“காஞ்சி யாத்திரை போன மாப்பிள்ளை”

“காஞ்சி யாத்திரை போன மாப்பிள்ளை”

“விவாஹ மந்திரம் ரொம்ப முக்கியம். சகல சௌபாக்கியமும் கிடைக்கணும்னு பிரார்த்தனை பண்றது” ‘வேத மந்திரம்-“பெரியவா உபதேசம்”.

சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாacd5055f743de05f493cdb3eaca18fce - 2026
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

காலை எட்டு மணிக்குள் திருமாங்கல்ய தாரணம் நடந்துவிட்டது. ஒன்பதரை மணிக்கு சேஷ ஹோமம் பத்து மணிக்கு சாப்பாடு.

மாப்பிள்ளைக்கு திடீரென்று பெரியவாளிடம் பக்தி அலைமோதியது. பஞ்சக்கச்சமும் கூறைப்- புடைவையுமாக, நண்பகலில் பெரியவாள் முன் ஆஜர்!

மணமகனுக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி. வேறு எந்த தம்பதிகள், காலையில் கையைப் பிடித்து, மூன்று மணி நேரத்திற்குள் பெரியவாள் தரிசனத்துக்கு வந்திருக்கிறார்கள்?.

பெரியவாள், எல்லோரிடமும் சொல்லப் போகிறார்கள் பாருங்கோ….”இந்தப் பையனுக்கு என்ன பக்தி… கல்யாணம் ஆன மறு லக்னத்திலேயே  தரிசனத்துக்கு வந்து விட்டானே! காசி யாத்திரையை நிறுத்திவிட்டு காஞ்சி யாத்திரை வந்திருக்கான்” என்று பாராட்டப் போகிறார்கள்.

அரை மணி நேரம் நின்றான், கால் கடுத்தது.

ALSO READ:  ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

பெரியவாள் வேறு யார் யாருக்கோ பிரசாதம் கொடுத்தார்கள்-இவரைத் தவிர.

மனம் தவிக்க ஆரம்பித்தது.

மூன்று மணிக்கு சென்னையில் இருக்க வேண்டும். இரவு ஏழு மணி முதல் வரவேற்பு. அதற்குள் மணப்பெண்ணுக்கு ஒரு முக்கியமான விஸிட் இருந்தது.

ஒரு சிஷ்யனைக் கண் அசைவினால்  அழைத்தார்கள் பெரியவாள்.

“இவாளை கொல்லா சத்திரத்துக்கு அழைச்சிண்டு போய் தம்பதிகளா உட்கார வச்சு,விவாஹ மந்திரம் முழுக்கச் சொல்லச் சொல்லு. மடத்து சாஸ்திரிகளை அழைச்சிண்டு போ…”

இளந்தம்பதிகள் கொல்லா சத்திரம் போய்விட்டு இரண்டு மணி நேரம் கழித்து தரிசனத்துக்கு வந்தார்கள்.பெரியவாள் பிரசாதம் கொடுத்துக் கொண்டே கூறினார்கள்.

“விவாஹ மந்திரம் ரொம்ப முக்கியம். சகல சௌபாக்கியமும் கிடைக்கணும்னு  பிரார்த்தனை பண்றது” ‘வேத மந்திரம்…” பிரசாதம் பெற்றுக் கொண்டு மணமக்கள் சென்னை வந்து சேர்ந்தபோது, மணி ஏழு.

நேரே வரவேற்பு மேடையில் கவர்னர் நாற்காலியில் அமர்ந்து கொண்டார்கள். உடை மாற்றிக்கொள்ளக்கூட நேரமில்லை.

பத்து நிமிடத்தில் அவன் அலுவலக மேலாளர்,மற்ற்ப் பணியாளர்கள் புடைசூழ வந்தார். கை குலுக்கினார்.ஓர் உரையாடலைக் கொடுத்தார்.

ALSO READ:  பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

“சத்தியமூர்த்தி அதைத் திறந்து பாருடா” என்றார் ஒரு மூத்த எழுத்தர்.’மொத்த மொய்த் தொகையின் காசோலையாக இருக்கும்’ என்று அலட்சியமாகப் பிரித்தான்.

கண்கள் விரிந்தன புரமோஷன் ஆர்டர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories