February 21, 2026, 11:19 PM
26.7 C
Chennai

மகான்களின் மாண்பு: ஆச்சார்யாள் அருளமுதம்!

abinav vidhya theerthar - 2026

ஒரு சமயம் தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து அமிர்தத்தை பெறுவதற்காக பாற்கடலை கடைந்தார்கள். இதற்கு மேரு மலைதான் மத்தாக பயன்பட்டது. விஷ்ணு ஆமை ரூபத்தில் வந்து மலையை தாங்கி பிடித்துக் கொண்டார். வாசுகி கயிறாக இருக்க உதவியது. வால் பகுதியை தேவரும் தலைப்பகுதியை அசுரரும் பிடித்து கடைய ஆரம்பித்தார்கள். துரதிஷ்டவசமாக ஆலகாலம் எனும் கொடிய விஷம் பாற்கடலில் முதலில் வெளிப்பட்டது. விஷமானது எல்லா உலகத்திலும் பீதியை உண்டு பண்ணியது. இதனால் அண்ட சராசரங்கள் யாவும் அழிந்து விடக்கூடிய அபாயம் ஏற்பட்டது. இத்தருணத்தில் சிவபெருமான் அங்கே தோன்றினார். சிறிதளவும் பயமின்றி உள்ளங்கையில் வைத்துக்கொண்டு சுவையான பாயாசம் குடிப்பது போல அதை உறிஞ்சி குடித்தார். தமது தேகத்தின் உள்ளே வசிக்கும் எண்ணற்ற ஜீவராசிகள் அவ்விஷத்தால் துன்புறும் என நினைத்து கருணை கடலான சிவபெருமான் விஷத்தை உள்ளே விடாமல் கழுத்திலேயே நிறுத்திக்கொண்டார். மகான்களின் செயல்களும் இப்படித்தான் இருக்கும் மற்றவர்களின் நன்மைக்காக அவர்கள் தங்கள் நலன்களை தியாகம் செய்ய தயாராக இருப்பார்கள்.

ஒருவன் நதிக்கரையில் அமர்ந்து கொண்டு தனது மாலை வேளை சந்தியாவந்தனம் செய்து கொண்டிருந்தான். அப்பொழுது உதவிக்காக யாரோ கூப்பிடும் குரல் கேட்டு அவன் கவனம் சிதைந்தது. ஒரு சிறுவன் நீரில் சிக்கி தவித்துக் கொண்டிருப்பதை பார்த்தான். மரணத்தின் பிடியில் இருந்து தன்னை காப்பாற்றுமாறு அந்த பையன் கூச்சலிட்டான். இந்த மனிதனோ நான் இப்பொழுது சந்தியாவந்தனம் செய்து கொண்டிருக்கிறேன் பாதியில் எப்படி எழுந்து போக முடியும் என்று நினைத்தான். அந்தப் பையன் மூச்சுத்திணறி இறக்கும் தருவாயில் இருந்தான். அப்பொழுதும் இந்த மனிதன் தனது இருக்கையை விட்டு அசையாமல் இப்பொழுது நான் எழுந்து செல்வது தகாத செயலாகும். இந்த பையன் நீரில் மூழ்கி கொண்டிருப்பது உண்மைதான். ஆனால் துரதிஷ்டவசமாக என்னால் இப்பொழுது அவனை காப்பாற்ற முடியாது என்று எண்ணி சந்தியாவந்தனம் தொடர்ந்தான். சற்று நேரத்தில் அந்த பையன் ஜலசமாதி அடைந்தான்.

பிறருக்கு உதவி புரியும் நிலையில் நாம் இருந்தால் அதனை செய்வது தான் சரியாகும். சந்தியாவந்தனம் என்பது நல்ல காரியம்தான் சாதாரண சூழ்நிலைகளில் செய்து கொண்டிருக்கும் போது பாதியில் எழுந்து சென்று வேறு வேலையை கவனிப்பது என்பது தவறு. ஆனால் இப்படிப்பட்ட ஆபத்தான சந்தர்ப்பங்களில் அவர் எழுந்து சென்று அவனைக் காப்பாற்றி விட்டு பிறகு சந்தியாவந்தனத்தைத் தொடர்ந்திருக்க வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

Topics

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Entertainment News

Popular Categories