ஸ்ரீவிலிஆண்டாள் கோயில் ராப்பத்து உற்சவம்-பெரிய பெருமாள் ரெங்கமன்னார் சமேதரராக காட்சியளித்த ஆண்டாள்

924445 - 2026

 ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி நீராட்ட விழாவில் 2-ம் நாள் உற்சவத்தில் சர்வ அலங்காரத்தில் பெரிய பெருமாள் ஸ்ரீ ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி நீராட்ட விழாவில் கடந்த 23-ம் தேதி பகல் பத்து தொடங்கியது. பகல் பத்து உற்சவத்தின் 10 நாட்களிலும் ஶ்ரீ ஆண்டாள், ரெங்க மன்னார், ஶ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள், பெரியாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்கள் கோபால விலாச மண்டபத்தில் எழுந்தருளி ஒரு சேர பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான நேற்று முன்தினம் காலை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெரிய பெருமாள் ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் ஆகியோர் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளினர். அனைைத்து பெருமாள் கோயில்களிலும் வைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாள் இரவு பெருமாள் மோகினி அவதாரத்தில்(நாச்சியார் திருக்கோலம்) எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஆனால் ஆண்டாள் அவதார தலம் என்பதால் ஸ்ரீவில்லிபுத்தூரில் ராஜ அலங்காரத்தில் பெரிய பெருமாள் எழுந்தருளி பரமபத வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ராப்பத்து உற்சவத்தின் 2-ம் நாளான நேற்று இரவு ஶ்ரீவடபத்திரசாயி கோயிலில் உள்ள ஏகாதசி மண்டபம் எனும் ராப்பத்து மண்டபத்தில் பெரிய பெருமாள், ஸ்ரீ ஆண்டாள், ரெங்கமன்னார் ஆகியோர் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் அளித்தனர்.

அனைத்து வைணவ கோயில்களிலும் ராப்பத்து உற்சவத்தின் போது இருபுறமும் ஶ்ரீதேவி பூதேவி இருக்க நடுவில் வீற்றிருக்கும் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக காட்சியளிப்பார். ஆனால் ஶ்ரீவில்லிபுத்தூரில் மட்டும் வலது புறம் ராஜ அலங்காரத்தில் பெரிய பெருமால், இடதுபுறம் ராஜ அலங்காரத்தில் ரெங்கமன்னார் வீற்றிருக்க நடுவில் ஸ்ரீ ஆண்டாள் காட்சி அளிக்கிறார். ராபத்து உற்சவத்தின் 10 நாட்களும் இரவு முழுவதும் பெரிய பெருமாள், ஸ்ரீ ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு திருமஞ்சனம், திருமொழி பாடல்கள், வியாக்யான பாசுரங்கள் பாடப்பட்டு சிறப்பு ஆராதனைகள் மற்றும் பூஜைகள் நடைபெறுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories