இன்று பகவத் ஸ்ரீராமானுஜர் அவதரித்த சுபதினம்..

Published:

இன்று சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரம் இன்று அதிகாலை துவங்கி நாளை காலை 7.52வரை திருவாதிரை உள்ளது. இதே நாளில் 1017ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் பகவத் ராமானுஜர் அவதரித்தார்.

ராமானுஜர் அருளிய ஸ்ரீபாஷ்யம் என்பது வியாச பகவான் அருளிய பிரம்ஹ சூத்திரத்துக்கான உரையாகும். ஸ்ரீபாஷ்யம் நான்கு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

அவை1. ஸம்ந்வய அத்தியாயம் –
அனைத்து வேதங்களும் பரமபுருஷனாகிய ஸ்ரீமந் நாராயணனைக் குறித்தே பேசுகின்றன. நம் வாழ்வின் குறிக்கோள் அவனே என்று கூறுகின்றது. 2. அவிரோத அத்தியாயம் – மற்ற ஐந்து தர்சனங்களும் கூறுகின்றபடி, ஸ்ரீமந் நாராயணன் ஒருவன் மட்டும் அனைத்தையும் நிகழ்த்தவில்லை என்ற வீண்வாதம் மறுக்கப்பட்டு, தகர்க்கப்படுகிறது. 3. ஸாதனா அத்தியாயம் – இப்படிப்பட்ட பரம புருஷனை அடையும் வழிமுறைகள், முக்தி பெறும் உபாயங்கள் கூறப்படுகின்றன. 4. பலா அத்தியாயம் – பலா என்றால் பழம் ஆகும். நாம் அவனை அடைந்த பின்னர், நமக்கு கிடைக்கின்ற நன்மைகள் கூறப்படுகின்றன.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.08 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

சுவாமியின் 1005ம் ஆண்டு அவதார தினம் அனைத்து திவ்யதேசங்களிலும் இன்று சாற்றுமுறை நடந்து கோஷ்டியாகிறது.
ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீராமானுஜர் ஆலயம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயில் திருவரங்கம் உட்பட முக்கிய திவ்யதேசங்களில்
ஸ்ரீராமானுஜருக்கு சிறப்பு நிகழ்வுகள்
கோஷ்டியாகிறது.

IMG 20220505 WA0041 - 2026
IMG 20220505 WA0019 - 2026
IMG 20220505 WA0018 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img