“நாம் தான் நில ஆக்ரமிப்பாளர்கள்!”–பெரியவா

10406745 859208287442471 99817598003990377 n - 2026

“நாம் தான் நில ஆக்ரமிப்பாளர்கள்!”–பெரியவா
(வராஹத்தையும் தெய்வமாகப் பார்த்த பெரியவா)

(பன்றிகள் வசித்துக் கொண்டிருந்த இடத்தில் முகாமுக்கு
கொட்டகை போட்டுக் கொடுத்த கிராம மக்கள்)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் (180)
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

ஆந்திர மாநிலத்தில் யாத்திரை.
ஒரு குக்கிராமத்தில் முகாம்.

பின் தங்கிய மக்களே வசித்து வந்த ஒரேயொரு தெரு.
எனவே, சற்றுத் தள்ளினாற்போல், கிராம மக்கள்,
ஒரு கீற்றுக் கொட்டகை போட்டுத் தந்திருந்தார்கள்.

கொட்டகை முழுவதும் பசுஞ்சாணி தெளித்து சுத்தம்
செய்திருந்தார்கள். ஒரு மூலையில் மகாப்பெரியவாளுக்குத்
தனி இடம். கொட்டகைக்கு வெளியே நின்று கிராமத்தாருடன்
சம்பாஷித்து விட்டு, சிப்பந்திகள் எல்லாரும் உள்ளே நுழைந்த
போது, ஒரு தாய்ப்பன்றி, ஏழெட்டுக் குட்டிகளுடன் உள்ளே
நுழைந்து விட்டது. வெகு சுவாதீனமாக!

சிப்பந்திகள் கற்களை வீசி எறிந்தார்கள்…..
…சூ…சூ…போ..போ.. என்று.. (பீஜாக்ஷர மந்திரங்கள் போல்
ஒற்றைச் சொற்களை இரைந்து சொன்னார்கள்)

ஊஹூம். பெரியதாக இருந்த தாய்ப்பன்றி அசையவேயில்லை;
பயப்படவேயில்லை..என்றால் குட்டிகளோ ஆனந்தமாக
அட்டகாசம் செய்துகொண்டு தாயின் மேல் விழுந்து புரண்டன.

பெரியவாள் சிப்பந்திகளை அழைத்தார்கள்.

“அவற்றை விரட்ட வேண்டாம். இந்த இடம் முன்னர் ஆடு,
பன்றிகள் வசித்துக் கொண்டிருந்த இடம்.அவற்றை விரட்டி
விட்டு, நமக்குக் கொட்டகை போட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.
நாம் தான் நில ஆக்ரமிப்பாளர்கள்! பகவான் ‘வராஹ அவதாரம்’
செய்து பூமியை ரட்சித்திருக்கிறார். அம்பாளின் அம்சமாக
வாராஹி தோன்றியிருக்கிறாள். தெய்வங்களைப் பூஜை
செய்கிற நாமே, அவற்றை விரட்டியடித்தால் எப்படி?
அதுகள், தானாகப் போகிற போது போகட்டும். பகவானைப்
பிரார்த்தனை பண்ணிக் கொண்டு இந்தப் பக்கமாக
உட்கார்ந்திருப்போம்.

கொஞ்ச நேரம் கழித்து, அந்த நாற்கால் பிராணிகள்
நாலுகால் பாய்ச்சலில் வெளியேறிவிட்டன.

மறுபடியும் அந்த இடத்தில் தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து
சிப்பந்திகள் அலுவல்களைத் தொடங்கினார்கள்.

பெரியவாள் கண்களை மூடிக் கொண்டு ஜபம் செய்து
கொண்டிருந்தார்கள். வராக ஸ்தோத்திரமாக இருக்குமோ?
வாராஹி மந்திரமாக இருக்குமோ?

சந்திரமௌலீஸ்வரருக்குத்தான் தெரியும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

Topics

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories