இன்று ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி சுபதினம்..

FB IMG 1660870191459 - 2026
FB IMG 1660870158730 - 2026
IMG 20220805 WA0008 - 2026

இன்று (19 .8.2022) வெள்ளிக்கிழமை கிருஷ்ண ஜயந்தி. மாவிலைத் தோரணம் கட்டி, வாசல் தொடங்கி பூஜையறை வரை, கிருஷ்ணர் பாதம் வரைந்து, பூஜை செய்யும் அஷ்டமி ரோகிணி நிறைந்த சுபதினம். பிள்ளை இல்லாத வீடுகளுக்கு குழந்தைச் செல்வம் தந்தருள்வான் கோபாலன். வீட்டின் தரித்திர நிலையையே மாற்றி, சகல ஐஸ்வர்யங்களையும் தருவான் ஸ்ரீகிருஷ்ணன் .இதை தருவதற்காகவே வருவான் மாயக்கண்ணன் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

கிருஷ்ண ஜயந்தியான இன்று, கிருஷ்ணர் பாதம் பெரும்பாலான இல்லங்களில் மாகோலத்தில் அலங்கரிக்கிறது.

கிருஷ்ண ஜயந்தி அன்று, வீடுகளில் வாசலில் இருந்து பூஜையறை வரை, மாக்கோலத்தில் கிருஷ்ணர் பாதம் வரைந்து, பண்டிகையைக் கொண்டாடுவது வழக்கமாக கொண்டுள்ளனர் இந்துக்கள்.

கிருஷ்ண ஜயந்தி என்பது கிருஷ்ணரின் அவதார சுபதினம். ஆவணி மாதத்தில், தேய்பிறை அஷ்டமி நாளில், ரோகிணி நட்சத்திரத்தில், பகவான் கிருஷ்ணரின் திரு அவதாரம் நிகழ்ந்தது எனத் தெரிவிக்கிறது புராணம்.எனவே அந்தநாளில், நம் வீடுகளில் கிருஷ்ண ஜயந்தி, கிருஷ்ணரின் பிறந்தநாள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

அந்த நாளில், வீட்டை சுத்தப்படுத்தி, பூஜையறையை சுத்தப்படுத்தி, பூஜைக்குத் தயாராக வேண்டும்.
மாவிலை என்பது மகாலக்ஷ்மியின் அம்சம். எனவே வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுவது வழக்கம். அதேபோல், பால், வெண்ணெய், தயிர் கொண்டு அன்னம் மற்றும் நைவேத்தியங்கள் தயாரிப்பதும் நடைமுறையில் உள்ளது. அதாவது, கிருஷ்ணருக்குப் பிடித்தவற்றைக் கொண்டே நைவேத்தியம் செய்யப்படுகிறது.

சரி… இந்தத் தருணத்தில், கிருஷ்ண ஜயந்தி பண்டிகை யன்று, வீட்டில் கிருஷ்ணர் பாதம் வரைவது ஏன்?

குழந்தை கிருஷ்ணர், இந்த வீடு அந்த வீடு என்று பாரபட்சமெல்லாம் பார்க்கமாட்டாராம். யார் வீட்டுக்குள்ளாவது உறியில் வைத்துள்ள வெண்ணெய் யை கல்லால் அடித்து, அந்த வெண்ணையைச் சாப்பிட்டுவிடுவாராம். அப்படி அவர் சாப்பிடுவதற் காக உடைக்கப்பட்ட வெண்ணெய் உறியில் இருந்து, வெண்ணெயெல்லாம் தரையில் சிந்தியிருக்கும்.

FB IMG 1660870132059 - 2026
FB IMG 1660870106704 - 2026

பாலன் கிருஷ்ணன்,அதையெல்லாம் மிதித்துக் கொண்டு, வெண்ணெய்யை வாயில் திணித்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே ஓடி வருவார். கண்ணனின் பாத அச்சு, அப்படியே பதிந்திருக்கும்.
அந்த உறியை உடைத்து வெண்ணெயைத் திருடியது கண்ணனே என்பது எல்லோருக்கும் தெரிந்துவிடும். ஆனால், கண்ணனின் குறும்புகளையும் சேட்டைக ளையும் கோபியர் உட்பட எல்லோருமே ரசித்தார்கள்.

பகவானின் பிறப்பு நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் ஆவணி தேய்பிறை அஷ்டமி நாளில், ரோகிணி நட்சத்திர வேளையில், வீடுகளில் கிருஷ்ண ஜயந்தி யைக் கொண்டாடத் தயாராவார்கள் பக்தர்கள். அப்போது, பச்சரிசியை அரைத்து ஊறவைப்பார்கள். அதில் லேசாக தண்ணீர் விட்டுக் கலந்து விடுவார்கள்.
வீட்டையெல்லாம் சுத்தம் செய்த பிறகு, வாசலில் மாவிலைத் தோரணம் கட்டிய பின்னர், கரைத்து வைத்திருக்கும் பச்சரிசி மாவால், கிருஷ்ணர் பாதம் வரைவார்கள். ‘

சின்னச்சின்ன காலெடுத்து அடிமேல் அடியெடுத்து, சின்னக்கண்ணன் நடக்கையிலே சித்திரங்கள் என்ன செய்யும்?’ என்று கவியரசு கண்ணதாசன் கூட பாடல் எழுதியிருப்பார்.

சின்னஞ்சிறிய குழந்தையின் பாதம் போல், கிருஷ்ணர் பாதம் வரைவார்கள். ‘எனக்குத் தெரியாதே’ என்பவர்கள் வருந்தத் தேவையில்லை. கோலத்தை மோதிர விரலில் எடுத்துக்கொண்டு, ‘8’ போல போட்டுக்கொள்ளுங்கள். பிறகு 8க்கு மேலே சின்னச்சின்னதாக நான்கு பொட்டு வையுங்கள். ஐந்தாவதாக கொஞ்சம் பெரிய பொட்டு வையுங்கள். சின்ன பொட்டு நான்கு விரல்கள். பெரிய பொட்டு கட்டைவிரல். அவ்வளவுதான். பார்ப்பதற்கு, குழந்தையின் பாதம் போலவே இருக்கும்.

அதாவது, கிருஷ்ண ஜயந்தித் திருநாளன்று, எவர் வீடுகளில் கிருஷ்ணர் பாதம் வரைந்து பூஜை செய்யப் படுகிறதோ… அவர்களின் வீடுகளுக்கு பகவான் கிருஷ்ணர் வந்து, சகல சுபிட்சங்களையும் தந்தருள்கிறார் என்பதாக ஐதீகம்.இன்றுஸ்ரீகிருஷ்ண ஜென்மாஷ்டமி சுபதினம் .

IMG 20220818 WA0015 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories