்து வருவதால் நம் முன்னோர்களுக்கான நன்றியை, மரியாதையை, வணக்கத்தை, கடமையை சிராத்தம், தர்ப்பணம் முதலான சடங்காகச் செலுத்தி வருகிறோம். அத்தகைய தருணத்தின்போது, பித்ருக்களின் பசிக்கும் தாகத்துக்குமாக எள்ளையும் தண்ணீரையும் நாம் அர்ப்பணிக்கிறோம். இப்படி நமது முன்னோர் கடன் தீர்க்க உகந்த காலம் மஹாளயபட்சம்.

மறைந்த தாய் தந்தை மற்றும் அவர்களின் முன்னோர்கள் பித்ருக்கள் எனப் போற்றப்படுகிறார்கள் ஆத்மாக்கள் ஆகிப்போன முன்னோர்கள் வாழ்வது பித்ருலோகத்தில்! ஒவ்வொரு மாதமும் அமாவாசை முதலான முக்கியமான நாட்களில் அவரவரின் வீடுகளுக்குப் பித்ருக்கள் வந்து, வாசற்படிக்கு முன் நின்று, தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதித்துச் செல்கிறார்கள் என்றும், ஒருவேளை சிறப்பாகத் தர்ப்பணம் செய்யாமல் விட்டு, அதனால் அவர்கள் மனவருத்தம் அடைந்தால், அது சாபமாக மாறி நம்மைப் பாதிக்கிறது என்கிறது சாஸ்திரங்கள்.

பொதுவாக தாய் தந்தையரை இழந்தவர்கள், இறந்தவர்களின் திதியைக் கணக்கில் கொண்டு ஆண்டுதோறும் காரியங்கள் செய்வது வழக்கம்.மாதந்தோறும் அமாவாசை அன்று செய்யும் முன்னோர் கடனுக்கு கூடுதலாக செய்யப்படும் சிறப்பு, இந்த திதி வைத்து பித்ரு கடன் தீர்ப்பது. இப்படி உரிய் திதிகளில் காலங்களில் ஒருவேளை தங்களின் பித்ரு கடன் தீர்க்க இயலாதவர்கள் கட்டாயம் மஹாளயபட்சத்தின் போது நீத்தார் கடன் தீர்க்க் வேண்டும்.

புரட்டாசி மாதத்தில், பௌர்ணமியை அடுத்த தேய்பிறை நாட்கள் முழுவதுமே மிகப் பெரிய ஆற்றல் நிறைந்தவை. இவற்றை மஹாளயபட்ச புண்ய காலம் என்பார்கள். தந்தை, தாத்தா, கொள்ளுத் தாத்தா, தாயார், பாட்டி, கொள்ளுப் பாட்டி (தாயார் உயிருடன் இருந்தால் பாட்டி, கொள்ளுப் பாட்டி, எள்ளுப் பாட்டி), தாய் வழித் தாத்தா பாட்டி என மூன்று தலைமுறையினர் அனைவருக்குமாக இந்தக் காலங்களில் தர்ப்பணம் செய்யலாம்.

malayam

அப்படிச் செய்யும்போது, நமக்கும் நம் சந்ததிக்குமான நன்மைகள் அனைத்தும் கிடைக்கும் என்பது உறுதி! சிலருக்குக் கர்ப்பத்திலேயே கரு கலைந்திருக்கலாம்; சிறு குழந்தையாக இருக்கும்போதே இறந்திருக்கலாம்; சிலர், விபத்து போன்று அகால மரணம் அடைந்திருக்கலாம். அந்த ஆத்மாக்கள் அனைத்தையும் திருப்தி அடையச் செய்வதற்கான சிறந்த நாளே மஹாளயபட்சம்.

மஹாளய பட்சத்தில், அனைத்து நாட்களிலும் தர்ப்பணம் செய்வது விசேஷம். இயலாதவர்கள், மஹாளய அமாவாசை அன்றாவது பக்தியுடனும், நம்பிக்கையுடனும் முன்னோர் கடனை அளிப்பது மிகுந்த பலனைத் தரும். மஹாளய காலத்தில் அன்னதானமும் பசுவுக்கு அகத்திக் கீரை, புல், பழமும் அளிக்கலாம். இதனால் பித்ரு தோஷம் நீங்கும். புண்ணிய க்ஷேத்திரங்களுக்கோ, புண்ணிய நதிக்கரைகளிலோ பித்ரு கடன் தீர்க்க இயலாதவர்கள் , அவரவர் வசிக்கும் இடத்துக்கு அருகில் உள்ள நீர்நிலைகளில் தங்களது கடமையை நிறைவேற்றலாம்.
மஹாளயபட்ச அமாவாசையில் தர்ப்பணம் முடிந்ததும் நிறைவாக, ‘ஏஷாம் ந மாதா ந பிதா… குசோதகை:’ என்று மந்திரம் சொல்லப்படும்.
இதன் பொருள் உணர்ந்து சொல்லும் போது நம்மை மீறி நமது மனம் இளகிடும். இதோ அதன் பொருள்

pithru-kadan

‘எவரொருவருக்குத் தாயில்லையோ, தந்தையில்லையோ, பங்காளிகள் இல்லையோ, நண்பர்கள் இல்லையோ… இதுபோன்று யாருமே அற்ற அநாதை என்று சொல்லக்கூடியவர்களுக்கு, நான் அளிக்கும் இந்த எள்ளும் தண்ணீருமானது திருப்தியை அளிக்கட்டும்’

பெருமைக்குரியது மாத்திரமல்ல மானுட இனத்திற்கே மகத்தான வழிகாட்டும் பொருளுக்குரியது நமது இந்து தர்மம். மஹாளயபட்ச அமாவாசை மூன்னோர் கடன் தீர்ப்போம். வாழ்க்கையின் சகல நன்மைகள் பெறுவோம்.

இந்த முறை மாளயபட்ஷம் செப்டம்பர் 2 அதாவது இன்றிலிருந்து செப்டம்பர் 17 வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

மஹாளயத்தின் போது என்ன காய்கறிகள் தவிர்க்க வேண்டும.

vegitable
  1. முட்டகோஸ்
    2.நூக்கல்
    3.முள்ளங்கி
    4.கீரை
    5.பீன்ஸ்
    6.உருளைகிழங்கு
    7.காரட்
    8.கத்தரிக்காய்
    9.வெண்டைக்காய்
    10.காலிஃபளவர்
    11.ப்ரெக்கோலி
    12.பட்டாணி
    13.வெங்காயம்
    14.பூண்டு
    15.பெருங்காயம்
    16.தக்காளி
    17.கத்தரிக்கா
    18.சொள சொள
    19.சுரக்காய்
    20.வெள்ளை பூசணி
    21.மஞ்சள் பூசணி
    22.முருங்கக்காய்
    23.கோவக்காய்
    24.பீட்ருட்
    25.பச்சைமிளகாய்

மஹாளயத்தின் போது சேர்க்க வேண்டிய காய்கறிகள் :

அவரக்காய்
புடலங்காய்
பயத்தங்காய்
வாழத்தண்டு
வாழைப்பூ
வாழக்காய்
சக்கரவள்ளி
சேனை
சேப்பங்கிழங்கு
பிரண்டை
மாங்காய்
இஞ்சி
நெல்லிக்காய்
மாங்கா இஞ்சி
பாரிக்காய்
பாகற்காய்
மிளகு
கரிவேப்பிலை
பாசிப்பருப்பு
உளூந்து
கோதுமை
வெல்லம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Topics

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

Entertainment News

Popular Categories