December 6, 2025, 7:13 AM
23.8 C
Chennai

மகான்களின் மாண்பு: ஆச்சார்யாள் அருளமுதம்!

abinav vidhya theerthar - 2025

ஒரு சமயம் தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து அமிர்தத்தை பெறுவதற்காக பாற்கடலை கடைந்தார்கள். இதற்கு மேரு மலைதான் மத்தாக பயன்பட்டது. விஷ்ணு ஆமை ரூபத்தில் வந்து மலையை தாங்கி பிடித்துக் கொண்டார். வாசுகி கயிறாக இருக்க உதவியது. வால் பகுதியை தேவரும் தலைப்பகுதியை அசுரரும் பிடித்து கடைய ஆரம்பித்தார்கள். துரதிஷ்டவசமாக ஆலகாலம் எனும் கொடிய விஷம் பாற்கடலில் முதலில் வெளிப்பட்டது. விஷமானது எல்லா உலகத்திலும் பீதியை உண்டு பண்ணியது. இதனால் அண்ட சராசரங்கள் யாவும் அழிந்து விடக்கூடிய அபாயம் ஏற்பட்டது. இத்தருணத்தில் சிவபெருமான் அங்கே தோன்றினார். சிறிதளவும் பயமின்றி உள்ளங்கையில் வைத்துக்கொண்டு சுவையான பாயாசம் குடிப்பது போல அதை உறிஞ்சி குடித்தார். தமது தேகத்தின் உள்ளே வசிக்கும் எண்ணற்ற ஜீவராசிகள் அவ்விஷத்தால் துன்புறும் என நினைத்து கருணை கடலான சிவபெருமான் விஷத்தை உள்ளே விடாமல் கழுத்திலேயே நிறுத்திக்கொண்டார். மகான்களின் செயல்களும் இப்படித்தான் இருக்கும் மற்றவர்களின் நன்மைக்காக அவர்கள் தங்கள் நலன்களை தியாகம் செய்ய தயாராக இருப்பார்கள்.

ஒருவன் நதிக்கரையில் அமர்ந்து கொண்டு தனது மாலை வேளை சந்தியாவந்தனம் செய்து கொண்டிருந்தான். அப்பொழுது உதவிக்காக யாரோ கூப்பிடும் குரல் கேட்டு அவன் கவனம் சிதைந்தது. ஒரு சிறுவன் நீரில் சிக்கி தவித்துக் கொண்டிருப்பதை பார்த்தான். மரணத்தின் பிடியில் இருந்து தன்னை காப்பாற்றுமாறு அந்த பையன் கூச்சலிட்டான். இந்த மனிதனோ நான் இப்பொழுது சந்தியாவந்தனம் செய்து கொண்டிருக்கிறேன் பாதியில் எப்படி எழுந்து போக முடியும் என்று நினைத்தான். அந்தப் பையன் மூச்சுத்திணறி இறக்கும் தருவாயில் இருந்தான். அப்பொழுதும் இந்த மனிதன் தனது இருக்கையை விட்டு அசையாமல் இப்பொழுது நான் எழுந்து செல்வது தகாத செயலாகும். இந்த பையன் நீரில் மூழ்கி கொண்டிருப்பது உண்மைதான். ஆனால் துரதிஷ்டவசமாக என்னால் இப்பொழுது அவனை காப்பாற்ற முடியாது என்று எண்ணி சந்தியாவந்தனம் தொடர்ந்தான். சற்று நேரத்தில் அந்த பையன் ஜலசமாதி அடைந்தான்.

பிறருக்கு உதவி புரியும் நிலையில் நாம் இருந்தால் அதனை செய்வது தான் சரியாகும். சந்தியாவந்தனம் என்பது நல்ல காரியம்தான் சாதாரண சூழ்நிலைகளில் செய்து கொண்டிருக்கும் போது பாதியில் எழுந்து சென்று வேறு வேலையை கவனிப்பது என்பது தவறு. ஆனால் இப்படிப்பட்ட ஆபத்தான சந்தர்ப்பங்களில் அவர் எழுந்து சென்று அவனைக் காப்பாற்றி விட்டு பிறகு சந்தியாவந்தனத்தைத் தொடர்ந்திருக்க வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories