சட்டத்துக்கு நானும் உட்பட்டவன்தான்; எனக்குன்னு விதிவிலக்கு கிடையாது: மகாபெரியவர்

“சட்டத்துக்கு நானும் உட்பட்டவன்தான்.
எனக்குன்னு விதிவிலக்கு கிடையாது”-பெரியவாள்.

(சுங்கச் சாவடி சோதனை சம்பவம்)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-74
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்

பல வருஷங்களுக்கு முன், தமிழ்நாட்டில் அரிசித்
தட்டுப்பாடு நிலவியிருந்தது. அதனால், மாவட்ட
எல்லையில் சுங்கச் சாவடி அமைத்து, அரிசி
கடத்தலைத் தடுக்க முயன்றது அரசு. எல்லையைக்
கடந்து, வேறு மாவட்டத்துக்குள் செல்பவர்களின்
உடைமைகளைப் பரிசோதனை செய்த பின்னரே
போவதற்கு அனுமதித்தார்கள், சுங்கத்துறைப்
பணியாளர்கள்.

அந்த சமயத்தில், காஞ்சிபுரத்திலிருந்து கலவைக்கு
யாத்திரையாகப் போனார்கள் பெரியவாள்.
காஞ்சிபுரம் – வேலூர் (அப்போது செங்கல்பட்டு –
வட ஆற்காடு) மாவட்ட எல்லையைக் கடந்து செல்ல
வேண்டும்.அங்கே ஒரு சுங்கச் சாவடி இருந்தது.

வழக்கம்போல, பெரியவாளுக்கு முன் செல்லும்
ரிக்‌ஷாவில்,பெரியவாளின் தண்ணீர்ப்
பாத்திரமான கடம்.மடிசஞ்சி,ஒரு குடம்,விபூதி,ஒரு
சின்ன மூட்டையில் நெற்பொரி முதலியன வைக்கப்
பட்டிருந்தன. சுங்கச்சாவடி தடுப்பு வேலியருகே,
ரிக்‌ஷாவை நிறுத்தச் சொன்னார்கள்
பெரியவாள்.

ALSO READ:  பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

“சாமான்களை நன்றாகப் பரிசோதிச்சுக்கோ.
பொரி எடுத்துக் கொண்டு போகலாமா, கூடாதான்னு
தெரியல்லே. அரிசி மாதிரி இதுவும் நெல் சம்பந்தப்
பட்டதுதான்.பொரி கொண்டு போகக்கூடாதுன்னா….
மூட்டையை இங்கேயே போட்டுடறேன்.கவர்ன்மென்ட்
சட்டத்துக்கு நானும் உட்பட்டவன்தான். எனக்குன்னு
விதிவிலக்கு கிடையாது”-பெரியவாள்.

சுங்கச்சாவடி அலுவலர்கள்,அப்படியே பிரமித்துப் போய்
நின்றார்கள்.

குழந்தையைப் போல, என்ன எளிமை!
என்ன சட்ட பரிபாலனம்!

“சுவாமி, மூட்டைக் கணக்கில் அரிசி கடத்துகிறார்கள்.
அதைத் தடுப்பதற்காகத்தான் சுங்கச்சாவடி.  பொரி
எடுத்துக் கொண்டு போகத் தடை விதிக்கப்படவில்லை.
பெரியவா ரிக்‌ஷாவுக்குச் சோதனை கிடையாது”
என்று விநயமாகக் கூறினார்கள்.சுங்கத்துறை அலுவலர்கள்.

அதன் பின்னரே, யாத்திரை தொடர்ந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories