அறப்ளீஸ்வர சதகம்: எப்படி இருந்தாலும் பயன் இல்லை!

arapaliswarar - 2026

இருநிலையினும் பயனற்றவை

குணம்அற்ற பேய்முருங் கைத்தழை தழைத்தென்ன?
குட்டநோய் கொண்டு மென்ன?
குரைக்கின்ற நாய்மடி சுரந்தென்ன ? சுரவாது
கொஞ்சமாய்ப் போகில் என்ன?
மணம்அற்ற செம்முருக் கதுபூத் தலர்ந்தென்ன?
மலராது போகில் என்ன?
மதுரம்இல் லாஉவர்க் கடல்நீர் கறுத்தென்ன?
மாவெண்மை யாகில் என்ன?
உணவற்ற பேய்ச்சுரை படர்ந்தென்ன? படரா
துலர்ந்துதான் போகி லென்ன?
உதவாத பேர்க்குவெகு வாழ்வுவந் தாலென்ன?
ஓங்கும்மிடி வரில்என் னகாண்?
அணியுற்ற பைங்கொன்றை மாலிகா பரணனே!
ஆதியே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

அழகான புதிய கொன்றைமாலையை அணிகலனாகக் கொண்டவனே!,
முதல்வனே!, அருமை தேவனே!, நல்ல குணம் இல்லாத பேய்
முருங்கை தழைத்தால் என்ன பயன்?,
குட்டநோய் அடைந்தாலும் என்ன பயன்?, குரைக்கும் நாயின் மடியிற் (பால்) சுரந்தால் என்ன
பயன்?, பெருகாமற் கொஞ்சமாக
இருந்தால்தான் என்ன பயன்?, மணமில்லாத செம்முருக்கின் மலர் நன்கு மலர்ந்து
என்ன பயன்?, மலராமற் குவிந்திருந்தால்தான் என்ன பயன்?, சுவையில்லா உப்புக்கடலின் நீர்
கருநிறமாக இருந்தால் என்ன பயன்?, தூய
வெண்மையாக ஆனால்தான் என்னபயன்?, உண்ணத்தகாத பேய்ச்சுரைக்கொடி படர்ந்து என்ன
பயன்?, படராமல்
காய்ந்துபோனால்தான் என்ன பயன்?, பிறர்க்குப்பயன்படாதவர்கட்குச் சிறந்த வாழ்வு வந்தால்
என்ன பயன்?, பெரிய வறுமை
வந்தால்தான் என்ன பயன்?

மற்றவர்க்குப் பயன்படாப் பொருளின் வாழ்வினும் தாழ்வினும் எப்பயனும் பிறர்க்கு இல்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories