December 5, 2025, 5:44 PM
27.9 C
Chennai

“காஞ்சி யாத்திரை போன மாப்பிள்ளை”

“காஞ்சி யாத்திரை போன மாப்பிள்ளை”

“விவாஹ மந்திரம் ரொம்ப முக்கியம். சகல சௌபாக்கியமும் கிடைக்கணும்னு பிரார்த்தனை பண்றது” ‘வேத மந்திரம்-“பெரியவா உபதேசம்”.

சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாacd5055f743de05f493cdb3eaca18fce - 2025
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

காலை எட்டு மணிக்குள் திருமாங்கல்ய தாரணம் நடந்துவிட்டது. ஒன்பதரை மணிக்கு சேஷ ஹோமம் பத்து மணிக்கு சாப்பாடு.

மாப்பிள்ளைக்கு திடீரென்று பெரியவாளிடம் பக்தி அலைமோதியது. பஞ்சக்கச்சமும் கூறைப்- புடைவையுமாக, நண்பகலில் பெரியவாள் முன் ஆஜர்!

மணமகனுக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி. வேறு எந்த தம்பதிகள், காலையில் கையைப் பிடித்து, மூன்று மணி நேரத்திற்குள் பெரியவாள் தரிசனத்துக்கு வந்திருக்கிறார்கள்?.

பெரியவாள், எல்லோரிடமும் சொல்லப் போகிறார்கள் பாருங்கோ….”இந்தப் பையனுக்கு என்ன பக்தி… கல்யாணம் ஆன மறு லக்னத்திலேயே  தரிசனத்துக்கு வந்து விட்டானே! காசி யாத்திரையை நிறுத்திவிட்டு காஞ்சி யாத்திரை வந்திருக்கான்” என்று பாராட்டப் போகிறார்கள்.

அரை மணி நேரம் நின்றான், கால் கடுத்தது.

பெரியவாள் வேறு யார் யாருக்கோ பிரசாதம் கொடுத்தார்கள்-இவரைத் தவிர.

மனம் தவிக்க ஆரம்பித்தது.

மூன்று மணிக்கு சென்னையில் இருக்க வேண்டும். இரவு ஏழு மணி முதல் வரவேற்பு. அதற்குள் மணப்பெண்ணுக்கு ஒரு முக்கியமான விஸிட் இருந்தது.

ஒரு சிஷ்யனைக் கண் அசைவினால்  அழைத்தார்கள் பெரியவாள்.

“இவாளை கொல்லா சத்திரத்துக்கு அழைச்சிண்டு போய் தம்பதிகளா உட்கார வச்சு,விவாஹ மந்திரம் முழுக்கச் சொல்லச் சொல்லு. மடத்து சாஸ்திரிகளை அழைச்சிண்டு போ…”

இளந்தம்பதிகள் கொல்லா சத்திரம் போய்விட்டு இரண்டு மணி நேரம் கழித்து தரிசனத்துக்கு வந்தார்கள்.பெரியவாள் பிரசாதம் கொடுத்துக் கொண்டே கூறினார்கள்.

“விவாஹ மந்திரம் ரொம்ப முக்கியம். சகல சௌபாக்கியமும் கிடைக்கணும்னு  பிரார்த்தனை பண்றது” ‘வேத மந்திரம்…” பிரசாதம் பெற்றுக் கொண்டு மணமக்கள் சென்னை வந்து சேர்ந்தபோது, மணி ஏழு.

நேரே வரவேற்பு மேடையில் கவர்னர் நாற்காலியில் அமர்ந்து கொண்டார்கள். உடை மாற்றிக்கொள்ளக்கூட நேரமில்லை.

பத்து நிமிடத்தில் அவன் அலுவலக மேலாளர்,மற்ற்ப் பணியாளர்கள் புடைசூழ வந்தார். கை குலுக்கினார்.ஓர் உரையாடலைக் கொடுத்தார்.

“சத்தியமூர்த்தி அதைத் திறந்து பாருடா” என்றார் ஒரு மூத்த எழுத்தர்.’மொத்த மொய்த் தொகையின் காசோலையாக இருக்கும்’ என்று அலட்சியமாகப் பிரித்தான்.

கண்கள் விரிந்தன புரமோஷன் ஆர்டர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories