December 6, 2025, 10:28 AM
26.8 C
Chennai

“பெரியவா விரும்பி எடுத்துக்கொண்ட ஒரு போட்டோ “…. -(ஸ்ரீசங்கர ஜெயந்தி ஸ்பெஷல் போஸ்ட்)

“பெரியவா விரும்பி எடுத்துக்கொண்ட ஒரு போட்டோ “…. -(ஸ்ரீசங்கர ஜெயந்தி ஸ்பெஷல் போஸ்ட்)

(“நீ ப்ரியமா பெரியவாளுக்குக் குடுக்கணும்னு மணையைத் தூக்கிண்டு வந்து குடுத்திருக்கே .பதிலுக்கு ஒனக்குத் தரதுக்கு ஒரு ப்ரஸாதங்கூட எங்கிட்ட இல்லையே”) (சொன்னாரே தவிர மணையில் உட்கார்ந்த ஃபோடோ அவருக்கு அனுப்பி வைத்தார்)

கட்டுரை-சிறுவாச்சூர் மதுரகாளிதாஸன்(வீரபத்திரன்)
தட்டச்சு-வரகூரான் நாராயணன். Kanchi Maha Periyava 1 - 2025

(தாம்பரத்தில் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி முகாம் சங்கர ஜெயந்தி முன்னிட்டு 05-05-2016 முதல் 20-05-2016 வரை 16 நாட்கள்-அப்போது அங்கு இந்த கட்டுரை பேப்பரை வினியோகித்து கொண்டிருந்தார்கள் .அதைப் பார்த்து தட்டச்சு.செய்தேன்-வரகூரான்)

ஸ்ரீமகாஸ்வாமிகள் அமர்ந்திருக்கும் படங்களில் ஒன்றில் அவருக்கு இடது பக்கம் ஒரு மணை சார்த்தி வைத்திருக்கும்.மரத்திடமும் அன்புமறத்துப்போகாத மறந்து போகாத அவரது அதிசய குணத்திற்கே அது சான்று.

கதை இதுதான்.

சங்கர பீட சக்ரவர்த்தியாயின்றி அநாமதேய ஆண்டிபோல அவர் அந்த மரத்தடியே வந்தமர்ந்திருந்தார். அடியாரொருவர் அங்கு வந்தார்.பெரியவாள் அமர்வதற்கென்று இந்த மணையைச் செய்து, எடுத்து வந்து, ஸமர்ப்பணம் செய்தார்.

“நீ ப்ரியமா பெரியவாளுக்குக் குடுக்கணும்னு மணையைத் தூக்கிண்டு வந்து குடுத்திருக்கே .பதிலுக்கு ஒனக்குத் தரதுக்கு ஒரு ப்ரஸாதங்கூட எங்கிட்ட இல்லையே” என்றார் ஸ்ரீசரணாள்,அருள் என்ற அமுத ப்ரஸாதத்தை வழங்கியவாறே. பெரியவா அநுக்ரஹமே போதும் என்றார் அடியார்.அப்போது இன்னோர் அடியார் வந்தார், காமிராவும் கையுமாக.

“ஒனக்கு நான் பதில் பண்றதுக்கு வழி கெடச்சுடுத்து” என்று மணையடியாரிடம் ஸந்தோஷத்துடன் சொன்னார் நமது ஆசுதோஷி.

“இந்த மணையும் போட்டோவுல நன்னாத் தெரியறாப்ல வெச்சுண்டு படம் பிடிச்சுக்கப் போறேன்.காப்பி உனக்கு தரச்சொல்றேன். நீ குடுத்த மணையே போட்டோ ரூபத்துல ஒனக்கு நான் பண்ற பதில்” என்று சிரித்தவண்ணம் கூறினார்.

போட்டோ எடுக்கக்கூடாது என்று பெரியவாள் சொல்லும் சந்தர்ப்பம் அநேகம்.இன்று இந்தக் காமிரா அடியார் அதிர்ஷ்டம் செய்திருந்தார்.

நிழற்படம் எடுத்தவரிடம், இவர் அட்ரஸ் கேட்டுண்டு ஒரு காப்பி இவருக்குச் சேத்துடு என்றார்.பிற்பாடு அவர் அவ்வாறே செய்தார்.

பெரியவாள் தமக்கு ஸமர்ப்பிக்கப்பட்ட பிரதியைப் பார்த்தபோது சொன்னார்.

“என்னோட தண்டம்,கமண்டலம்,ருத்ராக்ஷம் எல்லாம் அநேக போட்டோல விழுந்திருக்கு. ஆனா ஜபத்துக்கு முக்யமான அங்கமான ஆஸனமாயிருக்கிற மணைக்கு மேலேயே நான் ஒக்காந்துடறதாலே அது ஸரியாகத் தெரியறதே இல்லை. இந்தப் படம் அந்தக் குறையைப் போக்கிடுத்து” என்றார்.

மஹா புருஷனுக்கு ஒரு சிறிய மணை தந்தவரிடம் நன்றி. மணையிடமும் நன்றி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories