December 5, 2025, 10:35 PM
26.6 C
Chennai

நான் சொல்றது பாதரட்சை இல்லை, தோல் செருப்பு!

“செருப்பு இருக்கா?” என்று பெரியவர் கேட்டுவிட்டு

“நான் சொல்றது பாதரட்சை இல்லை,தோல் செருப்பு”

(பெரியவாளின் அபூர்வ ஜீவகாருண்ய வைத்தியம்)17861559 1517108385000988 5242240015705989905 n 2 - 2025

சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு(மூலமாக)
கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஒரு முறை பெரிய செல்வந்தர் ஒருவர் தனது காரில் மடத்திற்கு வந்து நிற்கிறார். அவரது முகத்தில் வேதனை.அது அவர் வளர்க்கும் நாயின் மேல் கொண்ட கவலையால் ஏற்பட்டது. சென்ற ஒரு வார காலமாக அவரது நாய் உணவு உட்கொள்ளவில்லை.குரைக்கவும்  இல்லை. என்ன நேர்ந்தது என்று தெரிந்து கொள்ள  முடியாமல் எஜமானர் மிருக வைத்தியரிடம் கொண்டு சென்றார்.

வைத்தியருக்கும் அந்த நாயின் போக்கு புதிராக இருந்தது. அதனால் அவரால் அதைக் குணப்படுத்த இயலவில்லை. உண்ணாமல் மெலிந்து சக்தியில்லாமல் கிடக்கும் அந்த வாயில்லா ஜீவனின் அவஸ்தையை தாங்க இயலாத செல்வந்தருக்கு மனதில் ஒரே வழி தான் தோன்றியது.காஞ்சி மகானே கதி என்று இருக்கும் அந்த பக்தர், மனதில் நம்பிக்கையுடன் தன் செல்ல நாயுடன் காஞ்சிமடத்திற்கு வந்து சேர்ந்தார்
.
நாயை தனது காரிலேயே விட்டுவிட்டு உள்ளே போய், மகானிடம் சென்று நின்றார்.இப்படி தனது நாய்க்கு ஒரு குறை என்று நிவர்த்தி தேடி வந்தது மடத்தில்  அபூர்வமாக எல்லோருக்கும் தோன்றியது. என்றாலும் அவரது கவலை தோய்ந்த முகத்தைப் பார்த்தபோது அதற்கு ஸ்ரீகாஞ்சிமகான் அருள வேண்டும் என்று  மடத்து அன்பர் ஸ்ரீபாலுவுக்கு மனதில் தோன்றியது.

அவருக்கு வந்திருந்தவரின் மனவேதனை நன்கு புரிந்தது. ஆகவே ஸ்ரீபெரியவாளிடம் இந்த செல்வந்தரின் முறையீட்டைப் பற்றி ஸ்ரீ பாலு மெதுவாக எடுத்துரைத்து, அதற்குப் பிறகு பெரியவா அருள வேண்டுமென விண்ணப்பித்தார் .கருணை கரைந்தது .

“நாயை இங்கே கொண்டுவந்து சிரமப்படுத்த வேண்டாம் நானே அங்கே வர்ரேன்” என்று அந்த ஜீவகாருண்ய மகான், மெதுவாய் ஸ்ரீமடத்தின் வாசலில் கார் கார் நிற்குமிடத்திற்கு வந்து நின்றார்.

“கார் கதவை திறந்து விடுங்கோ” என்று மகான் சொல்ல, கதவு திறக்கப்பட்டதும் நாய் எதற்கோ கட்டுப்பட்டது  போல் மெதுவாக காரை விட்டு இறங்கி நின்றது .
“செருப்பு இருக்கா?” என்று பெரியவர் கேட்டுவிட்டு “நான் சொல்றது பாதரட்சை இல்லை,தோல் செருப்பு” என்றார். தொடர்ந்து ஒரு சிப்பந்தி அணிந்திருந்த செருப்பை கொண்டு வருகின்றார். அந்த நாயின் ஒரு பக்கம் வைக்கச் சொல்கிறார்.

மகான் உடனே பாலுவைப் பார்த்து ” நீ போய் ஒரு கிண்ணம் நிறைய பால் கொண்டு வா!” என்று கூற, அவரும் மடத்தினுள் சென்று பாலைக் கொண்டு  வந்து வைக்கிறார். ஸ்ரீபெரியவா தனது கமலங்களை மூடி தியானிப்பது போல் சில நிமிடங்கள் செய்கிறார்.

அதுவரை சக்தியில்லாமல் சோர்வாகக் கிடந்த நாய் ‘மட மட’ வென்று அருகே வைத்த பால் அத்தனையும் குடித்து விடுகிறது. அதற்கு புது தெம்பு உண்டானது போல் ‘வள்வள்’ என்று விடாமல் சில நிமிடங்கள் குரைத்தபின் சமாதானமாகிறது. இதைப் பார்த்த செல்வந்தருக்கும்,அங்கே இருந்த அனைவருக்கும்  இந்த மகிமை ஆச்சரியத்தை உண்டாக்குகிறது.

ஆனால் பெரியவாளோ,” இதில் அதிசயக்க ஒன்றுமே இல்லை” என்னும் அர்த்தத்தோடு தனது மேன்மையை மறைக்கும் அடக்கத்தோடும் சொல்கிறார், “திருடங்க வந்தா மந்திர சக்தியாலே நாயை கட்டிப் போட்டுடுவா.தோல் செருப்பாலே அதை போக்கிடலாம்” என்று சொல்லிவிட்டு ஸ்ரீமடத்தில் நுழைந்தார்
.
இந்த ஒரு மாபெரும் தெய்வத்திடம் நாம் கொள்ளும் சரணாகதி, நமக்கெல்லாம் நல்கதி நல்கி சகல ஐஸ்வர்யங்களையும், சர்வ மங்களங்களையும் அள்ளி வழங்குமென்பது சாத்யமல்லவா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories