இன்று புண்ணியங்கள்  பல கிடைக்கும் புரட்டாசி 3வது சனிக்கிழமை வழிபாடு..

tiruvattaru3 1657082542 - 2026
IMG 20221002 WA0075 - 2026

இன்று புண்ணியங்கள்  பல கிடைக்கும் புரட்டாசி மாதம் 3வது சனிக்கிழமை சுபதினத்தில் பஞ்சபாத்திரத்தில் இந்த நீரை வைத்தால் நம் பரம்பரையே பஞ்சமில்லாமல் வாழ்வாங்கு வாழும் என புராணங்கள் கூறுகின்றன

நாம் செய்யக்கூடிய பெருமாள் வழிபாடு நமக்கு மட்டுமல்ல, நம்முடைய சந்ததியினருக்கு கூட செல்வ வளத்தை கொடுக்கும். நாளை புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மூன்றாவது சனிக்கிழமை. இந்த மூன்றாவது சனிக்கிழமை வீட்டிலிருந்தபடியே பெருமாளை எப்படி வழிபாடு செய்வது என்பதை பற்றிய சிறிய ஆன்மீக ரீதியான தகவல் இதுவாகும்.

கடந்த இரண்டு சனிக்கிழமை பெருமாள் வழிபாடு செய்யாதவர்கள் கூட, இந்த சனிக்கிழமை ஏழுமலையானை வழிபாடு செய்து அருள் ஆசி பெற்றுக் கொள்ளலாம்‌

பெருமாளுக்கு ரொம்ப ரொம்ப பிடித்த விஷயம் என்றால் அது பச்சை கற்பூரம், துளசி. இது நாம் எல்லோருக்கும் தெரிந்தது. இந்த பச்சை கற்பூரத்தின் வாசம்   வீடு முழுவதும் வீச வேண்டும். பச்சை கற்பூரத்தை நுணுக்கி விளக்கேற்றும் எண்ணெயில் போடுங்கள்.

images 86 - 2026
images 87 - 2026

நீங்கள் போடும் சாம்பிராணி தூபத்தில் சிறிது பச்சை கற்பூரத்தை போடுங்கள். இன்று பெருமாளுக்காக செய்யக்கூடிய சர்க்கரை பொங்கல் நிவேதனத்தில் ஒரு சிட்டிகை பச்சை கற்பூரத்தை சேர்த்து செய்யுங்கள்.
வீட்டில் பெருமாளின் திரு உருவப்படம் இருக்கும் . அந்த படத்தில் பெருமாளின் நெற்றியில் சிறிதளவு பச்சை கற்பூரம், கைகளில் சிறிதளவு பச்சை கற்பூரம், பாதங்களில் சிறிதாக பச்சை கற்பூரத்தை வைத்து விடுங்கள். அப்படி இல்லை என்றால் பெருமாளுக்கு வைக்கக்கூடிய மஞ்சள் குங்குமத்தில் இந்த பச்சை கற்பூர பொடியை கலந்து விடலாம்.
அடுத்தது பெருமாளுக்கு உகந்த விஷயம் என்றால் மாவிளக்கு. பூஜை அறையில் பெருமாளின் திருவுருவப்படத்திற்கு முன்பு மாவிளக்கு போட்டு, அதில் நெய் ஊற்றி தீபம் ஏற்றப்பட வேண்டும்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 05 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

கூடவே பச்சைக் கற்பூரம் சேர்த்த சர்க்கரை பொங்கல் நிவேதனமாக வைத்து விடுங்கள். பஞ்சபாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை ஊற்றி அதில் 1 ரூபாய் நாணயத்தை போட்டு, சிறிது பச்சை கற்பூரம் துளசி இலை மஞ்சள் தூள் கலந்து பெருமாளுக்கு தீர்த்தமாக வைக்கலாம்.பின்னர் பெருமாளின் மந்திரத்தை சொல்லி, இருக்கக் கூடிய கஷ்டங்கள் எல்லாம் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம்

இன்று தினம் இரவு முழுவதும் இந்த தீர்த்தம் பெருமாளின் பாதங்களில் இருக்கட்டும். மற்றபடி மாவிளக்கு சர்க்கரை பொங்கல் எல்லாம் நீங்கள் பிரசாதமாக எடுத்துக் கொள்ளலாம்.

மறுநாள் காலை எழுந்து பெருமாளுக்கு மீண்டும் ஒரு விளக்கு ஏற்றி வைத்து, பெருமாளையும் மகாலட்சுமியும் மனதார பிரார்த்தனை செய்து அந்த தீர்த்தத்திற்கு உள்ளே போட்டிருக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து ஒரு மஞ்சள் துணியில் முடிந்து, எங்கள் குடும்பத்திற்கு இனி பண கஷ்டமே வரக்கூடாது என்று பிரார்த்தனை செய்து அந்த ஒரு ரூபாய் நாணயத்தை பணம் வைக்கும் பெட்டியில் வைத்துக் கொள்ளலாம்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 06 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

உங்களுக்கு இருக்கின்ற பணகஷ்டமும் படிப்படியாக குறையும். கடன் சுமையும் படிப்படியாக குறையும். வருமானம் படிப்படியாக அதிகரிக்கும். உங்கள் குடும்பமே செல்வ செழிப்போடு வாழ இந்த சின்ன பரிகாரம் வழிவகுக்கும். முயற்சி செய்து பாருங்கள். வாழ்வில் நம்பவே முடியாத நல்ல மாற்றங்களை உணர்வீர்கள் என புராணங்களில் பெருமாள் வழிபாடு முறையில் கூறப்படுகிறது.

IMG 20221004 131345 644 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories