March 25, 2025, 1:53 PM
32.4 C
Chennai

பகவத்கீதை தினம்: வாழ்க்கை நலமாக.. செயல்படுத்து!

பகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனைகள்

வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே.

தேவைக்கு செலவிடு.

அனுபவிக்க தகுந்தன அனுபவி.

இயன்ற வரை பிறருக்கு உதவி செய்.

ஜீவகாருண்யத்தை கடைபிடி.

இனி அநேக ஆண்டுகள் வாழப்போவ தில்லை.

உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை.

மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.

உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும்.

உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு.

உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே.

உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு.

அவ்வப்போது பரிசுகள் அளி.

அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே.

பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட, பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவ னிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்!

அதைப்போல, பெற்றோரை மதிக்காத குழந்தைகள், உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம்.

உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக வேண்டுமென, வேண்டிக் கொள்ளலாம். பொறுத்துக்கொள்.

அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்; கடமை மற்றும் அன்பை அறியார்.

“அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி” என அறிந்து கொள்.

இருக்கும் போதே குழந்தைகளுக்கு கொடு.

ஆனால், நிலைமையை அறிந்து, அளவோடு கொடு. எல்லா வற்றையும் தந்து விட்டு, பின் கை ஏந்தாதே.

“எல்லாமே நான் இறந்த பிறகு தான்” என, உயில் எழுதி வைத்திராதே. நீ எப்போது இறப்பாய் என எதிர் பார்த்து காத்திருப்பர்.

எனவே நினைப்பதை மட்டும் முதலில் கொடுத்து விடு; மேலும் தர வேண்டியதை, பிறகு கொடு.

மாற்ற முடியாததை, மாற்ற முனையாதே.

மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே!

அமைதியாக, மகிழ்ச்சியோடு இரு.

பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.

நண்பர்களிடம் அளவளாவு.

நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல் நலம் பேணி, இறை பக்தி கொண்டு, குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்து உறவாடி, மன நிறைவோடு வாழ்.

இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண் டுகள், சுலபமாக ஓடி விடும்!

வாழ்வை கண்டு களி!

ரசனையோடு வாழ்!

வாழ்க்கை வாழ்வதற்கே!

நான்கு நபர்களை புறக்கணி!
மடையன், சுயநலக்காரன், முட்டாள், ஓய்வாக இருப்பவன்.

நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே!

பொய்யன், துரோகி, பொறாமைக்காரன், மமதை பிடித்தவன்

நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே!

அனாதை, ஏழை, முதியவர், நோயாளி.

நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே!
மனைவி, பிள்ளைகள், குடும்பம், சேவகன்.

நான்கு விசயங்களை ஆபரணமாக அணி!
பொறுமை, சாந்த குணம், அறிவு, அன்பு.

நான்கு நபர்களை வெறுக்காதே!
தந்தை, தாய், சகோதரன், சகோதரி.

நான்கு விசயங்களை குறை!
உணவு, தூக்கம், சோம்பல், பேச்சு.

நான்கு விசயங்களை தூக்கிப்போடு!
துக்கம், கவலை, இயலாமை, கஞ்சத்தனம்.

நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு!
மனத்தூய்மை உள்ளவன், வாக்கை நிறைவேற்றுபவன், கண்ணியமானவன், உண்மையாளன்.

நான்கு விசயங்கள் செய்!
தியானம், யோகா, நூல் வாசிப்பு, உடற்பயிற்சி, சேவை செய்தல்.
வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடைபிடியுங்கள்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

IPL 2025: ஆச்சரியப்படுத்திய அதிரடி; ஆசுதோஷ் சர்மா விளாசலில் டெல்லி த்ரில் வெற்றி

ஐ.பி.எல் 2025 - – லக்னோ vs டெல்லி கேபிடல்ஸ் – விசாகப்பட்டினம் – 24.03.2025

பஞ்சாங்கம் மார்ச் 25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

குஜராத் சம்பவம் பின்னணி குறித்து மனம் திறந்த பிரதமர் மோடி!

பாரதம் முழுக்கவும் பெரும்புயல் வீசியது… வாழ்வா சாவா பிரச்சனை.  அடுத்து 2000ஆம் ஆண்டிலே தில்லியின் செங்கோட்டையில் தீவிரவாதத் தாக்குதல். 

பாரதத்துடன் சம கால கலாசாரச் செழுமை கொண்ட சீனாவுடன் நல்ல தொடர்பில் இருப்போம்: பிரதமர் மோடி!

பாரதத்தினுடையதாக இருந்தது.  மேலும் நான் ஏற்றுக் கொள்கிறேன், இத்தனை… சக்தியுடைய… தொடர்புகள் இருந்தன, இத்தனை ஆழமான கலாச்சாரத் தொடர்புகள் இருந்தன.

அதிபர் ட்ரம்ப் என் மீது வைத்த நம்பிக்கையின் பிரதிபலிப்பு அது… : பிரதமர் மோடி!

குடியரசுத் தலைவர் ட்ரம்பை அவருடைய முதல் ஆட்சியின் போதும் நான் சந்தித்தேன்.  இரண்டாவது ஆட்சியின் போதும் பார்த்தேன்.  இந்த முறை முன்பை விட அதிகமாக அவர் தயாராக இருக்கிறார். 

Topics

IPL 2025: ஆச்சரியப்படுத்திய அதிரடி; ஆசுதோஷ் சர்மா விளாசலில் டெல்லி த்ரில் வெற்றி

ஐ.பி.எல் 2025 - – லக்னோ vs டெல்லி கேபிடல்ஸ் – விசாகப்பட்டினம் – 24.03.2025

பஞ்சாங்கம் மார்ச் 25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

குஜராத் சம்பவம் பின்னணி குறித்து மனம் திறந்த பிரதமர் மோடி!

பாரதம் முழுக்கவும் பெரும்புயல் வீசியது… வாழ்வா சாவா பிரச்சனை.  அடுத்து 2000ஆம் ஆண்டிலே தில்லியின் செங்கோட்டையில் தீவிரவாதத் தாக்குதல். 

பாரதத்துடன் சம கால கலாசாரச் செழுமை கொண்ட சீனாவுடன் நல்ல தொடர்பில் இருப்போம்: பிரதமர் மோடி!

பாரதத்தினுடையதாக இருந்தது.  மேலும் நான் ஏற்றுக் கொள்கிறேன், இத்தனை… சக்தியுடைய… தொடர்புகள் இருந்தன, இத்தனை ஆழமான கலாச்சாரத் தொடர்புகள் இருந்தன.

அதிபர் ட்ரம்ப் என் மீது வைத்த நம்பிக்கையின் பிரதிபலிப்பு அது… : பிரதமர் மோடி!

குடியரசுத் தலைவர் ட்ரம்பை அவருடைய முதல் ஆட்சியின் போதும் நான் சந்தித்தேன்.  இரண்டாவது ஆட்சியின் போதும் பார்த்தேன்.  இந்த முறை முன்பை விட அதிகமாக அவர் தயாராக இருக்கிறார். 

பாகிஸ்தானுடன் முதலில் அமைதிக்காகவே கை கொடுத்தேன்: பிரதமர் மோடி!

நல்ல தொடக்கம் ஆகட்டும் என்று விரும்பினேன்.  ஆனால்… ஒவ்வொரு முறையும் நல்ல முயற்சியின் விளைவுகள், எதிர்மறையாகவே இருந்த்து.  அவர்களுக்கு நல்லபுத்தி ஏற்பட வேண்டும்,

பாரதத்தை இணைக்கும் ஒரே கலாசார இழை! : பிரதமர் மோடியின் கலந்துரையாடலில்!

காந்தியடிகளின் செயல்பாடுகளின் தாக்கத்தை, இன்றும் கூட பாரத நாட்டின் மீது, ஏதோ ஒரு வகையிலே… புலப்படுகிறது.  மேலும் காந்தியடிகள், எதை உபதேசித்தாரோ அதை வாழ முயற்சி செய்தார். 

தேசப் பணியில் ஈடுபட போடப்பட்ட வித்து: பிரதமர் மோடியின் கலந்துரையாடலில்!

பொறுப்புகள் காரணமாக அவரால் வர முடியவில்லை என்றாலும் நான் முதல்வராக இருந்த போது வந்திருக்கிறார்.  அவருடைய ஆசிகள் எனக்கு நிரம்பக் கிடைத்திருக்கிறது.  அவர் தான் எனக்கு வழிகாட்டினார்,

Entertainment News

Popular Categories