பக்கத்தில் உள்ள ப்ரயாகை | Kanchi Varadhan கனு பார்வேட்டை @பழைய சீவரம் |Sri #APNSwami #Writes

WhatsApp Image 2018 12 30 at 9.13.30 AM 3 - 2026

பக்கத்தில் உள்ள ப்ரயாகை           
by Sri #APNSwami
????????????????????????????????????????????????

  தைப் பொங்கல் திருநாளின் மறுதினம், கனு பார்வேட்டை எனும் உத்ஸவம் கோவில்களில் நடைபெறும். இதற்கு பரிவேட்டை, பார்வேட்டை என்று பல பெயர்களுண்டு. காஞ்சி வரதனும் செங்கல்பட்டிற்கு அருகேயுள்ள த்ரிவேணீ (பாலாறு, செய்யாறு, வேகவதீ) சங்கமமான பழைய சீவரம், திருமுக்கூடலுக்கு எழுந்தருளுகிறான். இந்த வைபவம் ப்ரஹ்மாண்ட புராணத்தில், விஷ்ணுசித்தர் எனும் மஹர்ஷிக்கும், மரீசி முனிவருக்கும் உரையாடலாக அமைந்துள்ளது.

  சுதர்ஸந கிரி எனும் இந்த பத்ம மலையில் (பழைய சீவரம் மலையில்), க்ருஷ்ண சர்மா எனும் யோகி ஒருவர் தவம் செய்தார். ப்ரயாகை சென்று த்ரிவேணீ (கங்கா, யமுனா, ஸரஸ்வதீ) சங்கமத்தில் நீராட முடியாத அவருக்காக, இம்மூன்று நதிகளும் இங்கே ஒன்றாக ப்ரவகித்து சங்கமித்தன.

யஸ்மாத் வேங்கடநாயக: நரஹரி: லக்ஷ்ம்யா ஸமேதௌ ச தௌ

தத்தீரே உபய பார்ச்வதச்ச திவிஜை: தேவை: மஹீபாலகை: |

ஸர்வை: தேசிகவர்ய பூசுரவரை: ஸம்ஸேவிதௌ ஸர்வதா

ALSO READ:  ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஸாந்நித்யம் ச கரிஷ்யத: கலியுகே தீரே த்ரிவேண்யா: சுபே ||

  “பாலாறு, செய்யாறு, வேகவதீ நதிகளின் இந்த சங்கமம் கங்கை, யமுனை, ஸரஸ்வதீ சங்கமத்தை விட மேலானது. இதன் இருகரைகளிலும் ஸ்ரீநிவாஸன், ஸ்ரீலக்ஷ்மீநரசிம்மன் மற்றும் ஆசார்ய புருஷர்களும் வசிக்கின்றனர். இக்கலியுகத்தில், பக்கத்தில் உள்ள ப்ரயாகையாக இந்த சங்கம க்ஷேத்ரம் சிறந்து விளங்குகிறது“.

  “இதில் நீராடி, மக்கள் அனைத்து செல்வங்களையும் அடைகின்றனர். மேலும், சூரியன் மகர ராசியை அடைந்தவுடன், ஹஸ்திகிரி நாதனாகிய வரதன், இங்கு எழுந்தருளி திருப்பார்வேட்டை மஹோத்ஸவம் கண்டருளப் போகிறான் என்றும் மரீசி உரைக்கிறார்.

யஸ்மாத் ஹஸ்திகிரீச்வரோபி மகரம் யாதேச பாநௌ கிரௌ

பத்மாக்யே மஹதிம் ச்ரியம் ச ஜகதாம் குர்வந் த்ரிவேண்யா: தடே |

ஆகேரோத்ஸவம் அத்புதம் த்ரிஜகதாம் ஆநந்ததம் ஸந்ததம்

பச்யத்பி: திவி தேவதை: விஜயதே பூபாலகை: பூசுரை: ||

இதே மாஹாத்ம்யத்தில், மேற்கொண்டு விஸ்தாரமாக, ஸ்ரீபாஷ்யகாரர், ஸ்வாமி தேசிகன் முதலானோரின் அவதாரம் குறித்த செய்திகளும் நிறைந்துள்ளன. நாமும் த்ரிவேணீ சங்கமத்தில் பார்வேட்டையில் வரதனை சேவித்து பாக்யம் பெறலாம்.

ALSO READ:  பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

விஜய் தொலைக்காட்சியின் “தபோ வனம்” நிகழ்ச்சியிலும், சங்கரா தொலைக்காட்சி “நதி மூலம்” நிகழ்ச்சியிலும், பல ப்ரமாணங்களுடன் இச்சங்கமம் குறித்து விளக்கியுள்ளோம். தொடரும் மணற்கொள்ளைகளால் வறண்டு கிடக்கும் இந்நதிகள், இனியாவது வளம் பெறுமா நம் மனம் மாறி, நாம் இதற்கு முயலுவோமா?

எதிர்பார்ப்புடன்

.பி.என்  

Sri #APNSwami
இது போன்ற கட்டுரைகளைப் படிக்க… https://apnswami.wordpress.comமேலும்… நாட்டு நடப்புகளுடன் சுவையான் ஸம்ப்ரதாய விஷயங்களை அறிந்திட https://apnswami.wordpress.com/blogpages/ மற்றவர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்…உங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களையும் பதிவு செய்யுங்கள்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories