“அசைவப் பசுக்கள்” – பெரியவாளின் வேதனை!

“அசைவப் பசுக்கள்””

(வெளிநாட்டில் மாட்டு எலும்பைப் பொடி செய்து தீவனத்தோட கலந்து, பசு மாட்டுக்குக் கொடுக்கிறார்களாம் பெரியவாளின் வேதனை)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-183 62008736 1282271998596245 8229968203191681024 n - 2026
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்

கிரீஸ் தேசத்து அரசியும்,இளவரசி ஐரீனும் மகா பெரியவாளிடம் எல்லையில்லாத பக்தி கொண்டவர்கள் . ஆண்டுதோறும் (விளம்பரம் இல்லாமல்) தரிசனத்துக்கு வந்து விட்டு, மிகவும் பரவசத்துடன் திரும்பிப் போவார்கள்.

ஒரு முறை, நம் நாட்டிலுள்ள குழந்தைகள், முதியவர்கள், ஏழைகளுக்கு விநியோகிப்பதற்காக ஐ.நா.சபையின் ஏதோ ஒரு துறையின் மூலம் ஏராளமான பால் பவுடர் டின்கள் அனுப்பினார்கள்.ஸ்ரீ மடத்துக்கும் சில நூறு டின்கள் வந்தன.

“ஐரீன்,பால் பவுடர் ஒரு கிலோ டின் நிறைய அனுப்பியிருக்கார்” என்று பெரியவாளிடம் விண்ணப்பிக்கப்பட்டது .”பாடசாலை வித்யார்த்திகள் உபயோகத்துக்காக-ன்னு எழுதியிருக்கார்.”

சிறிது நேரத்துக்குப் பின், மேல் நாடுகளிலெல்லாம் மெஷின் வைத்துத்தானே பால் கறக்கிறார்கள்? என்று கேட்டார்கள் பெரியவாள்.

“ஆமாம்..”

“பசுவுக்கு வலிக்காதோ?” என்றார்கள்,சிந்தனை தோய்ந்த முகத்துடன்.பின்னர் தொடர்ந்து, “கோனார் கை வைத்துப் பீய்ச்சினால், பசுவுக்கு வலிக்காது. கோனாருக்கு நெளிவு-சுளிவு தெரியும்.மாட்டுக்குக் கஷ்டம்னு தெரிஞ்சா, உடனே கறப்பதை நிறுத்திடுவான்..” என்று சொன்னார்கள்.

“அந்த ஊர்ப் பசு மாடுகளுக்கு மெஷின் கறவைப் பழகிப் போயிருக்கும்…”-தொண்டர்

“ஆமா! அந்த ஹிம்ஸையைப் பொறுத்துக் கொள்ளைப் பழகிப் போயிருக்கும்….”-பெரியவா.

“அங்கேயெல்லாம் மாட்டு எலும்பைப்பொடி செய்து தீவனத்தோட கலந்து, பசு மாட்டுக்குக் கொடுக்கிறார்களாம். அதனால்தான் அங்கே பசுக்கள் புஷ்டியா இருக்கு. நிறையப் பால் கொடுக்கிறது” என்றார் ஒரு தொண்டர்.

பெரியவாள் அதிர்ச்சி அடைந்தார்கள். ‘பசுக்களுக்கு எலும்புப் பவுடர்? அசைவ உணவு?’ என்று நெஞ்சுக்குள் சிந்தனையோட்டம்

“அங்கேயெல்லாம் பால் உற்பத்தி என்பது வியாபாரப் பெருக்கத்துக்காகத்தான். பல நாள் வரை கெட்டுப் போகாதபடி, கருங்கல் மாதிரி, வெண்ணெய் செய்கிறார்கள். பால் பவுடர், சீஸ் என்று என்னென்னமோ தயாரித்து வெளிநாட்டுக்கு அனுப்புகிறார்கள். சுவாமிக்கு அபிஷேகம் செய்ய பஞ்சகவ்யமா செய்யப் போகிறார்கள்?”

பெரியவாள் மனம் வருந்துகிறார்கள் என்பது முகக் குறியிலேயே தெரிந்தது.

“அசைவத் தீனி சாப்பிடுகிற பசுமாட்டின் பாலும் அசைவம்தான். அது நமக்கு வேண்டாம். பாடசாலைப் பையன்களுக்கும் வேண்டாம் இந்த மாதிரி உணவுகளைச் சாப்பிடுகிற மாணவர் ஹாஸ்டல் இருக்குமே? மானேஜரைக் கேட்டுண்டு தகுந்த இடத்துக்கு அனுப்பி வை…”

தொண்டர் மானேஜரைக் கண்டு பேச நகர்ந்தார்.

“இதப் பாருடா…பால் பவுடர் டின் கிடைச்சுது. சரியானபடி விநியோகிக்கப்பட்டது.இனிமேல் பால் பவுடர் வேண்டாம்’ன்னு ஐரீனுக்கு எழுதச் சொல்லு…” -பெரியவா.

பெரியவாள் யார் மனத்தையும் புண்படுத்த மாட்டார்கள். பால் போன்ற – சைவத் தீனி உண்ணும் பசுவின் பால் போன்ற –தூய, தெய்வீக உள்ளம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories