திருவள்ளுவர் தின வாழ்த்து | Sri #APNSwami #Writes

WhatsApp Image 2018 12 30 at 9.13.30 AM 2 - 2026

திருவள்ளுவர் தின வாழ்த்து 
by Sri #APNSwami
????????????????????????????????????????????????

“தெய்வப் புலவன்”, “வான்புகழ் வள்ளுவர்”, “குறள் முனிவர்” என்றெல்லாம் போற்றுதலுக்கு உரியவர் திருவள்ளுவர். வள்ளுவர் எழுதிய திருக்குறள் உலகப் பொதுமறையாக எல்லோராலும் கொண்டாடப்படுகிறது. மேல்நாட்டு அறிஞர்கள் கூட திருக்குறளை மேற்கோள் காண்பிக்கின்றனர். உலகின் பல மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இத்தகைய மகாத்மா திருவள்ளுவர் திருநாளை மகர சங்கராந்தியின் இரண்டாம் நாள் கொண்டாடுகிறோம்.

  இந்த திருவள்ளுவர் யார்? எங்கு பிறந்தவர்? என்பது குறித்து பலதரப்பட்ட விமர்சனங்கள் உண்டு. இக்கட்டுரை வாயிலாக திருவள்ளுவரின் தெய்வீகத்தை அறியலாம்.[பாரதத்தின் முன்னாள் அட்டர்னி ஜனரல் திரு கே. பராசரன் அவர்களின் திரு தகப்பனார் திரு உ.வ.கேசவ அய்யங்கார்(M.A.B.L) அவர்களின் “வள்ளுவர் உள்ளம்” என்னும் நூலை தழுவியது.]

பெரியாழ்வார் காலத்தில் வல்லப தேவன் என்னும் பாண்டிய மன்னன் இருந்தான். ஒரு நாள் அவனுக்கு ஒரு சந்தேகம் உண்டானது. அதாவது யார் பரதெய்வம்? எந்த தெய்வத்தை வணங்கினால் மோட்சம் அடையலாம்? எனும் கேள்விக்கு விடை தெரியாமல் தனது அமைச்சரைக் கேட்டான்.

செல்வநம்பி எனும் அந்த அமைச்சர் கூறிய யோசனையின்படி “அரசன் ஒரு பொற்கிழியை நிர்மாணித்தான். அக்காலத்தில் அனைத்தும் சத்தியத்திற்கு கட்டப்பட்டிருந்தன. இந்த அரசன் ஒரு அழகான உயர்ந்த கம்பத்தின் நுனியில் பொற்கிழியை அமைத்தான். ஆதாரப்பூர்வமாக பர தெய்வத்தை எடுத்துரைத்து வெற்றி பெற்றால் சத்தியத்திற்கு கட்டுப்பட்ட அந்த பொற்கிழி தானாகவே அறுந்து விழும்” என்பது ஏற்பாடு.

ALSO READ:  பராபவ - பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பல அறிஞர்கள் கலந்துகொண்டும் பொற்கிழி அறுபடவில்லை. அச்சமயம் வந்து பெரியாழ்வார் *”ஸ்ரீமன் நாராயணனே பரதெய்வம். அவனே மோட்சம் அளிப்பவன்”* என்பதினை நிர்ணயம் செய்தார். என்ன ஆச்சர்யம்! அந்த பொற்கிழி அறுந்து கீழே விழுந்தது.

“பாண்டியன் கொண்டாட பட்டர்பிரான் வந்தான் என்று வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்தான்….” என அரசன் உட்பட அனைவரும் கொண்டாடினர்.

ஆழ்வாரை யானை மீது ஊர்வலமாக அரசன் அழைத்துச் சென்றபோது, ஆழ்வாரை பெருமைப்படுத்த எண்ணிய பகவான் கருட வாகனத்துடன் காட்சியளித்தான். அப்போது எங்கே பெருமாளுக்கு கண்திருஷ்டி வருமோ! என பயந்த பெரியாழ்வார் தனது பொங்கும் பரிவினால் பல்லாண்டு பாடினார்.

அதில் வல்லப பாண்டியனின் அமைச்சரான செல்வ நம்பி என்னும் ஸ்ரீவைஷ்ணவரின் பெருமை போற்றுகிறார். “ஹே! பிரபோ ! நாராயணா ! குற்றம் குறையற்ற மிகச்சிறந்த நல் மனிதரான செல்வ நம்பியைப் போன்று நானும் உனது தாசன் அன்றோ! ” என்கிறார். இதனால் செல்வ நம்பி என்னும் ஸ்ரீவைஷ்ணவரின் பெருமை தெரிகிறது. அந்த செல்வநம்பியே திருவள்ளுவர் என்பதை அறிந்தால் ஆச்சரியம் உண்டாகிறது அல்லவா? இதை தொடர்ந்து படியுங்கள்.

ALSO READ:  பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

அதாவது “செல்வநம்பி” என்பதினை “ஸ்ரீவல்லப நம்பி” என்றும் சொல்லப்படும். அதேபோன்று செல்வ- திரு என்றும் நம்பி- வல்லபன்( ஞான பூரணன்) என்றும் அறியலாம். வள்ளுவ மாலையில் “உப்பக்க நோக்கி உப கேசி தாள் மணந்தான்”(21) எனும் பாடல் நல்கூர் வேள்வியார் எனும் புலவர் பாடியது. அதன் பொருள் உணர்ந்தால் இந்த அர்த்தம் தெளியலாகும்.

பாண்டிய மன்னன் மந்திரி- குருவாகிய செல்வநம்பி என்னும் வேத நல்லார்க்கு ” திருவள்ளுவர்” என்பது பெயர். அதனால்தான் திருக்குறள் முதல் பாட்டை “அகர முதல” என்று “ஆகாரமாக” – விஷ்ணுவைக் குறிப்பதாக தொடங்கினார்.

  “தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது”
முதலிய குறட்பாக்களில் உயரிய சரணாகதி நெறியினை எடுத்துரைக்கின்றார். பரிமேலழகர் முதலியோர் செய்தருளிய உரைகளில் இந்த அர்த்தம் நன்கு காட்டப்படுகிறது.

உத்தம ஸ்ரீவைஷ்ணவரான ” திருவள்ளுவர்” காட்டிய சரணாகதி நெறியின்படி நாமும் வாழ்ந்து உயரலாம். உத்தராயண புண்ணிய காலத்தில் திருவள்ளுவர் திருநாளில் உத்தம பாகவதரைப் போற்றிப் பணிவோம்.

ALSO READ:  ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

இப்படிக்கு,
ஏ.பி.என் ஸ்வாமி

Sri #APNSwami.

இது போன்ற கட்டுரைகளைப் படிக்க… https://apnswami.wordpress.comமேலும்… நாட்டு நடப்புகளுடன் சுவையான் ஸம்ப்ரதாய விஷயங்களை அறிந்திட https://apnswami.wordpress.com/blogpages/ மற்றவர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்…உங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களையும் பதிவு செய்யுங்கள்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories