December 5, 2025, 5:23 PM
27.9 C
Chennai

மைக்ரோசாஃப்ட் எட்ஜ் ப்ரவுஸர் வைத்திருக்கீங்களா..! எச்சரிக்கை!

laptop - 2025

நீங்கள் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் ப்ரவுஸர்-ஐ பயன்படுத்துகிறீர்கள் என்றால், இந்திய அரசின் இந்த ‘அலெர்ட் மெசேஜ்’ உங்களுக்கானது தான்!

ஒருவேளை மைக்ரோசாஃப்ட் எட்ஜ்-ஐ நீங்கள் பெரிதும் பயன்படுத்தாவிட்டால் கூட, அது உங்கள் கம்ப்யூட்டரில் / லேப்டாப்பில் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருந்தாலும் கூட, இந்த எச்சரிக்கை உங்களுக்கு பொருந்தும்.

இந்திய அரசாங்கத்தின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (Ministry of Electronics and Information Technology) கம்ப்யூட்டர் எமெர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (Computer Emergency Response Team; CERT-In) ஆனது மைக்ரோசாஃப்ட் எட்ஜில் ‘அதிக ஆபத்துள்ள’ பல பாதிப்புகளைக் கண்டறிந்துள்ளது.

நீங்கள் மைக்ரோசாஃப்ட் எட்ஜின் 98.0.1108.55 வெர்ஷனை விட பழைய ப்ரவுஸர்-ஐ பயன்படுத்தும் ஒரு யூசர் என்றால், இந்த இந்திய அரசாங்கத் துறையின் எச்சரிக்கை உங்களுக்கானது தான்.

வெளியான அறிக்கையின்படி, மைக்ரோசாஃப்ட் எட்ஜின் பழைய வெர்ஷன்களில், சைபர் கிரிமினல்கள் மற்றும் ஹேக்கர்கள், யூசர்களின் டிவைஸ்களை அணுக அனுமதிக்கும் பல சிஸ்டம் வல்னபரிட்டிஸ் (system vulnerabilities) உள்ளன.

மைக்ரோசாஃப்ட் எட்ஜில் உள்ள இந்த ‘பாதிப்புகள்’ஆனது ஒரு யூசர் இந்த ப்ரவுஸரைப் பயன்படுத்தாதபோதும் கூட ஃபைல் மேனேஜருக்கான அணுகலை அனுமதிக்கிறது.

மேலும் எட்ஜின் டேப் க்ரூப்களில் மெமரி பஃபர் ஓவர்ஃப்ளோ ஆவது, யூஸர் ஆக்டிவ் ஆக இல்லாதபோதும் கூட வெப்ஸ்டோர் ஏபிஐ-க்கான அணுகல் போன்ற பிற சிக்கல்களை மைக்ரோசாஃப்ட் எட்ஜ்-இன் பழைய வெர்ஷன் சந்தித்து வருகிறது.

மோசமான விஷயம் என்னவென்றால். இந்த சிக்கல்கள் ஆனது, சைபர் கிரிமினல்கள் மற்றும் ஹேக்கர்களுக்கு, பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை எளிதாகக் கடந்து செல்ல உதவும்.

ஆக மைக்ரோசாஃப்ட் எட்ஜ் யூசர்ர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?

அதிகப்படியான ஆபத்துள்ள இந்த வல்னபரிட்டியை தவிர்ப்பதற்கான ஒரே தீர்வு, உங்கள் ப்ரவுஸர்-ஐ லேட்டஸ்ட் மைக்ரோசாப்ட் எட்ஜ் ஸ்டேபிள் சேனலுக்கு (வெர்ஷன் 98.0.1108.55) அப்டேட் செய்வதே ஆகும்.

மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி அப்டேட் டாக்-இன் படி, “இந்த அப்டேட் க்ரோமியம் (Chromium) ப்ராஜெக்டின் சமீபத்திய செக்யூரிட்டி அப்டேட்களை உள்ளடக்கியது. மேலும் இந்த அப்டேட்டில், க்ரோமியம் டீமால் புகாரளிக்கப்பட்ட CVE-2022-0609க்கான பக் ஃபிக்ஸ்-களும் (Bug Fixes) செய்யப்பட்டுள்ளன.

பக்-ஐ ஃபிக்ஸ் செய்வது மட்டுமின்றி, மைக்ரோசாஃப்ட் எட்ஜின் இந்த புதிய அப்டேட் ஆனது புதிய எட்ஜ் பார் என்கிற மேம்படுத்தப்பட்ட செக்யூரிட்டி மோட் உடன் வருகிறது. எனவே தான், கம்ப்யூட்டர் எமெர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் ஆனது உங்கள் மைக்ரோசாஃப்ட் ப்ரவுஸர்-ஐ லேட்டஸ்ட் வெர்ஷன் உடன் அப்டேட் செய்யச்சொல்லி எச்சரித்து உள்ளது.

மைக்ரோசாஃப்ட் எட்ஜ் ப்ரவுஸர்-ஐ லேட்டஸ்ட் வெர்ஷன் உடன் அப்டேட் செய்வது எப்படி?

  1. முதலில், உங்கள் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் ப்ரவுஸர்-ஐ திறக்கவும்.
  2. பின்னர், உங்கள் ப்ரவுஸர் ஸ்கீனின் மேல் வலது மூலையில் உள்ள ‘த்ரீ டாட்’ ஆப்ஷனை (மூன்று புள்ளிகளை) கிளிக் செய்து பின் ‘செட்டிங்ஸ்’ விருப்பத்திற்குள் நுழையவும்.
  3. இப்போது ஹெல்ப் அன்ட் ஃபீட்பேக் (Help and Feedback) என்பதற்கு செல்லவும்.
  4. பிறகு, செட்டிங்ஸில் ‘அபௌட் மைக்ரோசாஃப்ட் எட்ஜ்’ (About Microsoft Edge) என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் ஆனது அப்டேட் ஆகியுள்ள நிலையில் இருப்பதைக் காட்டினால், நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை.
  5. மாறாக ‘அப்டேட் உள்ளது’ என்கிற நோட்டிஃபிக்கேஷன் இருந்தால், டவுன்லோட் என்பதைக் கிளிக் செய்து லேட்டஸ்ட் அப்டேட்டை இன்ஸ்டால் செய்யவும்.

6: பின்னர் மைக்ரோசாஃப்ட் எட்ஜை ‘ரீலான்ச்’ (Relaunch) செய்யவும். அவ்வளவு தான், உங்கள் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் ப்ரவுஸர் ஆனது லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் ஆகி இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories