அறப்பளீசுர சதகம்: யார் உடன்பிறப்பு?

arapaliswarar - 2026

உடன் பிறப்பு

கூடப் பிறந்தவர்க் கெய்துதுயர் தமதுதுயர்
கொள்சுகம் தம்சு கமெனக்
கொண்டுதாம் தேடுபொருள் அவர்தேடு பொருள்
அவர்கொள் கோதில்புகழ் தம்பு கழெனத்,
தேடுற்ற அவர்நிந்தை தம்நிந்தை தம்தவம்
தீதில்அவர் தவமாம் எனச்
சீவன் ஒன்றுடல்வே றிவர்க்கென்ன, ஐந்தலைச்
சீறரவம் மணிவாய் தொறும்
கூடுற்ற இரையெடுத் தோருடல் நிறைத்திடும்
கொள்கைபோல் பிரிவின் றியே
கூடிவாழ் பவர்தம்மை யேசகோ தரரெனக்
கூறுவது வேத ருமமாம்;
ஆடிச் சிவந்தசெந் தாமரைப் பாதனே!
அண்ணல்எம தருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

ஆடிச் சிவப்பான
செந்தாமரை மலரடிகளையுடையவனே! தலைவனாகிய, எமது தேவனே!
உடன் பிறந்தவர்களுக்கு நேர்ந்த வருத்தம் தமது வருத்தம்
அவர்கள் கொள்ளும் இன்பம் தம் இன்பம் என்றும், தாம் முயன்று சேர்க்கும் பொருள் அவர்கள் சேர்க்கும் பொருள்,
அவர்கள் கொண்ட குற்றமற்ற புகழ் தம்முடைய புகழ் என்றும், அவர்கள் கொண்ட பழிப்பு தம்முடைய பழிப்பு, தம்முடைய தவம் குற்றமற்ற அவருடைய தவமாகும் என்றும், இவர்களுக்கு உயிர் ஒன்று, மெய் மட்டும் வேறு என்றும், சீறுகின்ற பாம்பின்
மாணிக்கங்களையுடைய ஐந்து தலைகளிலுமுள்ள வாய்தோறும், கிடைத்த
உணவை யெடுத்து ஒருடலை நிறைக்கின்ற இயற்கைபோலவும், பிரிவேயில்லாமல், கூடிவாழ்கின்றவர்களையே உடன்பிறந்தோர்
என்று கூறுவது அறமாகும்.

உடன் பிறந்த சகோதரர்கள் இவ்வாறு இருக்க வேண்டும் என்பதாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

Topics

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories