February 22, 2026, 10:46 PM
27.3 C
Chennai

ஸ்ரீவிலிஆண்டாள் கோயில் ராப்பத்து உற்சவம்-பெரிய பெருமாள் ரெங்கமன்னார் சமேதரராக காட்சியளித்த ஆண்டாள்

924445 - 2026

 ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி நீராட்ட விழாவில் 2-ம் நாள் உற்சவத்தில் சர்வ அலங்காரத்தில் பெரிய பெருமாள் ஸ்ரீ ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி நீராட்ட விழாவில் கடந்த 23-ம் தேதி பகல் பத்து தொடங்கியது. பகல் பத்து உற்சவத்தின் 10 நாட்களிலும் ஶ்ரீ ஆண்டாள், ரெங்க மன்னார், ஶ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள், பெரியாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்கள் கோபால விலாச மண்டபத்தில் எழுந்தருளி ஒரு சேர பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான நேற்று முன்தினம் காலை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெரிய பெருமாள் ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் ஆகியோர் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளினர். அனைைத்து பெருமாள் கோயில்களிலும் வைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாள் இரவு பெருமாள் மோகினி அவதாரத்தில்(நாச்சியார் திருக்கோலம்) எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஆனால் ஆண்டாள் அவதார தலம் என்பதால் ஸ்ரீவில்லிபுத்தூரில் ராஜ அலங்காரத்தில் பெரிய பெருமாள் எழுந்தருளி பரமபத வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ராப்பத்து உற்சவத்தின் 2-ம் நாளான நேற்று இரவு ஶ்ரீவடபத்திரசாயி கோயிலில் உள்ள ஏகாதசி மண்டபம் எனும் ராப்பத்து மண்டபத்தில் பெரிய பெருமாள், ஸ்ரீ ஆண்டாள், ரெங்கமன்னார் ஆகியோர் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் அளித்தனர்.

அனைத்து வைணவ கோயில்களிலும் ராப்பத்து உற்சவத்தின் போது இருபுறமும் ஶ்ரீதேவி பூதேவி இருக்க நடுவில் வீற்றிருக்கும் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக காட்சியளிப்பார். ஆனால் ஶ்ரீவில்லிபுத்தூரில் மட்டும் வலது புறம் ராஜ அலங்காரத்தில் பெரிய பெருமால், இடதுபுறம் ராஜ அலங்காரத்தில் ரெங்கமன்னார் வீற்றிருக்க நடுவில் ஸ்ரீ ஆண்டாள் காட்சி அளிக்கிறார். ராபத்து உற்சவத்தின் 10 நாட்களும் இரவு முழுவதும் பெரிய பெருமாள், ஸ்ரீ ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு திருமஞ்சனம், திருமொழி பாடல்கள், வியாக்யான பாசுரங்கள் பாடப்பட்டு சிறப்பு ஆராதனைகள் மற்றும் பூஜைகள் நடைபெறுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories