இன்று புண்ணியங்கள்  பல கிடைக்கும் புரட்டாசி 3வது சனிக்கிழமை வழிபாடு..

tiruvattaru3 1657082542 - 2026
IMG 20221002 WA0075 - 2026

இன்று புண்ணியங்கள்  பல கிடைக்கும் புரட்டாசி மாதம் 3வது சனிக்கிழமை சுபதினத்தில் பஞ்சபாத்திரத்தில் இந்த நீரை வைத்தால் நம் பரம்பரையே பஞ்சமில்லாமல் வாழ்வாங்கு வாழும் என புராணங்கள் கூறுகின்றன

நாம் செய்யக்கூடிய பெருமாள் வழிபாடு நமக்கு மட்டுமல்ல, நம்முடைய சந்ததியினருக்கு கூட செல்வ வளத்தை கொடுக்கும். நாளை புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மூன்றாவது சனிக்கிழமை. இந்த மூன்றாவது சனிக்கிழமை வீட்டிலிருந்தபடியே பெருமாளை எப்படி வழிபாடு செய்வது என்பதை பற்றிய சிறிய ஆன்மீக ரீதியான தகவல் இதுவாகும்.

கடந்த இரண்டு சனிக்கிழமை பெருமாள் வழிபாடு செய்யாதவர்கள் கூட, இந்த சனிக்கிழமை ஏழுமலையானை வழிபாடு செய்து அருள் ஆசி பெற்றுக் கொள்ளலாம்‌

பெருமாளுக்கு ரொம்ப ரொம்ப பிடித்த விஷயம் என்றால் அது பச்சை கற்பூரம், துளசி. இது நாம் எல்லோருக்கும் தெரிந்தது. இந்த பச்சை கற்பூரத்தின் வாசம்   வீடு முழுவதும் வீச வேண்டும். பச்சை கற்பூரத்தை நுணுக்கி விளக்கேற்றும் எண்ணெயில் போடுங்கள்.

images 86 - 2026
images 87 - 2026

நீங்கள் போடும் சாம்பிராணி தூபத்தில் சிறிது பச்சை கற்பூரத்தை போடுங்கள். இன்று பெருமாளுக்காக செய்யக்கூடிய சர்க்கரை பொங்கல் நிவேதனத்தில் ஒரு சிட்டிகை பச்சை கற்பூரத்தை சேர்த்து செய்யுங்கள்.
வீட்டில் பெருமாளின் திரு உருவப்படம் இருக்கும் . அந்த படத்தில் பெருமாளின் நெற்றியில் சிறிதளவு பச்சை கற்பூரம், கைகளில் சிறிதளவு பச்சை கற்பூரம், பாதங்களில் சிறிதாக பச்சை கற்பூரத்தை வைத்து விடுங்கள். அப்படி இல்லை என்றால் பெருமாளுக்கு வைக்கக்கூடிய மஞ்சள் குங்குமத்தில் இந்த பச்சை கற்பூர பொடியை கலந்து விடலாம்.
அடுத்தது பெருமாளுக்கு உகந்த விஷயம் என்றால் மாவிளக்கு. பூஜை அறையில் பெருமாளின் திருவுருவப்படத்திற்கு முன்பு மாவிளக்கு போட்டு, அதில் நெய் ஊற்றி தீபம் ஏற்றப்பட வேண்டும்.

கூடவே பச்சைக் கற்பூரம் சேர்த்த சர்க்கரை பொங்கல் நிவேதனமாக வைத்து விடுங்கள். பஞ்சபாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை ஊற்றி அதில் 1 ரூபாய் நாணயத்தை போட்டு, சிறிது பச்சை கற்பூரம் துளசி இலை மஞ்சள் தூள் கலந்து பெருமாளுக்கு தீர்த்தமாக வைக்கலாம்.பின்னர் பெருமாளின் மந்திரத்தை சொல்லி, இருக்கக் கூடிய கஷ்டங்கள் எல்லாம் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம்

இன்று தினம் இரவு முழுவதும் இந்த தீர்த்தம் பெருமாளின் பாதங்களில் இருக்கட்டும். மற்றபடி மாவிளக்கு சர்க்கரை பொங்கல் எல்லாம் நீங்கள் பிரசாதமாக எடுத்துக் கொள்ளலாம்.

மறுநாள் காலை எழுந்து பெருமாளுக்கு மீண்டும் ஒரு விளக்கு ஏற்றி வைத்து, பெருமாளையும் மகாலட்சுமியும் மனதார பிரார்த்தனை செய்து அந்த தீர்த்தத்திற்கு உள்ளே போட்டிருக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து ஒரு மஞ்சள் துணியில் முடிந்து, எங்கள் குடும்பத்திற்கு இனி பண கஷ்டமே வரக்கூடாது என்று பிரார்த்தனை செய்து அந்த ஒரு ரூபாய் நாணயத்தை பணம் வைக்கும் பெட்டியில் வைத்துக் கொள்ளலாம்.

உங்களுக்கு இருக்கின்ற பணகஷ்டமும் படிப்படியாக குறையும். கடன் சுமையும் படிப்படியாக குறையும். வருமானம் படிப்படியாக அதிகரிக்கும். உங்கள் குடும்பமே செல்வ செழிப்போடு வாழ இந்த சின்ன பரிகாரம் வழிவகுக்கும். முயற்சி செய்து பாருங்கள். வாழ்வில் நம்பவே முடியாத நல்ல மாற்றங்களை உணர்வீர்கள் என புராணங்களில் பெருமாள் வழிபாடு முறையில் கூறப்படுகிறது.

IMG 20221004 131345 644 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories